Himalaya In India: இயற்கையின் பரிசு..! இமயமலை இல்லாவிட்டால் இந்தியாவின் நிலை என்ன? நல்லதா? கெட்டதா? ஷாக் தகவல்கள்
Himalaya In India: இந்தியாவில் இமயமலை இல்லாவிட்டால் நம் நாட்டில் நிலை என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Himalaya In India: இந்தியாவில் இமயமலை இல்லாவிட்டால் நம் நாட்டிற்கு நல்லதா? கெட்டதா? என்பது குறித்தும் இந்த தொகுப்பில் அறியலாம்.
இமயமலை எனும் ”அழகியல்”
இந்தியாவின் வடக்கே பரந்து விரிந்து அமைந்துள்ள இமயமலை பூமியில் சொர்க்கம்' என்று குறிப்பிடப்படுகிறது. நாட்டின் இயற்கை அழகு மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் மட்டுமின்றி, புவியியலிலும், உயிரியல் மற்றும் கலாச்சாரத்திலும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. இமயமலைத் தொடர் மேற்கு-வடமேற்கிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 2400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேற்கில் நங்கா பர்பத் மற்றும் கிழக்கில் நம்சா பர்வா அதன் நங்கூரங்களாக உள்ளன. 50 முதல் 60 கிலோமீட்டர் அகலம் வரை நீண்டு, வடக்கு திசையில் திபெத்திய பீடபூமியிலிருந்து பிரிக்கிறது. இமயமலை தெற்கில் இந்தோ-கங்கை சமவெளிக்கு எதிராகவும், மேற்கில் 350 கிலோமீட்டர் அகலத்தில் இருந்து கிழக்கில் 150 கிலோமீட்டர் அகலம் வரையு பரவியுள்ளது. வடக்கு இமயமலை காரகோரம் மற்றும் இந்து குஷ் மலைகளால் சூழப்பட்டுள்ளது. சிந்து-சாங்போ தையல் ஒரு எல்லையாக செயல்படுகிறது.
இப்படி இந்தியாவின் பூகோல அமைப்பில் தவிர்க்க முடியாத முக்கியத்துவம் பெற்றுள்ள இமயமலை, ஒருவேளை நம் நாட்டில் அமைந்திருக்காவிட்டால் என்ன நடந்து இருக்கும்? இந்தியாவிற்கு நல்லதா? கெட்டதா? என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இமயமலை இல்லாவிட்டால்?
- இமயமலையானது பருவக் காற்றைத் தடுத்து, இந்தியாவிற்கு மழையைக் கொண்டுவருகிறது. இது கோடையில் இந்தியாவை குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் குளிர்ந்த காற்றைத் தடுக்கவும் செய்கிறது. எனவே, இந்தியாவில் இமயமலை இல்லை என்றால், நாட்டு மக்கள் கடும் வெப்பத்தை சந்திக்க வேண்டியது இருக்கும்.
- கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா போன்ற இந்தியாவின் முக்கிய நதிகள் இமயமலையில் இருந்து உருவாகின்றன. இந்த ஆறுகள் பாசனம், குடிநீர் மற்றும் மின்சார உற்பத்திக்கு முக்கியமானவை. இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் நதிகளுக்கு தண்ணீரை வழங்குவதால், அவை ”நீர் பாதுகாப்பின் ஆதாரம்” என குறிப்பிடப்படுகின்றன.
- இமயமலை இல்லை என்றால் இந்தியாவின் தட்பவெப்ப நிலையே முற்றிலும் மாறியிருக்கும். பருவக்காற்று இந்தியாவிற்குள் நுழைய முடிந்திருக்கும் மற்றும் நாட்டின் பெரும்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டிருக்கும்.
- இமயமலையில் இருந்து உற்பத்தியாகும் ஆறுகள் வறண்டு, இந்தியாவின் சமவெளிகளில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். ஆறுகள் வறண்டு கிடப்பதால், பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாய உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்படும்.
- இமயமலை இல்லாத நேரத்தில், பாலைவனப் புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால் இந்தியா அதிகம் பாதிக்கப்படும்
- இந்தோ-கங்கை சமவெளியில் இன்று இருக்கும் பரந்த வண்டல் மண் இருக்காது. விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும்.
- இமயமலை இந்தியாவிற்கு ஒரு இயற்கை அரணாக செயல்படுகிறது, இது படையெடுப்பாளர்கள் இந்தியாவிற்குள் நுழைவதை கடினமாக்குகிறது.
- மாசுபாடு போன்ற பிரச்னைகளால் இப்பகுதியின் பல்லுயிர் பெருக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும்
- இமயமலை சார்ந்த சுற்றுலா வருவாயை இந்தியா இழக்கும்


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

