Banda Boat Accident: யமுனா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு, 40 பேர் மாயம்
Banda Boat Accident: யமுனா ஆற்றில் செயலிழந்த படகு கவிழ்ந்த விபத்தில் 40 பேர் மாயமாகியுள்ளனர்.

யமுனா ஆற்றில் செயலிழந்த படகு கவிழ்ந்த விபத்தில் 40 பேர் மாயமாகியுள்ளனர். தற்போது வரை 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
உத்திரபிரதேச மாநில, பாண்டா மாவட்டத்தில் உள்ள யமுனா ஆற்றில், பதெபூரில் இருந்து மர்கா கிராமத்திற்கு படகில் சென்று கொண்டு இருந்தபோது படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதில் எட்டு பேர் நீந்தி கரையேறியுள்ளனர். நான்கு பேர் இதுவரை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

