மேலும் அறிய

Train Blankets : துர்நாற்றம் வீசும் போர்வையால் பயணிகளுக்கு உடல்நல குறைபாடு...அவசர கதியில் நிறுத்தப்பட்ட ரயில்...நடந்தது என்ன?

ரயிலில் அரசு அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. பயணிகளுக்கு துர்நாற்றம் வீசும் போர்வையும் படுக்கையும் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ரயிலில் அளிக்கப்படும் சேவை மோசமாக இருப்பதாக பயணிகள் புகார் தெரிவிப்பது வழக்கமாகிவிட்டது. அதன் தொடர்ச்சியாக, லக்னோ - வாரணாசி கிரிஷக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இந்த ரயிலின் ஏசி B5 பெட்டியில் அரசு அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. பயணிகளுக்கு துர்நாற்றம் வீசும் போர்வையும் படுக்கையும் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அது எந்தளவுக்கு துர்நாற்றம் வீசியது என்றால், 70 வயது ஆண் பயணி மற்றும் இரண்டு பெண் பயணிக்கு குமட்டல் ஏற்பட்டு உடல்நல குறைவு ஏற்படும் அளவுக்கு இருந்தது.

இவர்கள், லக்னோ சார்பாக் ரயில் நிலையத்தில் ஏறியுள்ளனர். பாட்ஷாநகர் நிலையம் அடைந்த பிறகு, உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட பயணிகளை ரயில்வே மருத்துவர்கள் சந்தித்து சிகிச்சை அளித்தனர். அவசர மருத்துவ காரணத்திற்காக அங்கு ரயில் 30 நிமிடங்கள் வரை நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து வட கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி பங்கஜ் சிங் கூறுகையில், "பயணிகள் மேற்பார்வையாளரிடம் புகார் அளித்ததையடுத்து, போர்வைகள் மற்றும் படுக்கையறைகள் உடனடியாக மாற்றப்பட்டன. 

ஆனால், பயணிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்ததாக புகார் எழுந்தது. இதனால், பாட்ஷாநகர் ரயில் நிலையத்தில் சுமார் 30 நிமிடம் ரயில் நிறுத்தப்பட்டது.

பாட்ஷாநகர் ஸ்டேஷனில் ரயில் நிறுத்தப்பட்ட பிறகு, ரயில் பெட்டியில் இருந்த ரயில்வே டாக்டர்கள் குழு மூன்று பயணிகளையும் பார்வையிட்டது.

பயணிகளுக்கு மருந்துகளும் வழங்கப்பட்டு வந்த நிலையில், அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு முறையாக மருத்துவ பரிசோதனை வழங்கப்பட்ட பிறகு, ரயில் புறப்பட்டு சென்றது" என்றார்.

ரயில் மற்றும் ரயில் நிலையங்களை முறையாக பராமரிக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு உயர்நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

மேலும் சுகாதாரம் இல்லாமல் இருக்கும் ரயில் மற்றும் ரயில் நிலையங்கள் குறித்து புகார் அளிக்க தனி தொலை பேசி எண்களை அறிமுகப்படுத்த வேண்டும் என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தார்.

ரயில்களில் வழங்கப்படும் போர்வைகளை சுத்தப்படுத்தும் பணி தொடர்பான டெண்டர் பிரீமியர் கார்மெண்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

டெண்டர் வழங்கும் போது 30 நாள்களுக்கு ஆய்வு முறையில் அனுமதிப்பதாகவும் இந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டால் டெண்டர் நீட்டிக்கப்படும் என விதிகள் ஏற்படுத்தப்பட்டது.

30 நாள்கள் முடிவில் பணியில் குறைபாடுகள் உள்ளதாக கூறி டெண்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pan Card: பான் கார்ட் விதிகளில் மாற்றம்.. ஏப்ரல் 1 முதல் ஆதார் அட்டை மட்டும் போதாது - மத்திய அரசு அதிரடி
Pan Card: பான் கார்ட் விதிகளில் மாற்றம்.. ஏப்ரல் 1 முதல் ஆதார் அட்டை மட்டும் போதாது - மத்திய அரசு அதிரடி
FASTag Annual Pass: ஃபாஸ்டேக் பயனர்களுக்கு அதிர்ச்சி! 2026-27 இல் கட்டண உயர்வு.. என்ன மாற்றம்?
FASTag Annual Pass: ஃபாஸ்டேக் பயனர்களுக்கு அதிர்ச்சி! 2026-27 இல் கட்டண உயர்வு.. என்ன மாற்றம்?
விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்! இருக்கை கட்டணங்களில் அதிரடி மாற்றம்: இனி குடும்பத்துடன் அருகருகே அமரலாம்!
விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்! இருக்கை கட்டணங்களில் அதிரடி மாற்றம்: இனி குடும்பத்துடன் அருகருகே அமரலாம்!
சிரித்தபடியே மார்பில் சுட்டுக்கொண்டு இறந்த இளைஞர்; வைரல் வீடியோ- டெல்லியில் சோகம்!
சிரித்தபடியே மார்பில் சுட்டுக்கொண்டு இறந்த இளைஞர்; வைரல் வீடியோ- டெல்லியில் சோகம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
Chennai Acid Attack | விவாகரத்து கேட்ட மனைவி ஆசிட் வீசிய கணவர் பதறவைக்கும் CCTV காட்சி
Annamalai Walking In Bridge | ’’கார் வேண்டாம்’’ நடுரோட்டில் இறங்கிய அ.மலை நடந்து செல்லும் காட்சிகள்
CV Shanmugam on Nayanthara | ”எனக்கு நயன்தாரா வேணும்! கனவை நிறைவேத்துவாரா” எல்லை மீறிய சிவி சண்முகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pan Card: பான் கார்ட் விதிகளில் மாற்றம்.. ஏப்ரல் 1 முதல் ஆதார் அட்டை மட்டும் போதாது - மத்திய அரசு அதிரடி
Pan Card: பான் கார்ட் விதிகளில் மாற்றம்.. ஏப்ரல் 1 முதல் ஆதார் அட்டை மட்டும் போதாது - மத்திய அரசு அதிரடி
கோவை குனியமுத்தூர் அதிரடி! 100 கிலோ கஞ்சா பறிமுதல், பெரும் பரபரப்பு: பின்னணியில் பெரிய நெட்வொர்க்கா?
கோவை குனியமுத்தூர் அதிரடி! 100 கிலோ கஞ்சா பறிமுதல், பெரும் பரபரப்பு: பின்னணியில் பெரிய நெட்வொர்க்கா?
கோவை அருகே பேருந்தில் சிக்கிய 37 லட்சம் மதிப்புள்ள தங்கம்! தேர்தல் பறக்கும் படையின் அதிரடி!
கோவை அருகே பேருந்தில் சிக்கிய 37 லட்சம் மதிப்புள்ள தங்கம்! தேர்தல் பறக்கும் படையின் அதிரடி!
TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் வரை.. சென்னையை தவெக டார்கெட் செய்தது ஏன்? ஓர் அலசல்
TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் வரை.. சென்னையை தவெக டார்கெட் செய்தது ஏன்? ஓர் அலசல்
TVK Vijay Alliance: அதிமுக - பாஜகவுடன் கூட்டணியா? விஜய்யின் பேச்சால் தவெக ஹாப்பி!
TVK Vijay Alliance: அதிமுக - பாஜகவுடன் கூட்டணியா? விஜய்யின் பேச்சால் தவெக ஹாப்பி!
தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை! 24ஆம் தேதி வரை வானிலை எப்படி இருக்கும்?
தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை! 24ஆம் தேதி வரை வானிலை எப்படி இருக்கும்?
Yogi Babu 300th Movie: யோகி பாபுவின் 300வது படம்.. அர்ஜுனன் பத்து ட்ரெயிலர் எப்படி இருக்குது?
Yogi Babu 300th Movie: யோகி பாபுவின் 300வது படம்.. அர்ஜுனன் பத்து ட்ரெயிலர் எப்படி இருக்குது?
பாதுகாப்பு வளையத்தில் 2026 ரமலான் பண்டிகை! வளைகுடா பதற்றத்தால் யுஏஇ நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!
பாதுகாப்பு வளையத்தில் 2026 ரமலான் பண்டிகை! வளைகுடா பதற்றத்தால் யுஏஇ நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!
Embed widget