மேலும் அறிய

Tirupati Laddu: சர்ச்சைக்கு பிறகு சக்கைப் போடு போடும் லட்டு விற்பனை! திருப்பதியில் அசத்தல்!

விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்ட சர்ச்சை எழுந்த பிறகு திருப்பதியில் லட்டு விற்பனை முன்பைவிட அதிகளவில் நடைபெற்று வருகிறது.

உலகப்புகழ்பெற்ற திருக்கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆகும். இந்த கோயில் மட்டுமின்றி இங்கு வழங்கப்படும் பிரசாதமும் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதியில் வழங்கப்பட்ட லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு மற்றம் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியது. இந்த விவகாரம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்கு பின் லட்டு விற்பனை:

தேவஸ்தானமும் இதை ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர அரசு சிறப்பு விசாரணைக்குழு அமைத்துள்ளது. திருப்பதியின் புனிதத்தன்மை கெட்டுவிட்டதாக கூறி தோஷ பரிகாரமாக மகா சாந்தி ஹோமமும் நடத்தப்பட்டது. இந்த விவகாரத்திற்கு பிறகு திருப்பதி கோயிலில் லட்டு விற்பனை சரியும் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், முன்பை காட்டிலும் லட்டு விற்பனை திருப்பதியில் சக்கை போடு போட்டு வருகிறது.  வழக்கமாக தினசரி 3.50 லட்சம் லட்டுகள் விற்பனையாகி வந்த சூழலில், தற்போது தினசரி 4 லட்சத்திற்கும் மேற்பட்ட லட்டுகள் விற்பனையாகி வருகிறது. திருப்பதி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

4 நாட்களில் விற்பனை அமோகம்:

இதன்படி, செப்டம்பர் 19ம் தேதி 3.59 லட்சம் லட்டுகளும், செப்டம்பர் 20ம் தேதி  3.17 லட்சம் லட்டுகளும், செப்டம்பர் 21ம் தேதி 3.67 லட்சம் லட்டுகளும், செப்டம்பர் 22ம் தேதி 3.60 லட்டுகளும் விற்பனையாகி இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு வரை திருப்பதியில் தினசரி 3.50 லட்சம் லட்டுக்கள் மட்டுமே விற்பனையாகி வந்த நிலையில், தற்போது தினசரி கூடுதலாக 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை லட்டுகள் விற்பனையாகி வருகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் 14 லட்சத்திற்கும் அதிகமான லட்டுகள் விற்பனையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்கு பிறகு லட்டு விற்பனை சரியும் என்று பலரும் கருதிய நிலையில் லட்டு விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், லட்டின் தரமும், மணமும் தரமானதாக இருப்பதாகவும் பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திருப்பதியில் லட்டு விவகாரத்தில் எழுந்த சர்ச்சை காரணமாக பக்தர்கள் தங்களது வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, விளக்கு ஏற்றி பொதுமக்கள் வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த லட்டு விற்பனை மூலமாக திருப்பதி கோயிலுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 500 கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
ஆய்வின் போது செல்போன் பேசியபடியே வந்த பெண் பொறியாளர்: கடுப்பாகி பறித்த  தஞ்சாவூர் மேயர்
ஆய்வின் போது செல்போன் பேசியபடியே வந்த பெண் பொறியாளர்: கடுப்பாகி பறித்த தஞ்சாவூர் மேயர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”Aadhav Arjuna on A Rasa : பொசுக்குன்னு கேட்ட ஆதவ்! கூட்டணியில் அடுத்த ஷாக் ஆ.ராசாவின் அடுத்த மூவ்?Durai Dayanidhi Discharge : '’துரையை PHOTO எடுக்காத’’கொந்தளித்த அழகிரி! செய்தியாளர்கள் மீது தாக்குதல்Ravikumar vs Aadhav arjuna : ”இப்படி பேசலாமா ஆதவ்” விசிகவில் வெடித்த கலகம்! ரவிக்குமார் போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
ஆய்வின் போது செல்போன் பேசியபடியே வந்த பெண் பொறியாளர்: கடுப்பாகி பறித்த  தஞ்சாவூர் மேயர்
ஆய்வின் போது செல்போன் பேசியபடியே வந்த பெண் பொறியாளர்: கடுப்பாகி பறித்த தஞ்சாவூர் மேயர்
Harsha Sai: இவரா? பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை புகார் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
Harsha Sai: இவரா? பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை புகார் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
Drona Desai: ஒரே இன்னிங்சில் 498 ரன்கள்! யார் இந்த 18 வயது சிறுவன் த்ரோனா தேசாய்?
Drona Desai: ஒரே இன்னிங்சில் 498 ரன்கள்! யார் இந்த 18 வயது சிறுவன் த்ரோனா தேசாய்?
லிப்ஸ்டிக் போட்டது ஒரு குத்தமா? மேயர் பிரியாவின் தபேதார் மாதவி அதிரடி இடமாற்றம்- பின்னணி என்ன?
லிப்ஸ்டிக் போட்டது ஒரு குத்தமா? மேயர் பிரியாவின் தபேதார் மாதவி அதிரடி இடமாற்றம்- பின்னணி என்ன?
Thirumavalavan: தி.மு.க. கூட்டணியில் சிக்கலா? ஆதவ் அர்ஜூனன் மீது நடவடிக்கை? திருமாவளவன் பரபரப்பு பேட்டி
Thirumavalavan: தி.மு.க. கூட்டணியில் சிக்கலா? ஆதவ் அர்ஜூனன் மீது நடவடிக்கை? திருமாவளவன் பரபரப்பு பேட்டி
Embed widget