மேலும் அறிய

மரமல்ல.. வீடு! வெட்டி சாய்க்கப்படும் மரம்.. கூட்டமாக பறக்கும் பறவைகள்.! வைரலாகும் வீடியோ!

ஒரு பெரிய மரம் தூரோடு வெட்டி சாய்க்கப்பட அதில் தஞ்சமடைந்திருந்த பறவைகள் பதறி ஓடும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.

அன்றாடம் இணையத்தில் ஏதாவது சில வீடியோக்கள் வைரலாகி ட்ரெண்டாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் ஒரு பெரிய மரம் தூரோடு வெட்டி சாய்க்கப்பட அதில் தஞ்சமடைந்திருந்த பறவைகள் பதறி ஓடும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவைக் காணும் போது நம் நெஞ்சம் பதைபதைக்கிறது.

அத்தனை பெரிய மரத்தை மனிதன் கண்டுபிடித்த இயந்திரம் நொடிகளில் வெட்டி சாய்க்கிறது. மனிதன் மனிதமற்றுப் போனான் என்பதற்கு வேறு சாட்சி இருக்க முடியாது என்பதற்கு அந்த வீடியோ ஒரு சாட்சியாக இருக்கிறது. அந்த வீடியோவின் பின்னணியில் மலர்ந்தும் மலராத பாதி மலர் போல என்ற பாடலின் வரி ஒலிப்பது மனதை இன்னும் பிசைவதாக உள்ளது.

இந்த வீடியோவை சிட்டுக்குருவி பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் ஸ்பேரோ பாண்டியராஜன் பகிர்ந்துள்ளார்.

மரங்கள் ஏன் அவசியம்?

உலகில் உள்ள நான்கில் மூன்று பங்கு மரங்கள், உயிரினங்களுக்குக் காடுகள்தான் இருப்பிடம். கரியமில வாயுவை உள்வாங்கி, உணவு, எரிபொருள் மற்றும் மருந்து எல்லாம் அளித்து வருவது காடுகள்தான். ஆனால் நாம் மரங்களை சற்றும் மதிக்காமல் வெட்டி வீசுகிறோம். இந்த பூமியின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் சரியான மரங்களை தகுந்த இடங்களில் நட வேண்டும்.

மரம் ஏன் வளர்க்க வேண்டும், மரம் வளர்ப்பை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதற்கு நம் உலகில் நிறைய முன்மாதிரி மக்கள் இருக்கின்றனர்.

வாங்கரி மாத்தாய் தெரியுமா உங்களுக்கு?

வாங்கரி மாத்தாய் கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். இவர், 1991 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றார். 2004ஆம் ஆண்டு  அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார். இவர் காடுகளைக் காக்க பசுமை பட்டை இயக்கம் (Green Belt Movement) என்ற ஒன்றைத்துவக்கினார்.


மரமல்ல.. வீடு! வெட்டி சாய்க்கப்படும் மரம்.. கூட்டமாக பறக்கும் பறவைகள்.! வைரலாகும் வீடியோ!

 

இது தான் இவரை உலகம் முழுவதும் அறியச் செய்தது. 1977ல் உலகச் சுற்றுச் சூழல் நாள் அன்று (ஜூன் 5) தம் வீட்டின் தோட்டத்தில் ஒன்பது செடிகளை நட்டு மரங்களை வளர்க்கும் பணியைத் தொடங்கினார். பின்னர் பசுமைப் பட்டை இயக்கம் என்பதைத் தொடங்கினார். ஆப்பிரிக்கக் காடுகளை மீண்டும் உருவாக்குவதும் காடுகள் அழிப்பினால் ஏற்பட்ட மக்களின் வறுமையை ஒழிப்பதும் இவ்வியக்கத்தின் நோக்கங்கள் ஆகும். 30 ஆண்டுகளில் மூன்று கோடி மரங்களை வளர்க்க ஏழைப் பெண்களைத் திரட்டினார். இவற்றோடு மக்கள் கல்வி, குடும்பக் கட்டுப்பாடு, ஊட்டச் சத்து, ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றிலும் பசுமை பட்டை அமைப்பு ஈடுபட்டது. 

நைரோபியில் இருந்த ஒரே பூங்காவான உகூரு என்னும் பூங்காவை அழித்து 62 அடுக்குகள் கொண்ட பெரிய கட்டடத்தைக் கட்ட அரசு முனைந்தபோது மாத்தாய் போராட்டம் நடத்தியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. 

மரங்களின் தாய் திம்மக்கா:

கென்யாவின் வாங்காரி மாத்தாயை அறிந்த நாம், நம்மூரின் மரங்களின் தாய் என்று போற்றப்படும் திம்மக்காவை அறிந்துகொள்ள வேண்டும். கர்நாடகா மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக மரங்களை நடவு செய்தவர் ராம்நகர் மாவட்டம் குளிகல் கிராமத்தை சேர்ந்த சாலுமரத திம்மக்கா. குளிகல் குதூர் இடையேயான சாலையில் வரிசையாக ஆலமரக்கன்றுகளை நட்டு வளர்த்ததால் அவர் சாலுமரத திம்மக்கா என்று கன்னட மக்களால் பேரன்புடன் அழைக்கப்பட்டு வருகிறார். இந்தியாவின் சிறந்த தேசிய குடிமகள் விருதினை ஏற்கனவே பெற்ற இவருக்கு 2019ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கர்நாடகாவில் இருக்கும் மத்திய பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் கொடுத்து கவுரவித்துள்ளது.


மரமல்ல.. வீடு! வெட்டி சாய்க்கப்படும் மரம்.. கூட்டமாக பறக்கும் பறவைகள்.! வைரலாகும் வீடியோ!

இவர்கள் எல்லாம் உலகம் அறிந்த சூழல் ஆர்வலர்கள். இவர்களைப் போலத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. நாம் வாழும் காலத்தில் ஒரே ஒரு மரம் நட்டாலும் கூட போதும். நம் எதிர்கால சந்ததியருக்கு நம் விட்டுச் செல்ல வேண்டியது சொத்து அல்ல. வாழ்வதற்கு பூமி. பூமி உயிர்ப்புடன் இருந்தால் அவரவர் வாழ்க்கையை அவரவர் கட்டமைத்துக் கொள்ள முடியும்.

தலைப்பு செய்திகள்

2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget