மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

Pet Dog Rules: இனிமே ரெண்டு நாய்கள்தான் வளர்க்க முடியும்! இனிமே லைசென்ஸ் அவசியம்?.. புது ரூல்ஸ்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சியில் வீட்டிற்கு இரண்டு நாய்களை மட்டுமே, வளர்க்க அனுமதிக்கும் புதிய திட்டம் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் நாய் தொல்லை:

கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் தொல்லை கடுமையாக அதிகரித்துள்ளதோடு, அவற்றால் கடிக்கப்பட்டு பெரியவர், சிறியவர் என நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை, தெருநாய்கள் விரட்டி விரட்டி கடிக்கும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அத்தகைய சில சம்பவங்கள் நெஞ்சை பதறவைக்கும் விதமாகவும் உள்ளன. இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு, கேரளாவில் தெரு நாய்கள் தொல்லை கடுமையாக அதிகரித்துவிட்டதால்,  அதைக் கட்டுப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாய்களுக்கு மட்டுமே அனுமதி:

இந்நிலையில் தான், நாய்கள் தொல்லை மற்றும் அதனால் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில், கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாநகராட்சியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வணிக நோக்கத்திற்காக அல்லாத பட்சத்தில் ஒரு வீட்டில் இரண்டுக்கும் அதிகமான நாய்களை வளர்க்கக் கூடாது என, மாநகராட்சி அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுகாதார நிலைக்குழு கொண்டு வந்த இந்த தீர்மானத்தில், வீடுகளில் அதிக நாய்கள் இருப்பது அக்கம் பக்கதில் வசிப்பவர்களுக்கு மோசமான சூழலை ஏற்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய அம்சம் என்ன?

ஏற்கனவே ஒரு வீட்டில் 2 நாய்களை மட்டுமே வளர்க்க அனுமதித்து இருந்த நிலையில், கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 5 ஆக உயர்த்தி அனுமதிக்கப்பட்டது. தற்போது அந்த எண்ணிக்கை மீண்டும் 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், 2 ஐ விட கூடுதல் எண்ணிக்கையிலான நாய்களை வளர்க்க, சிறப்பு அனுமதி  பெற வேண்டும். வளர்ப்பு நாய்களுக்காக ஒவ்வொரு அண்டும் சிறப்பு கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும்,  வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மாநில அரசுக்கு அனுப்பப்பட்டு, ஒப்புதல் கிடைத்ததும் அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தனித்தனியாக லைசென்ஸ்:

”உரிய அனுமதி மற்றும் போதிய வசதிகள் இன்றி வீடுகளில் நாய்கள் வளர்க்கப்படுவதால், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் நோக்கில், இனிமேல் யாரேனும் இரண்டுக்கும் மேலாக கூடுதல் நாய்களை வளர்க்க விரும்பினால், ஒவ்வொரு நாய்க்கும் தனித்தனியாக உரிமம் பெற வேண்டும்” என சுகாதார நிலைக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கட்டண விவரம்:

பெரிய இனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1000, சிறிய இனங்களுக்கு ரூ.500 மற்றும் நடுத்தர இனங்களுக்கு ரூ.750 என புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு அனைத்து இனங்களுக்கும் ஒரே மாதிரியாக ஆண்டிற்கு ரூ.125 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. காப்பக மாதிரியில் நாய்களை வளர்ப்பவர்கள், ஆண்டிற்கு ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டில் ரூ.125 கட்டணத்தில், 9,000-க்கும் அதிகமான வளர்ப்பு நாய்களுக்கான உரிமத்தை திருவனந்தபுரம் மாநகராட்சி வழங்கியுள்ளது. தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள கட்டணத்தின் மூலம், மாநகராட்சி நிர்வாகத்திற்கு கூடுதல் வருவாயுடன், நாய்களை சிறப்பாக கண்காணிக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Modi Swearing-in Guests: மோடி 3.0 பதவியேற்பு! வரப்போகும் தலைவர்களும், 200 சாதாரண குடிமக்களும்!
Modi Swearing-in Guests: மோடி 3.0 பதவியேற்பு! வரப்போகும் தலைவர்களும், 200 சாதாரண குடிமக்களும்!
வலுவான, நிலையான அரசை பாஜக கூட்டணி அமைக்கும்: பிரதமர் மோடி பேச்சு!
வலுவான, நிலையான அரசை பாஜக கூட்டணி அமைக்கும்: பிரதமர் மோடி பேச்சு!
P Chidambaram:
"காங்கிரசுக்கே தார்மீக வெற்றி! நாங்கள் கொண்டாடுவதில் பாஜகவுக்கு ஏன் பொறாமை?" ப.சிதம்பரம்
"நீதி வேண்டும்! புதியதாக யாரும் உருவாக அண்ணாமலை விரும்பவில்லை" பா.ஜ.க. நிர்வாகி குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

