மேலும் அறிய

India-Canada row: ”இந்தியா யானை, கனடா வெறும் எறும்பு” - எச்சரிக்கும் அமெரிக்காவின் பென்டகனின் முன்னாள் அதிகாரி

நட்பு நாடு என வந்தால் கனடாவை காட்டிலும், இந்தியாவிற்கே அமெரிக்கா முன்னுரிமை அளிக்கும் என, பெண்டகனின் முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இருநாடுகளுக்கு இடையேயான மோதலில் கனடா எறும்பை போன்றது எனவும், இந்தியா யானையை போன்றது என்றும் அமெரிக்காவில் உள்ள பென்டகானின் முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியா - கனடா பிரச்னை:

காலிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா - கனடா இடையேயான மோதல் மேலும் மேலும் வலுப்பெற்று வருகிறது. இருநாடுகளுக்கு இடையேயான பயணத்திற்கான விசாவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, தூதரக அதிகாரிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனிடையே, கனடா தீவிரவாதிகளின் புகலிடமாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. கனடா அரசோ,  குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க ஒத்துழைப்பு கொடுங்கள் என இந்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இது இருநாடுகளுக்கு இடையேயான பிரச்னை என்பதையும் தாண்டி சர்வதேச அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையாக மாறியுள்ளது.

இந்தியா ”யானை” கனடா ”எறும்பு” :

இந்நிலையில் தான் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான பெண்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் என்பவர் தெரிவித்துள்ள கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் இந்தியாவை விட கனடாவுக்கே பெரிய ஆபத்தை இட்டுச் சென்றுள்ளது.  கனடா மற்றும் டெல்லியில் ஏதேனும் ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமானால், இந்தியாவையே அமெரிக்கா தேர்வு செய்யும்.  பல்வேறு விவகாரங்களில் கனடாவை காட்டிலும், இந்தியா தான் அமெரிக்காவிற்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் இந்தியாவிற்கு எதிரான பிரச்னையில் கனடா ஈடுபடுவது என்பது, யானைக்கு எதிராக எறும்பு போருக்கு செல்வதை போன்றது. கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு குறைவான ஆதரவே காணப்படுகிறது. அவர் பதவியில் இருந்து விலகிய பிறகு, கனடாவுடனான நட்புறவை அமெரிக்கா மீண்டும் கட்டியமைக்கும். 

தவறு செய்த ட்ரூடோ:

பிரதமர் ட்ரூடோ மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன். அவர் பின்வாங்க முடியாத வகையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.  இந்தியா மீது அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. அரசாங்கத்திற்கு எதிராக, அங்கு ஏதோ இருக்கிறது, இந்த அரசாங்கம் ஏன் ஒரு பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்தது என்பதை அவர் விளக்க வேண்டும்" என மைக்கேல் ரூபின் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா சொல்வது என்ன?

இந்த விவகாரத்தில் பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு இதுவரை யாருக்கும் நேரடியாக ஆதரவு தெரிவிக்கவில்லை. விசாரணைக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு அளிப்பது நல்லது எனவே வலியுறுத்தி வருகிறது. அதேநேரம், சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதிக்கத்தை எதிர்க்க அமெரிக்காவிற்கு இந்தியாவின் ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதனால், இந்த பிரச்னை மேலும் வெடித்தால் இந்தியாவிற்கு சாதகமான நிலைப்பாட்டை தான் அமெரிக்கா எடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

NEET RESULT 2026 : நீட் தேர்வில் கெத்து காட்டிய தமிழகம்! தமிழக அளவில் முதலிடம்... இந்திய அளவில் 12-வது இடம்; விழுப்புரம் மாணவர் சாதனை..
NEET RESULT 2026 : நீட் தேர்வில் கெத்து காட்டிய தமிழகம்! தமிழக அளவில் முதலிடம்... இந்திய அளவில் 12-வது இடம்; விழுப்புரம் மாணவர் சாதனை..
ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
DMK vs BJP : பாஜகவிற்கு ஆதரவா.? நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
பாஜகவிற்கு ஆதரவா.? திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Embed widget