மேலும் அறிய

Train Blankets : துர்நாற்றம் வீசும் போர்வையால் பயணிகளுக்கு உடல்நல குறைபாடு...அவசர கதியில் நிறுத்தப்பட்ட ரயில்...நடந்தது என்ன?

ரயிலில் அரசு அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. பயணிகளுக்கு துர்நாற்றம் வீசும் போர்வையும் படுக்கையும் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ரயிலில் அளிக்கப்படும் சேவை மோசமாக இருப்பதாக பயணிகள் புகார் தெரிவிப்பது வழக்கமாகிவிட்டது. அதன் தொடர்ச்சியாக, லக்னோ - வாரணாசி கிரிஷக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இந்த ரயிலின் ஏசி B5 பெட்டியில் அரசு அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. பயணிகளுக்கு துர்நாற்றம் வீசும் போர்வையும் படுக்கையும் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அது எந்தளவுக்கு துர்நாற்றம் வீசியது என்றால், 70 வயது ஆண் பயணி மற்றும் இரண்டு பெண் பயணிக்கு குமட்டல் ஏற்பட்டு உடல்நல குறைவு ஏற்படும் அளவுக்கு இருந்தது.

இவர்கள், லக்னோ சார்பாக் ரயில் நிலையத்தில் ஏறியுள்ளனர். பாட்ஷாநகர் நிலையம் அடைந்த பிறகு, உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட பயணிகளை ரயில்வே மருத்துவர்கள் சந்தித்து சிகிச்சை அளித்தனர். அவசர மருத்துவ காரணத்திற்காக அங்கு ரயில் 30 நிமிடங்கள் வரை நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து வட கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி பங்கஜ் சிங் கூறுகையில், "பயணிகள் மேற்பார்வையாளரிடம் புகார் அளித்ததையடுத்து, போர்வைகள் மற்றும் படுக்கையறைகள் உடனடியாக மாற்றப்பட்டன. 

ஆனால், பயணிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்ததாக புகார் எழுந்தது. இதனால், பாட்ஷாநகர் ரயில் நிலையத்தில் சுமார் 30 நிமிடம் ரயில் நிறுத்தப்பட்டது.

பாட்ஷாநகர் ஸ்டேஷனில் ரயில் நிறுத்தப்பட்ட பிறகு, ரயில் பெட்டியில் இருந்த ரயில்வே டாக்டர்கள் குழு மூன்று பயணிகளையும் பார்வையிட்டது.

பயணிகளுக்கு மருந்துகளும் வழங்கப்பட்டு வந்த நிலையில், அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு முறையாக மருத்துவ பரிசோதனை வழங்கப்பட்ட பிறகு, ரயில் புறப்பட்டு சென்றது" என்றார்.

ரயில் மற்றும் ரயில் நிலையங்களை முறையாக பராமரிக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு உயர்நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

மேலும் சுகாதாரம் இல்லாமல் இருக்கும் ரயில் மற்றும் ரயில் நிலையங்கள் குறித்து புகார் அளிக்க தனி தொலை பேசி எண்களை அறிமுகப்படுத்த வேண்டும் என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தார்.

ரயில்களில் வழங்கப்படும் போர்வைகளை சுத்தப்படுத்தும் பணி தொடர்பான டெண்டர் பிரீமியர் கார்மெண்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

டெண்டர் வழங்கும் போது 30 நாள்களுக்கு ஆய்வு முறையில் அனுமதிப்பதாகவும் இந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டால் டெண்டர் நீட்டிக்கப்படும் என விதிகள் ஏற்படுத்தப்பட்டது.

30 நாள்கள் முடிவில் பணியில் குறைபாடுகள் உள்ளதாக கூறி டெண்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
MG Hybrid SUV India launch: No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
India Condemn Hormuz Attack: ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
Embed widget