மேலும் அறிய

West Bengal: மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்

நீதிபதி பாஜக தலைவர்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டியிருந்தார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

மேற்கு  வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். பாஜகவின் சுவந்து அதிகாரியிடம் அவர் தோல்வி அடைந்தது அக்கட்சியினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 

MS Dhoni Birthday: என்றும் தமிழ்நாட்டின் ‛தல’ மகன் தோனியின் ‛டாப் 7’ பெஸ்ட் இன்னிங்ஸ்!

இந்த நிலையில், நந்திகிராமில் பாஜக வெற்றி பெற்றதை எதிர்த்து கொல்கத்தா நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி வழக்கு தொடர்ந்தார். அத்துடன் இந்த வழக்கை, நீதிபதி கெளஷிக் சந்தா விசாரிக்க மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். நீதிபதி பாஜக தலைவர்களுடன் தொடர்பு என மம்தா பானர்ஜி தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டியிருந்தார். 

 

இந்த நிலையில், நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சித்ததாக  கூறி மம்தாவுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மம்தா பானர்ஜியின் இந்த செயல் திட்டமிட்ட நடவடிக்கை என்று கூறிய நீதிபதி கெளஷிக் சந்தா, அபராதத் தொகை மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்றும் கூறினார். அத்துடன், இந்த வழக்கில் இருந்து தானாக விலகிக்கொள்வதாகவும் நீதிபதி கெளஷிக் சந்தா அறிவித்தார். மாநில முதலமைச்சருக்கு நீதிமன்றம் அபாரதம் விதிக்கப்பட்டிருப்பது மேற்கு வங்கத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

 

கடந்த ஏப்ரல் மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக கெளஷிக் சந்தா நியமிக்கப்பட்டார். இதற்கு, அம்மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.முன்னதாக, நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய மம்தா பானர்ஜி, தான் ராஜ்நாத் சிங் முதல் சுஷ்மா சுவராஜ் வரை எத்தனையோ பாஜக தலைவர்களை பார்த்து இருப்பதாகவும், ஆனால், தற்போதுள்ள பாஜக மாறுப்பட்டது எனவும் கூறினார்.

Dilip Kumar Passes Away: பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமார் காலமானார்!

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget