மேலும் அறிய

அம்பேத்கருக்கு எப்போதோ பாரத ரத்னா கொடுத்திருக்கனும்: கொளுத்திப்போட்ட குடியரசு துணை தலைவர் தன்கர்

Vivekananda: நாம் கனவு காணாத, கற்பனை செய்யாத அளவுக்கு, இந்தியா மாறிவிட்டது. இந்தியா இன்று உலகிற்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.

ஹரியானா மாநிலம் குர்கானில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் சங்கத்தின் 4-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்று, விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி அவர் குறித்தும், அம்பேத்கர் குறித்தும் உரை நிகழ்த்தினார்.

”5வது மிகப்பெரிய பொருளாதாரம்”

குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்ததாவது, இளைஞர்களே, நீங்கள் வளர்ச்சியின் இயந்திரங்கள். நாடு ஒரு வளர்ச்சி அடைந்த தேசமாக இருக்க வேண்டும் என்றால், 2047-ல் ஒரு வளர்ச்சி நாடாக இருக்க வேண்டும் என்றால், சவால்களைக் கடக்க வேண்டும். நாம் ஏற்கனவே ஐந்தாவது பெரிய உலகப் பொருளாதாரமாக இருக்கிறோம். மூன்றாவது இடத்தை நோக்கி செல்கிறோம். ஆனால் வருமானம் எட்டு மடங்கு உயர வேண்டும். அது ஒரு பெரிய சவால். மக்கள் 10 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை அனுபவித்துள்ளனர். 500 மில்லியன் மக்கள் வங்கிச் சேவையில் இணைந்துள்ளனர். 170 மில்லியன் பேருக்கு எரிவாயு இணைப்புகள் கிடைத்துள்ளன. இப்போது அவர்களின் எதிர்பார்ப்பு அதிகம்.    

 

”இந்தியா மாறி வருகிறது.”

நமது இந்தியா மாறி வருகிறது. நாம் கனவு காணாத, கற்பனை செய்யாத அளவுக்கு நமது இந்தியா மாறிவிட்டது. இந்தியா இன்று உலகிற்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவைப் போல உலகில் வேறு எந்த நாடும் வேகமாக வளர்ந்ததில்லை.  எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும். நீங்கள் சிறப்பாக சிந்திக்க வேண்டும்.

இன்று ஒரு சிறந்த நாள். விவேகானந்தர் என்ன சொன்னார்? அவர் சிகாகோவில் இந்தியாவின் உள்ளடக்கத்துடன் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் நகர்த்தினார்.  அவரிடமிருந்து சில மேற்கோள்களை நான் தருகிறேன்.

ஒன்று. "எழுந்திரு, விழித்திரு, இலக்கை அடையும் வரை ஓயாதே." அது உங்கள் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.

Also Read: Swami Vivekananda: ”விவேகானந்தர் கனவு இதுதான்”: இதை நிறைவேற்ற உறுதியேற்றுள்ளோம்- பிரதமர் மோடி

”அம்பேத்கர் - பாரத ரத்னா”

சில நேரங்களில் அங்கீகாரம் தாமதமாக வருகிறது, சில நேரங்களில் நீங்கள் சென்ற பிறகு மக்கள் உங்கள் மதிப்பை அங்கீகரிக்கிறார்கள். உலகின் மிகவும் புகழ்பெற்ற நபர்கள் சிலருக்கு மரணத்திற்குப் பிறகு அங்கீகாரம் கிடைத்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

நம் நாட்டிலும் நாம் பல முறை தாமதிக்கிறோம்.  இப்போது காலம் மாறிவிட்டது. நீங்கள் கடினமாக உழைத்தால் உங்கள் காலத்தில் அங்கீகாரம் கிடைக்கும்.  உங்களை நீங்களே நம்புங்கள், எந்த உயிருள்ள மனிதனும் நல்லொழுக்கத்தைக் காணாவிட்டால்  மரியாதையைப் பெற முடியாது என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.

அப்போது பேசிய தன்கர்,டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கு எப்போதோ பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே, காங்கிரசு அரசு அம்பேத்கருக்கு பாரத ரத்னா கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு வைத்து வரும் நிலையில், துணை குடியரசுத் தலைவரின் பேச்சானது , பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TVK MDU Conference: முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
Trump Warns Again: 24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' -  அன்புமணி ராமதாஸ் காட்டம்
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' - அன்புமணி ராமதாஸ் காட்டம்
Russia Backs India: நண்பேன்டா.!! இந்தியாவுக்காக களமிறங்கிய ரஷ்யா; அமெரிக்க வரி மிரட்டல் சட்டவிரோதமானது என சாடல்
நண்பேன்டா.!! இந்தியாவுக்காக களமிறங்கிய ரஷ்யா; அமெரிக்க வரி மிரட்டல் சட்டவிரோதமானது என சாடல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK MDU Conference: முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
Trump Warns Again: 24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' -  அன்புமணி ராமதாஸ் காட்டம்
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' - அன்புமணி ராமதாஸ் காட்டம்
Russia Backs India: நண்பேன்டா.!! இந்தியாவுக்காக களமிறங்கிய ரஷ்யா; அமெரிக்க வரி மிரட்டல் சட்டவிரோதமானது என சாடல்
நண்பேன்டா.!! இந்தியாவுக்காக களமிறங்கிய ரஷ்யா; அமெரிக்க வரி மிரட்டல் சட்டவிரோதமானது என சாடல்
Nadda Vs Karge: “அடுத்த 40 வருடங்களுக்கு நீங்கள் எதிர்க்கட்சிதான்“ - நாடாளுமன்றத்தில் காங்கிரஸை வெளுத்துவிட்ட JP நட்டா
“அடுத்த 40 வருடங்களுக்கு நீங்கள் எதிர்க்கட்சிதான்“ - நாடாளுமன்றத்தில் காங்கிரஸை வெளுத்துவிட்ட JP நட்டா
PB Balaji JLR CEO: ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய CEO நியமனம்; யார் இந்த தமிழர் P.B. பாலாஜி.?
ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய CEO நியமனம்; யார் இந்த தமிழர் P.B. பாலாஜி.?
School Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களுக்கு? என்ன காரணம்?
School Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களுக்கு? என்ன காரணம்?
Chennai Power Shutdown: சென்னையில ஆகஸ்ட் 6-ம் தேதி புதனன்று மின் தடை ஏற்படப் போகும் இடங்கள் எவை தெரியுமா.?
சென்னையில ஆகஸ்ட் 6-ம் தேதி புதனன்று மின் தடை ஏற்படப் போகும் இடங்கள் எவை தெரியுமா.?
Embed widget