மேலும் அறிய

Train Accident: ஆந்திராவில் இரண்டு ரயில்கள் மோதி கொண்ட விபத்து- உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு..!

ஆந்திராவை அடுத்த விஜயநகரத்தில் இரண்டு ரயில்கள் மோதி கொண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் நேற்று விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில்,  மற்றொரு ரயில் மீது மோதியதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

08532 விசாகப்பட்டினம்-பலாசா பாசஞ்சர், 08504 விசாகப்பட்டினம்-ராயகடா பாசஞ்சர் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதாக தென் கடற்கரை ரயில்வே மண்டல அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், சிக்கி தவிக்கும் பயணிகளை மீட்கவும், ரயிலை நகர்த்தவும் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒரு ரயில் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த ரயில் விபத்து சம்பவம் குறித்து பேசிய ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, “ உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், விசாகப்பட்டினம் மற்றும் அனகாபள்ளி ஆகிய மாவட்டங்களில் இருந்து முடிந்தவரை ஆம்புலன்ஸ்களை அனுப்பவும், அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனைத்து வகையான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.

தொடர்ந்து, சுகாதாரம், காவல் மற்றும் வருவாய் உள்ளிட்ட பிற அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து, விரைவான நிவாரண நடவடிக்கைகளை எடுக்கவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். 

உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். 

ஆந்திர ரயில் மோதி விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அலமண்டா மற்றும் கண்டகபள்ளே பிரிவுக்கு இடையே ரயில் தடம் புரண்டதில் உயிரிழந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமர் மோடி நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்: 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ரயில் மோதி விபத்துக்குள்ளானதற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கணிசமான எண்ணிக்கையிலான இந்தியர்கள் தங்கள் பயணத்திற்காக ரயில்வேயை நம்பியுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடப்பது கவலையளிக்கிறது. மத்திய அரசும், ரயில்வேயும் அவசரமாக மறுமதிப்பீடு செய்து, ரயில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி, பயணிகளின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.” என பதிவிட்டிருந்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Embed widget