Watch video: தாயும் நீயே... பயமில்லாமல் யானையிடம் பால் குடிக்கும் குட்டிச்சிறுமி.. வைரலாகும் வீடியோ..!
பினுவும், ஹர்ஷிதாவும் ஒன்றாக நேரத்தை செலவிடும் காட்சி பார்ப்போரை சந்தோஷப்படுத்தியுள்ளது.
அசாமில் மூன்று வயது சிறுமி தாய் யானையிடம் பால் குடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாட்டில் கொலை, கொள்ளை, தற்கொலைகள், பாலியல் வன்கொடுமை போன்ற செய்திகள் தினமும் வருவது அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. டிவியை பார்த்தாலும், தினசரி பேப்பரை திறந்தாலும் இந்த செய்திகளே அதிகம் உள்ளன. பொதுமக்களும், எதிர்மறையான செய்திகளை தினமும் படித்து வருவதால் அவர்களுக்குள்ளும் ஒருவித பயமும், அதிர்ச்சியும் ஏற்படுகிறது. இந்த செய்திகளுக்கு இடையே, தற்போது தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால், மூன்றாவது கண் என்று கூறப்படும் கேமராவால், பல்வேறு சுவாரஸ்யமான, அதிர்ச்சிகரமான சம்பவத்தின் காட்சிகளும் கிராமம் முதல் நகரம் வரை உள்ள மக்களுக்கு உடனே தெரிந்து விடுகிறது. இதில், சுவாரஸ்யமான வீடியோக்கள் பல சமூகவலைதளங்களில் வைரலாகி, உலகத்தின் எந்த மூலைகளில் இருக்கும் மனிதர்களுக்கும் சென்று சேர்ந்து விடுகிறது.
அந்த வகையில், அசாமில் மூன்று வயது சிறுமி தாய் யானையிடம் பால் குடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹர்ஷிதா யானையுடன் விளையாடுவதும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி ஹர்ஷிதா போரா, மேல் அசாமின் கோலாகாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். யானையுடன் விளையாடி பால் குடிப்பது போல வீடியோவில் இருக்கிறது. சிறுமியின் நிலைமையை புரிந்து கொண்ட யானையும் சிறுமியிடம் தாய் பாசம் காட்டியுள்ளது.
பின்னர், ஹர்ஷிதா யானையுடன் தனியாக விளையாடுவதும், யானையை பினு என்று அழைப்பதும் வீடியோவில் பார்க்கலாம். பினுவும் ஹர்ஷிதாவும் ஒன்றாக நேரத்தை செலவிடும் காட்சி பார்ப்போரை சந்தோஷப்படுத்தியுள்ளது.
வீடியோவை பார்க்க:
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets