மேலும் அறிய

"31ஆம் தேதில ஆஜராக முடியாது" லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மொய்த்ரா ஆவேசம்

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி வரும் மக்களவை நெறிமுறைகள் குழு, வரும் 31ஆம் தேதி மொய்த்ராவை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நேற்று சம்மன் அனுப்பியது.

நாடாளுமன்றத்தில் அதிரடியான கேள்விகளை எழுப்பி தேசிய அளவில் பிரபலம் அடைந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு இவர் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

தன்னிடம் பணம் பெற்று கொண்டு, மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விவகாரத்தில், விசாரணை நடத்தி வரும் மக்களவை நெறிமுறைகள் குழு, வரும் 31ஆம் தேதி மொய்த்ராவை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நேற்று சம்மன் அனுப்பியது.

மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பிய மக்களவை நெறிமுறைகள் குழு: 

இந்த நிலையில், தனது தொகுதியில் தனக்கு வேலை இருப்பதாகவும் அது நவம்பர் 4ஆம் தேதிதான் முடியும் என்பதால், அதற்கு பிறகுதான் ஆஜராக முடியும் என மொய்த்ரா தெரிவித்துள்ளார். தனது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தில் தற்போது துர்கா பூஜை கொண்டாட்டங்கள் நடைபெற்று வருவதால் அதில் கலந்து கொள்ள வேண்டும் என விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், தனக்கு அளிக்கப்பட்ட சம்மன், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட புகார், தனக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்கமூலம் அனைத்தும் தனக்கு கிடைப்பதற்கு முன்பே ஊடகத்திற்கு அளிக்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். 

இதுகுறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் மொய்த்ரா வெளியிட்ட பதிவில், "அக்டோபர் 31ஆம் தேதி, நான் ஆஜராக வேண்டும் என்பதை நெறிமுறைகள் குழுவின் தலைவர் நேரலை நிகழ்ச்சியில் டிவியில் அறிவிக்கிறார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ மெயில் எனக்கு இரவு 7:20க்குதான் அனுப்பப்படுகிறது.

பகீர் கிளப்பிய குற்றச்சாட்டு:

எனக்கு எதிரான அனைத்து புகார்களும் வாக்குமூலங்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன. எனது தொகுதியில் நிகழ்ச்சிகள் இருப்பதால் நவம்பர் 4 ஆம் தேதி அது முடிவடைந்தவுடன் உடனடியாக ஆஜராவேன்" என குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நடந்த மக்களவை நெறிமுறைகள் குழு கூட்டத்தில், பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவும் வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹாத்ராயும் கலந்து கொண்டு வாக்குமூலம் அளித்தனர். லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக எம்பி நிஷிகாந்த் துபதான் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதினார்.

இது தொடர்பான ஆதாரங்களை நிஷிகாந்த் துபவிடம் அளித்தவர் ஜெய் ஆனந்த் தேஹாத்ராய். இவர் வேறு யாரும் அல்ல, மொய்த்ராவின் முன்னாள் காதலர். உச்ச நீதிமன்ற வழக்கறிஞரா இவர், மொய்த்ராவுக்கு எதிராக சிபியிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த சர்ச்சை வெடித்ததில் இருந்தே, திரிணாமுல் காங்கிரசும் எதிர்க்கட்சிகளும் அமைதி காத்து வருகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளரும் மேற்குவங்க பொதுச் செயலாளருமான குணால் கோஷி, இதுகுறித்து கருத்து கூற மறுத்துவிட்டார். 

 

தலைப்பு செய்திகள்

Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
Mekedatu Dam: மேகதாது விவகாரம்.. தமிழ்நாட்டிற்கு அதிகாரமில்லை.. மத்திய அமைச்சரின் பதிலால் சர்ச்சை!
அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இனி சிக்கலே இல்லையா?
அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட்! இனி சிக்கலே இல்லையா?
கணவரிடம் பணம் கேட்க முடியாது! மனைவியின் கோரிக்கையை தூக்கி எறிந்த உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?
கணவரிடம் பணம் கேட்க முடியாது! மனைவியின் கோரிக்கையை தூக்கி எறிந்த உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
Montek Singh: யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget