Uttarakhand Tunnel Rescue LIVE: மாலைக்குள் 41 பேரும் மீட்கப்படுவார்களா? எப்போது தொடங்குகிறது டிரில்லிங் பணி?
Uttarakhand Tunnel Rescue Ops Live: உத்தர்காசி சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களின் மீட்பு நடவடிக்கை குறித்த அனைத்து சமீபத்திய அறிவிப்புகளுக்கும் இந்த பக்கத்தைப் பின்தொடரவும்.
LIVE
Background
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் நடைபெற்று கொண்டிருந்த சுரங்கப்பாதை பணியில் எதிர்பாராத விதமாக கடந்த நவம்பர் 12ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு சுரங்கப்பாதையில் சில பகுதிகள் இடிந்து விழுந்தன. அதில் பணியாற்றிய 41 தொழிலாளர்களும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் சிக்கிய 41 தொழிலாளர்களை பத்திரமாக மீட்கும் பணிகள் வியாழக்கிழமையான இன்று 12-வது நாளாக நீடித்து வருகிறது. செவ்வாய்க்கிழமையான நேற்று முன் தினம் ஆறு அங்குல அகலமுள்ள புதிய குழாய் வழியாக எண்டோஸ்கோபி கேமாரா அனுப்பி அங்கு சிக்கிய தொழிலாளர்களின் முதல் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டன. இதனால் தொழிலாளர்கள் உறவினர்கள் மத்தியில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. மேலும் அவர்களுக்கு ஆக்சிஜனும் உணவும் அனுப்பப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில் தொழிலாளர்கள் தங்கள் மஞ்சள் மற்றும் வெள்ளை ஹெல்மெட் அணிந்து குழாய் மூலம் தங்களுக்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு ஒருவருக்கொருவர் பேசுவதைக் காண முடிகிறது.
ஒரு திரையில் அவர்களைப் பார்க்கும் அதிகாரிகள் லென்ஸை சுத்தம் செய்யும்படி அறிவுறுத்துவதைக் கேட்க முடிந்தது. தொழிலாளர்கள் கேமராவுக்கு அருகில் வந்து வாக்கி-டாக்கிகளைப் பயன்படுத்தச் சொன்னார்கள்.
தொழிலாளர்களின் உறவினர்கள் அனைவரும் சுரங்கத்திற்கு அருகே முகாமிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்கிழமை பேசி முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். "அனைத்து தொழிலாளர்களையும் பாதுகாப்பாக மீட்பதே எங்கள் முதன்மையான முன்னுரிமை என்று பிரதமர் கூறினார்," என்று எக்ஸ் தளத்தில் தமி பதிவிட்டிருந்தார்.
புதிய குழாய் மூலம் தொழிலாளர்களுடன் தொடர்பு கொண்ட ஒரு மருத்துவர், அவர்களில் சிலர் சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு இருப்பதாக புகார் கூறியதாக பிடிஐ அறிக்கை தெரிவித்துள்ளது. அவர்களுக்கு எலக்ட்ரோலைட் பவுடர் பாக்கெட்டுகள், மல்டிவைட்டமின் மாத்திரைகள் மற்றும் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிகிறது. டெல்லியில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஹஸ்னைன், தொழிலாளர்களைக் காப்பாற்ற ஐந்து முனைகளில் ஒரே நேரத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். விரைவில் இந்த மீட்புப்பணி நிறைவடையும் எனத் தெரிகிறது.
பிரதமரின் முன்னாள் ஆலோசகர் கூறுவது என்ன?
”காலை 11-11:30 மணிக்குள் துளையிடும் பணியை தொடங்குவோம் என்று நம்புகிறோம். அடுத்த 5 மீட்டருக்கு எந்த உலோகத் தடையும் இல்லை என்று நிலத்தடி ஊடுருவல் ரேடார் ஆய்வு காட்டுகிறது,என பிரதமர் அலுவலகத்தின் முன்னாள் ஆலோசகர் பாஸ்கர் குல்பே, உத்தரகாசி பகுதியில் ஆய்வு நடத்திய பிறகு தெரிவித்துள்ளார்.
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | Former advisor to PMO, Bhaskar Khulbe says, "We hope that we will start the drilling by 11-11:30 am. Ground penetration radar study has shown that there is no metallic obstruction in the next 5 metres," pic.twitter.com/pKVUq5k2QU
— ANI (@ANI) November 24, 2023
”துளையிடும் பணி எளிதாகும்”
”துளையிடும் ஆகர் எந்திரம் நன்றாக செயல்படுகிறது. அடுத்த 5 மீட்டர் எந்த உலோக அடைப்புகளும் இல்லாததால் எளிதாக துளையிட முடியும்” என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
11.30 மணிக்கு தொடங்குகிறது டிரில்லிங் பணி..
உத்தராகண்ட் சுரங்கப்பாதையில் காலை 11.30 மணிக்கு டிரில்லிங் பணி மீண்டும் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துளையிடும் இயந்திரத்தின் கான்க்ரீட் அடித்தளம் அமைக்கும் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து மீட்பு பணி தீவிரம். இதன் காரணமாக உள்ளே சிக்கியுள்ள 41 தொழிலாளர்களும் இன்று மாலைக்குள் மீட்கப்படுவார்கள் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சுரங்கப்பாதைக்கு வெளியே இருந்து சமீபத்திய காட்சிகள்
ஆஜர் துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் தோண்டும் பணி நேற்று நிறுத்தப்பட்டது. இதுவரை சில்க்யாரா சுரங்கப்பாதையில் மீட்புப் படையினர் 46.8 மீட்டர் தூரம் வரை துளையிட்டுள்ளனர்.
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | Latest visuals from outside the tunnel
— ANI (@ANI) November 24, 2023
Drilling work was halted yesterday after a technical snag in the Auger drilling machine. Till now, rescuers have drilled up to 46.8 meters in the Silkyara tunnel pic.twitter.com/OVpFR5og7R
Uttarakhand Tunnel Rescue LIVE: துளையிடும் இயந்திரத்தில் கோளாறு.. மீட்பு பணி தற்காலிக நிறுத்தம்..!
துளையிடும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை, சில்கியாரா சுரங்கப்பாதையில் 46.8 மீட்டர் தூரம் வரை மீட்புப் படையினர் துளையிட்டுள்ளனர்.
Uttarkashi tunnel rescue | Drilling work halted after technical snag in the Auger drilling machine. Till now, rescuers have drilled up to 46.8 meters in the Silkyara tunnel
— ANI (@ANI) November 23, 2023
(Visual from earlier today) pic.twitter.com/6wGEZHe4HS