மேலும் அறிய
Top 10 News Headlines: கனமழை வாய்ப்பு.. ஐஆர்சிடிசி விதிகளில் மாற்றம்.. இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள்
Top 10 News Headlines Today November 8th: நாடு முழுவதிலும் நவம்பர்8ம் தேதியான இன்று காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

தலைப்பு செய்திகள்
Source : ABPLIVE AI
- தென்மாவட்டங்களான தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் 100 நாட்களை எட்டியுள்ளது. இதனையொட்டி கருணாநிதி நினைவிடம், மெரினா கடற்கரை, சென்னை மாநகராட்சி அமைந்திருக்கும் ரிப்பன் மாளிகை ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- போதைப்பொருள் வாங்கியதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த புகாரில் நடிகர் ஸ்ரீகாந்த் 11ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற்றிருக்கும் நிலையில் வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.
- திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் இன்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அறிவுசார் திருவிழா நடைபெறுகிறது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
- குடியிருப்பு, கல்வி நிறுவன வளாகம் மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் என தமிழ்நாடு அரசு விதிகளை திருத்தி உத்தரவிட்டுள்ளது. 750 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட இடம், 8 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவை இடம் பெற்றுள்ளது.
- எர்ணாகுளம் - பெங்களூரு உள்ளிட்ட 4 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வாரணாசியில் இதற்கான விழா நடைபெற்றது.
- ஐஆர்சிடிசி வலைத்தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆதார் இணைப்பு செய்தவர்களால் மட்டுமே முதல் 2 மணி நேரம் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது.
- தனக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக இந்திய மக்களுக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துள்ளார். இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதற்கு தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
- பிலிப்பைன்ஸ் நாட்டை கால்மேகி புயல் தாக்கியதில் அந்நாட்டு மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளனர். இதுவரை 188 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் உடமைகளை இழந்து தவிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
- இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் இன்று வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