PM Modi : ஜனாதிபதியை சந்தித்த மோடி..ஜூன் 9 பதவியேற்பு!MK Stalin MASTER PLAN : திமுக எம்.பிக்கள் கூட்டம்..முதல்வரின் அதிரடி முடிவு!ஆட்டம் ஆரம்பம்Annamalai become MP? : மத்திய அமைச்சர் அ.மலை?பறிபோகிறதா மாநில பதவி?அதிரடி காட்டும் மோடிMamata Banerjee vs Modi : மம்தாவிடம் SURRENDER ஆன 3 பாஜக எம்பி-க்கள்? கலக்கத்தில் மோடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Swearing-in Guests: மோடி 3.0 பதவியேற்பு! வரப்போகும் தலைவர்களும், 200 சாதாரண குடிமக்களும்!
Modi Swearing-in Guests: மோடி 3.0 பதவியேற்பு! வரப்போகும் தலைவர்களும், 200 சாதாரண குடிமக்களும்!
வலுவான, நிலையான அரசை பாஜக கூட்டணி அமைக்கும்: பிரதமர் மோடி பேச்சு!
வலுவான, நிலையான அரசை பாஜக கூட்டணி அமைக்கும்: பிரதமர் மோடி பேச்சு!
P Chidambaram:
"காங்கிரசுக்கே தார்மீக வெற்றி! நாங்கள் கொண்டாடுவதில் பாஜகவுக்கு ஏன் பொறாமை?" ப.சிதம்பரம்
"நீதி வேண்டும்! புதியதாக யாரும் உருவாக அண்ணாமலை விரும்பவில்லை" பா.ஜ.க. நிர்வாகி குற்றச்சாட்டு
Yogi Babu : ஃபேஸ்புக்கில் மலர்ந்த காதல்... தம்பியின் காதலை சேர்த்து வைத்த யோகி பாபு...
ஃபேஸ்புக்கில் மலர்ந்த காதல்....தம்பியின் காதலை சேர்த்து வைத்த யோகி பாபு
T20 World Cup: மீண்டும் மீண்டுமா! பாகிஸ்தான் அணியின் சூப்பர் 8 சுற்றுக்கு ஆப்புவைக்க காத்திருக்கும் இந்தியா!
மீண்டும் மீண்டுமா! பாகிஸ்தான் அணியின் சூப்பர் 8 சுற்றுக்கு ஆப்புவைக்க காத்திருக்கும் இந்தியா!
Anjaamai Review: நீட் தேர்வும் நீடிக்கும் அவலங்களும்! அஞ்சாமை படம் கற்றுத்தரும் பாடம்!
நீட் தேர்வும் நீடிக்கும் அவலங்களும்! அஞ்சாமை படம் கற்றுத்தரும் பாடம்!
3-வது முறை பிரதமர்! நரேந்திர மோடியை ஆட்சியமைக்க அழைத்தார் குடியரசுத் தலைவர் முர்மு!
3-வது முறை பிரதமர்! நரேந்திர மோடியை ஆட்சியமைக்க அழைத்தார் குடியரசுத் தலைவர் முர்மு!
Embed widget