மேலும் அறிய

எங்கடா பன்னீரை காணோம்? திருமண பந்தியில் கடுப்பான இளைஞர்.. விருந்தினர்கள் மீது பஸ்ஸை ஏற்றிய கொடூரம்

கல்யாண பந்தியில் உணவினை முறையாக பரிமாறவில்லை என்றால் வெட்டுக்குத்து சம்பவங்கள் நடப்பது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக, தென் தமிழகத்தில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்திருப்பதை கேட்டிருக்கலாம். அப்படி ஒரு சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

திருமண பந்தியில் பன்னீர் வைக்காத காரணத்தால் கடுப்பான இளைஞர் ஒருவர், கல்யாண மண்டபத்தில் மினி பஸ்ஸை மோதி திருமணத்திற்கு வந்தவர்களை காயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு நிற்காமல், 3 லட்சம் மதிப்பிலான பொருள்களை அவர் சேதப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

கல்யாண பந்தியால் வந்த வினை:

கல்யாண பந்தியில் உணவினை முறையாக பரிமாறவில்லை என்றால் வெட்டுக்குத்து சம்பவங்கள் நடப்பது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக, தென் தமிழகத்தில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்திருப்பதை கேட்டிருக்கலாம். அப்படி ஒரு சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

ஹமித்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்நாத் யாதவ். இவரது மகளின் திருமணம் முகல்சராய் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த சனிக்கிழமை மாலை மாப்பிள்ளை வரவேற்பு நடந்தது. எல்லாமே சுமூகமாக நடந்து வந்தது.

மண்டபத்தில் காரை மோதிய இளைஞர்:

அப்போதுதான், தர்மேந்திர யாதவ் என்பவர் திருமணத்திற்கு வந்துள்ளார். நேரடியாக பந்தி பரிமாறப்படும் இடத்திற்கு சென்று சாப்பிட அமர்ந்துள்ளார். அவருக்கு வைக்கப்பட்ட இலையில் பன்னீர் வைக்காத காரணத்தால் அவருக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து ராஜ்நாத் யாதவ் விரிவாக பேசுகையில், "தர்மேந்திர யாதவ் திருமணத்திற்கு வந்து சாப்பிட ஆரம்பித்தார். பனீர் கேட்டார். அது கிடைக்காததால், கோபமடைந்து திருமண விழா நடைபெறும் இடத்திற்கு நடுவே பேருந்தை கொண்டு வந்து மோதினார். இதில், எட்டு பேர் காயமடைந்தனர். ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

நினைத்து பார்க்க முடியாத செயலைச் செய்துள்ளார். திருமண விருந்தினர்கள் மீது டெம்போ டிராவலரை மோதினார். என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. உடனே பேருந்தில் மண்டபத்தை விட்டு ஓடிவிட்டார். இதனால், மணமகனின் தந்தை மற்றும் மணமகளின் மாமா உட்பட பலர் காயமடைந்தனர். அவர்கள் வாரணாசியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.

சம்பவத்திற்குப் பிறகு, மணமகன் தரப்பு அந்த நபருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படும் வரை திருமணம் நடைபெறாது என்று கூறிவிட்டனர். மணமகள் தரப்பு குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்த பின்னரே, மறுநாள் மதியம் 12 மணியளவில் திருமண விழா முடிவுக்கு வந்தது.

இதையும் படிக்க: Padma Awards 2025: 'பத்ம ஸ்ரீ விருது பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின்! விருது விழா ஹைலைட்ஸ்!

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
Embed widget