மேலும் அறிய

பெண்களில் 11.8 சதவிகிதமாக அதிகரித்த வேலை- வாய்ப்பின்மை- தேசிய புள்ளியியல் தகவல்!

2020ம் ஆண்டு ஜனவரி மார்ச் மாதங்களில் இதே புள்ளியியல் 9.1 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதம் ஜனவரி - மார்ச் மாதங்களில் 9.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2020ம் ஆண்டு ஜனவரி மார்ச் மாதங்களில் இதே புள்ளியியல் 9.1 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக 15 வயதுக்கு மேற்பட்ட நகர்ப்புறப் பெண்களில் கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் 10.6 என இருந்த நிலையில் தற்போது 11.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2020 அக்டோபர்-டிசம்பர் காலக்கட்டத்தில் இது 13.1 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இதுவே ஆண்களுக்கான வேலைவாய்ப்பு பற்றாக்குறை 8.6 சதவிகிதம் என்கிற புள்ளியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் உள்ளது. 

15 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களில் வேலை பங்கெடுப்பு விகிதம் நகர்ப்புறங்களில் 47.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 48.1 சதவிகிதமாக இருந்தது.  


பெண்களில் 11.8 சதவிகிதமாக அதிகரித்த வேலை- வாய்ப்பின்மை- தேசிய புள்ளியியல் தகவல்!

தொடரும் அதிர்ச்சி புள்ளிவிவரம்:

வேலை வாய்ப்பின்மை ஒரு பக்கம் இருக்க வேலையிழந்தோர் எண்ணிக்கையும் சற்றும் சளைத்ததாக இல்லை. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 15 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் அண்மையில் வெளியானது. இந்தியப் பொருளாதாக் கண்காணிப்பு மையமான (Centre for Monitoring Indian Economy) இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஜூலை மாதத்தில் 6.95% ஆக இருந்த வேலைவாய்ப்பினை ஆகஸ்ட் மாதத்தில் 8.32% ஆக அதிகரித்துள்ளது. நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை ஜூலை மாதத்தில் 8.3% ஆக இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் 9.78% ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த மே, ஜூன் மாதங்களை ஒப்பிடும்போது இது சற்றே குறைவு. மே மாதத்தில் 14.73%, ஜூன் மாதத்தில் 10.07% என்ற விகிதத்தில் வேலைவாய்ப்பின்மை இருந்தது. கிராமப்புற வேலைவாய்ப்பின்மையைப் பொறுத்தவரையில், ஜூலை மாதத்தில் 6.34% சதவீதமாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் 7.64% ஆக அதிகரித்துள்ளது. இது 1.3% அதிகமாகும்.

வேலைவாய்ப்பின்மை குறைந்தாலும் தொழிலாளர்கள் பங்களிப்பு ஆகஸ்ட் மாதத்தில் கணிசமான அளவு உயர்ந்தது. இந்தியா கடந்த சில நாட்களாகவே வேலைவாய்ப்பு ரீதியாக கடுமையான சூழலை சந்தித்து வந்தது. கொரோனா பெருந்தொற்று சூழல் அந்தச் சூழலை மேலும் கடினமாக்கியது. நாடு முழுவதும் ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களில் இப்போதும் வேலைவாய்ப்பின்மை இரட்டை இலக்கத்தில் உள்ளது. ஜூலை மாதத்தில் 1.5 கோடி பேர் விவசாயத் துறையில் வேலையிழந்தனர். இதனால் ஆகஸ்ட் மாதத்தில் வேலையிழப்பு கிராமப்புறப் பகுதியில் அதிகமாக உள்ளது. பொருளாதார சரிவில் இருந்து தேசம் மீளும் வரை, விவசாயத் தொழிலில் உள்ள மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Embed widget