மேலும் அறிய

sabarimala: சபரிமலையில் காட்சி தந்த மகரஜோதி.. விண்ணை முட்டிய ஐயப்ப கோஷம்.. லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜையை ஆயிரக்கணக்கானோர் கண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

ஜோதி வடிவில் தோன்றிய ஐயப்பன்:

சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தின் கடைசி நாளான, ஜனவரி 14-ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டும், பந்தளம்  அரண்மனையில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட,  தங்கம் மற்றும் வெள்ளி திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சபரிமலை பொன்னம்பல மேட்டில், ஐயப்ப சுவாமி மூன்று முறை ஜோதியாய் காட்சி அளித்தார்.

பக்தர்களின் முழக்கங்களால் அதிர்ந்த சபரிமலை:

மகரஜோதி தரிசனத்திற்கான ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு படையெடுத்த நிலையில், பகல் 12 மணிக்கு மேல் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு முன்னதாக சபரிமலைக்கு சென்ற பக்தர்கள், நீண்ட நேரம் காத்திருந்தனர். சபரிமலை சன்னிதானம்,  புல்லுமேடு, சரங்கொத்தி  மற்றும் பாஞ்சாலி உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். சரியாக மாலை 6.20 மணியளவில் ஒளிவடிவில், மகரஜோதியை காட்சியளித்த ஐயப்பனை பக்தர்கள் ஆரவாரமுடன் கண்டு பிரார்த்தனை செய்தனர். சபரிமலைக்கு நேர் எதிரே உள்ள பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் தோன்றிய ஐயப்பனை கண்டதும், சுவாமியே சரணம் ஐயப்பா என பக்தர்கள் எழுப்பிய முழக்கம் விண்ணை பிளந்தது. 

சுவாமி தரிசனம்:

அதனைத் தொடர்ந்து திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து கொண்டு வரப்படும் நெய் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 11.30 மணி வரை நடை திறந்திருக்கும் என்றும், அதன்பிறகு நாளை காலை தான் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என ஏற்கனவே தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

மகரஜோதியையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில், சபரிமலையில் வனக்காவலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கால்நடை மருத்துவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

பக்தர்கள் தங்கியிருக்கும் வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவாமல் தடுக்க ரோந்து பணியை முடக்கி விட்டுள்ளனர். மேலும் எருமேலி - கரிமலை சாலை, புல்லுமேடு பகுதியில் கூடுதல் தீயணைப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பம்பை மற்றும் சன்னிதானத்தில் வனத்துறைக்கு சொந்தமாக 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகின்றது.  அதேபோல் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க தனி குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பன்றிகள் பிடித்து வேறு இடத்திற்கு மாற்றும் பணியில் தீவிரம் காட்டப்பட்டுள்ளது. 

மகரவிளக்கு பூஜை: 

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு கடந்த நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம், 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு முறையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருகின்றனர். இதனிடையே மண்டல பூஜை நிறைவடைந்து டிசம்பர் 27 ஆம் தேதி நடை அடைக்கப்பட்டு 3 நாட்கள் கழித்து டிசம்பர் 30 ஆம் தேதி மகரவிளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டது.  அதைதொடர்ந்து, மகரஜோதி தரிசனத்திற்கான முன்பதிவும் ஏற்கனவே நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget