மேலும் அறிய

Viral Video : புலிக்கு வழிவிடுவதற்காக, போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய காவலர்.. நெகிழ்ச்சி வீடியோ

மனித விலங்கு மோதல்கள் அதிகரித்து வரும் காலகட்டத்தில் மனிதர்களையும் காக்க வேண்டும் வனவிலங்குகளையும் காக்க வேண்டும். அரசுக்கு இது மிகப்பெரிய சவால். அதற்காக அரசு தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

புலிக்கு வழிவிட காவலர் ஒருவர் போக்குவரத்தை ஒழுங்கப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மனித விலங்கு மோதல்கள் அதிகரித்து வரும் காலகட்டத்தில் மனிதர்களையும் காக்க வேண்டும் வனவிலங்குகளையும் காக்க வேண்டும். அரசுக்கு இது மிகப்பெரிய சவால். அதற்காக அரசு தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

மனித விலங்கு மோதல்களை ஐந்து வகைப்படுத்துகின்றனர். காடுகளையும் காட்டோர பகுதிகளையும் வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் மக்கள் அந்த வாழ்க்கையில் விலங்குகளால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள். விலங்குகளை கடத்தி விற்பனை செய்பவர்கள். மூன்றாவது, விலங்குகள் சாலை, ரயில் பாதைகளில் சிக்கி உயிரிழத்தல். நான்காவது இயற்கை சுற்றுலா (ஈகோ டூரிஸம்) என்ற பெயரில் இயற்கைக்கும் வனவிலங்குகளுக்கும் ஊறு விளைவித்தல். கடைசியாக வனம் அழிக்கப்படுவதால் ஊருக்கும் நுழையும் வனவிலங்குகள். இந்த ஐந்து பிரச்சனைகளும் தான விலங்கு மனித மோதலில் முக்கியமானவை.

வைரல் வீடியோ:

இந்நிலையில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. அதில் புலி ஒன்று சாலையைக் கடக்கிறது. அப்போது இருபுறமும் வாகனங்கள் வர போக்குவரத்துக் காவலர் ஒருவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிறார். புலி பத்திரமாக கடந்து செல்லட்டும் அனைவருமே நிற்கவும் என்று சமிக்ஞை காட்டுகிறார். அதையும் மீறி சிலர் புலியைப் பார்த்ததும் பரவசமடைந்து வாகனத்தில் இருந்து இறங்கி புகைப்படம் எடுக்க முயல்கின்றனர்.

ஆனால் அவர்களை எல்லாம் சைகையாலேயே கண்டித்து அவரவர் வாகனத்தில் அமரச் செய்கிறார். இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி ப்ரவீன் காஸ்வான் ஐஎஃப்எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த ட்வீட்டிற்கு புலிக்கு மட்டுமே பச்சைக் கொடி என்று தலைப்பிட்டுள்ளார்.

ப்ரவீன் கஸ்வான் ஐஎஃப்எஸ், இந்த ட்வீட் எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் சிலர் இது மகாராஷ்டிராவில் எடுக்கப்பட்டது எனக் கூறியுள்ளனர். இந்த வீடியோவை ப்ரவீன் கஸ்வான் ஐஎஃப்எஸ், பகிர்ந்ததில் இருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் புலிகள்:

நம் நாட்டில்தான் உலகின் 75 சதவிகிதத்திற்கும் அதிகமான புலிகள் வாழ்கின்றன. இந்தியாவில் 18 மாநிலங்களில் மொத்தம் 53 புலிகள் காப்பகங்கள் உள்ளன. தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை என மொத்தம் 5 புலிகள் காப்பகங்கள் உள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 2,967 புலிகள் இருப்பதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டது.

1900களில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 40 ஆயிரமாக மதிப்பிடப்பட்டிருந்தது. பின்னாட்களில் புலிகள், மெதுவாக தங்களின் வாழ்விடத்தில் குறைந்தபட்சம் 93% அளவு வரை இழக்கத் தொடங்கின. 1972-ல் நடத்தப்பட்ட முதலாவது அகில இந்தியப் புலிகள் தொகைக் கணக்கெடுப்பில் வெறும் 1,872 புலிகளே மிஞ்சி இருந்தது தெரியவந்தது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
Embed widget