மேலும் அறிய

அம்பேத்கருக்கு எப்போதோ பாரத ரத்னா கொடுத்திருக்கனும்: கொளுத்திப்போட்ட குடியரசு துணை தலைவர் தன்கர்

Vivekananda: நாம் கனவு காணாத, கற்பனை செய்யாத அளவுக்கு, இந்தியா மாறிவிட்டது. இந்தியா இன்று உலகிற்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.

ஹரியானா மாநிலம் குர்கானில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் சங்கத்தின் 4-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்று, விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி அவர் குறித்தும், அம்பேத்கர் குறித்தும் உரை நிகழ்த்தினார்.

”5வது மிகப்பெரிய பொருளாதாரம்”

குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்ததாவது, இளைஞர்களே, நீங்கள் வளர்ச்சியின் இயந்திரங்கள். நாடு ஒரு வளர்ச்சி அடைந்த தேசமாக இருக்க வேண்டும் என்றால், 2047-ல் ஒரு வளர்ச்சி நாடாக இருக்க வேண்டும் என்றால், சவால்களைக் கடக்க வேண்டும். நாம் ஏற்கனவே ஐந்தாவது பெரிய உலகப் பொருளாதாரமாக இருக்கிறோம். மூன்றாவது இடத்தை நோக்கி செல்கிறோம். ஆனால் வருமானம் எட்டு மடங்கு உயர வேண்டும். அது ஒரு பெரிய சவால். மக்கள் 10 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை அனுபவித்துள்ளனர். 500 மில்லியன் மக்கள் வங்கிச் சேவையில் இணைந்துள்ளனர். 170 மில்லியன் பேருக்கு எரிவாயு இணைப்புகள் கிடைத்துள்ளன. இப்போது அவர்களின் எதிர்பார்ப்பு அதிகம்.    

 

”இந்தியா மாறி வருகிறது.”

நமது இந்தியா மாறி வருகிறது. நாம் கனவு காணாத, கற்பனை செய்யாத அளவுக்கு நமது இந்தியா மாறிவிட்டது. இந்தியா இன்று உலகிற்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவைப் போல உலகில் வேறு எந்த நாடும் வேகமாக வளர்ந்ததில்லை.  எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும். நீங்கள் சிறப்பாக சிந்திக்க வேண்டும்.

இன்று ஒரு சிறந்த நாள். விவேகானந்தர் என்ன சொன்னார்? அவர் சிகாகோவில் இந்தியாவின் உள்ளடக்கத்துடன் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் நகர்த்தினார்.  அவரிடமிருந்து சில மேற்கோள்களை நான் தருகிறேன்.

ஒன்று. "எழுந்திரு, விழித்திரு, இலக்கை அடையும் வரை ஓயாதே." அது உங்கள் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.

Also Read: Swami Vivekananda: ”விவேகானந்தர் கனவு இதுதான்”: இதை நிறைவேற்ற உறுதியேற்றுள்ளோம்- பிரதமர் மோடி

”அம்பேத்கர் - பாரத ரத்னா”

சில நேரங்களில் அங்கீகாரம் தாமதமாக வருகிறது, சில நேரங்களில் நீங்கள் சென்ற பிறகு மக்கள் உங்கள் மதிப்பை அங்கீகரிக்கிறார்கள். உலகின் மிகவும் புகழ்பெற்ற நபர்கள் சிலருக்கு மரணத்திற்குப் பிறகு அங்கீகாரம் கிடைத்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

நம் நாட்டிலும் நாம் பல முறை தாமதிக்கிறோம்.  இப்போது காலம் மாறிவிட்டது. நீங்கள் கடினமாக உழைத்தால் உங்கள் காலத்தில் அங்கீகாரம் கிடைக்கும்.  உங்களை நீங்களே நம்புங்கள், எந்த உயிருள்ள மனிதனும் நல்லொழுக்கத்தைக் காணாவிட்டால்  மரியாதையைப் பெற முடியாது என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.

அப்போது பேசிய தன்கர்,டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கு எப்போதோ பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே, காங்கிரசு அரசு அம்பேத்கருக்கு பாரத ரத்னா கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு வைத்து வரும் நிலையில், துணை குடியரசுத் தலைவரின் பேச்சானது , பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Embed widget