மேலும் அறிய

Uttarakhand Tunnel Rescue LIVE: மாலைக்குள் 41 பேரும் மீட்கப்படுவார்களா? எப்போது தொடங்குகிறது டிரில்லிங் பணி?

Uttarakhand Tunnel Rescue Ops Live: உத்தர்காசி சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களின் மீட்பு நடவடிக்கை குறித்த அனைத்து சமீபத்திய அறிவிப்புகளுக்கும் இந்த பக்கத்தைப் பின்தொடரவும்.

LIVE

Key Events
Uttarakhand Tunnel Rescue LIVE: மாலைக்குள் 41 பேரும் மீட்கப்படுவார்களா?  எப்போது தொடங்குகிறது டிரில்லிங் பணி?

Background

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் நடைபெற்று கொண்டிருந்த சுரங்கப்பாதை பணியில் எதிர்பாராத விதமாக கடந்த நவம்பர் 12ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு சுரங்கப்பாதையில் சில பகுதிகள் இடிந்து விழுந்தன. அதில் பணியாற்றிய 41 தொழிலாளர்களும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.  

சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் சிக்கிய 41 தொழிலாளர்களை பத்திரமாக மீட்கும் பணிகள் வியாழக்கிழமையான இன்று 12-வது நாளாக நீடித்து வருகிறது. செவ்வாய்க்கிழமையான நேற்று முன் தினம் ஆறு அங்குல அகலமுள்ள புதிய குழாய் வழியாக எண்டோஸ்கோபி கேமாரா அனுப்பி அங்கு சிக்கிய தொழிலாளர்களின் முதல் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டன. இதனால் தொழிலாளர்கள் உறவினர்கள் மத்தியில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. மேலும் அவர்களுக்கு ஆக்சிஜனும் உணவும் அனுப்பப்பட்டு வருகிறது.  

அந்த வீடியோவில் தொழிலாளர்கள் தங்கள் மஞ்சள் மற்றும் வெள்ளை ஹெல்மெட் அணிந்து குழாய் மூலம் தங்களுக்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு ஒருவருக்கொருவர் பேசுவதைக் காண முடிகிறது. 

ஒரு திரையில் அவர்களைப் பார்க்கும் அதிகாரிகள் லென்ஸை சுத்தம் செய்யும்படி அறிவுறுத்துவதைக் கேட்க முடிந்தது. தொழிலாளர்கள் கேமராவுக்கு அருகில் வந்து வாக்கி-டாக்கிகளைப் பயன்படுத்தச் சொன்னார்கள். 

தொழிலாளர்களின் உறவினர்கள் அனைவரும் சுரங்கத்திற்கு அருகே முகாமிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்கிழமை பேசி முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். "அனைத்து தொழிலாளர்களையும் பாதுகாப்பாக மீட்பதே எங்கள் முதன்மையான முன்னுரிமை என்று பிரதமர் கூறினார்," என்று எக்ஸ் தளத்தில் தமி பதிவிட்டிருந்தார்.

புதிய குழாய் மூலம் தொழிலாளர்களுடன் தொடர்பு கொண்ட ஒரு மருத்துவர், அவர்களில் சிலர் சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு இருப்பதாக புகார் கூறியதாக பிடிஐ அறிக்கை தெரிவித்துள்ளது. அவர்களுக்கு எலக்ட்ரோலைட் பவுடர் பாக்கெட்டுகள், மல்டிவைட்டமின் மாத்திரைகள் மற்றும் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிகிறது. டெல்லியில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஹஸ்னைன், தொழிலாளர்களைக் காப்பாற்ற ஐந்து முனைகளில் ஒரே நேரத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். விரைவில் இந்த மீட்புப்பணி நிறைவடையும் எனத் தெரிகிறது. 

09:18 AM (IST)  •  24 Nov 2023

பிரதமரின் முன்னாள் ஆலோசகர் கூறுவது என்ன?

”காலை 11-11:30 மணிக்குள் துளையிடும் பணியை தொடங்குவோம் என்று நம்புகிறோம். அடுத்த 5 மீட்டருக்கு எந்த உலோகத் தடையும் இல்லை என்று நிலத்தடி ஊடுருவல் ரேடார் ஆய்வு காட்டுகிறது,என பிரதமர் அலுவலகத்தின் முன்னாள் ஆலோசகர் பாஸ்கர் குல்பே, உத்தரகாசி பகுதியில் ஆய்வு நடத்திய பிறகு தெரிவித்துள்ளார்.

09:14 AM (IST)  •  24 Nov 2023

”துளையிடும் பணி எளிதாகும்”

”துளையிடும் ஆகர் எந்திரம் நன்றாக செயல்படுகிறது. அடுத்த 5 மீட்டர்  எந்த உலோக அடைப்புகளும்  இல்லாததால் எளிதாக துளையிட முடியும்” என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

09:13 AM (IST)  •  24 Nov 2023

11.30 மணிக்கு தொடங்குகிறது டிரில்லிங் பணி..

உத்தராகண்ட் சுரங்கப்பாதையில்  காலை 11.30 மணிக்கு  டிரில்லிங் பணி  மீண்டும் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துளையிடும் இயந்திரத்தின்  கான்க்ரீட் அடித்தளம் அமைக்கும் பணி நிறைவு பெற்றதை  தொடர்ந்து மீட்பு பணி தீவிரம். இதன் காரணமாக உள்ளே சிக்கியுள்ள 41  தொழிலாளர்களும் இன்று மாலைக்குள் மீட்கப்படுவார்கள் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

07:24 AM (IST)  •  24 Nov 2023

சுரங்கப்பாதைக்கு வெளியே இருந்து சமீபத்திய காட்சிகள்

ஆஜர் துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் தோண்டும் பணி நேற்று நிறுத்தப்பட்டது. இதுவரை சில்க்யாரா சுரங்கப்பாதையில் மீட்புப் படையினர் 46.8 மீட்டர் தூரம் வரை துளையிட்டுள்ளனர்.

21:04 PM (IST)  •  23 Nov 2023

Uttarakhand Tunnel Rescue LIVE: துளையிடும் இயந்திரத்தில் கோளாறு.. மீட்பு பணி தற்காலிக நிறுத்தம்..!

துளையிடும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை, சில்கியாரா சுரங்கப்பாதையில் 46.8 மீட்டர் தூரம் வரை மீட்புப் படையினர் துளையிட்டுள்ளனர்.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget