மேலும் அறிய

இரண்டு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்த கொலீஜியம்… தீர்மானம் நிறைவேற்றம்!

தலைமை நீதிபதி உட்பட 34 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றம் தற்போது 27 நீதிபதிகளுடன் செயல்பட்டு வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல் மற்றும் குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோரின் பெயர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக உயர்த்துவதற்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிக்கு இருவர் பரிந்துறை

CJI DY சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்தின் 6 உறுப்பினர்களும் ஒருமனதாக நீதிபதி பிண்டலின் பெயரைப் பரிந்துரைத்த நிலையில், நீதிபதி KM ஜோசப் மட்டும், நீதிபதி அரவிந்த குமாருக்கு பிற்காலத்தில் பரிசீலிக்க கூறியதாக நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட தீர்மானம் தெரிவிக்கிறது. தலைமை நீதிபதி உட்பட 34 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றம் தற்போது 27 நீதிபதிகளுடன் செயல்பட்டு வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது. "அலகாபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால் நியமனம் தொடர்பாக கொலீஜியத்தின் தீர்மானம் ஒருமனதாக இருந்தது. ஆனால் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் அரவிந்த் குமாரின் நியமனத்தை பிற்காலத்தில் பரிசீலிக்கலாம் என்ற அடிப்படையில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் நீதிபதி கே.எம்.ஜோசப்," என்று தீர்மானம் கூறியது. நீதிபதி ஜோசப் தவிர, கொலீஜியத்தில் நீதிபதிகள் எஸ்.கே. கவுல், எம்.ஆர். ஷா, அஜய் ரஸ்தோகி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்: INDvsNZ 3RD T20: தொடரை வெல்லப்போவது யார்..? வெறுங்கையுடன் போகுமா நியூசி..? வெற்றியுடன் முடிக்குமா இந்தியா..?

ஐந்தில் இருவருக்கு முன்னுரிமை

கொலீஜியம் டிசம்பர் 13 அன்று ஐந்து நீதிபதிகளை பரிந்துரைத்தது. நீதிபதி பங்கஜ் மித்தல், தலைமை நீதிபதி, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்; நீதிபதி சஞ்சய் கரோல், தலைமை நீதிபதி, பாட்னா உயர்நீதிமன்றம்; நீதிபதி பி வி சஞ்சய் குமார், தலைமை நீதிபதி, மணிப்பூர் உயர்நீதிமன்றம்; நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா, நீதிபதி, பாட்னா உயர்நீதிமன்றம்; மற்றும் ஐந்தாவதாக நீதிபதி மனோஜ் மிஸ்ரா, நீதிபதி, அலகாபாத் உயர்நீதிமன்றம், ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்டனர். இந்த பெயர்களை மத்திய அரசு இன்னும் ஏற்றுக்கொண்டு அறிவிக்கவில்லை, மேலும் கொலீஜியம் செவ்வாயன்று இந்த நீதிபதிகள் "உச்சநீதிமன்றத்திற்கு நியமனம் செய்வதற்கு தற்போது பரிந்துரைக்கப்பட்ட இந்த இரண்டு பெயர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்று தெளிவுபடுத்தியது. "எனவே, டிசம்பர் 13, 2022 அன்று பரிந்துரைக்கப்பட்ட ஐந்து நீதிபதிகளின் நியமனங்கள் தனித்தனியாக அறிவிக்க வேண்டும், அதற்கு முன்னதாக இந்த தீர்மானத்தால் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு நீதிபதிகளுக்கு அறிவிக்கப்பட வேண்டும்" என்று கொலீஜியம் கூறியுள்ளது. செவ்வாய்கிழமை நடைபெற்ற அதன் கூட்டத்தில், கொலீஜியம் உச்ச நீதிமன்றத்திற்கு நியமனம் செய்யத் தகுதியான உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் மூத்த நீதிபதிகளின் பெயர்கள் குறித்து ஆலோசித்ததாகக் கூறியது. 

இரண்டு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்த கொலீஜியம்… தீர்மானம் நிறைவேற்றம்!

ஏன் பிண்டல்?

"உச்சநீதிமன்றத்திற்கு உயர்த்தப்படுவதற்கான பரிசீலனை மண்டலத்தில் உள்ளவர்களால் முன்பு எழுதப்பட்ட தீர்ப்புகள், கொலிஜியத்தின் உறுப்பினர்களிடையே விவாதிப்பதற்காகவும், அவர்களின் புத்திசாலித்தனத்தை மதிப்பிடுவதற்காகவும் கொடுக்கப்பட்டன. தகுதியான தலைமை நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்றங்களின் மூத்த நீதிபதிகளின் தகுதி, ஒருமைப்பாடு ஆகியவற்றை கொலீஜியம் கவனமாக மதிப்பீடு செய்தது", என நான்கு பக்க தீர்மானம் கூறியது. நீதிபதி பிண்டல், மார்ச் 22, 2006 இல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் மற்றும் அக்டோபர் 11, 2021 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆனார். "உயர் நீதிமன்ற நீதிபதிகளின் இந்தியா-சீனியாரிட்டி படி, நீதிபதி பிண்டல் வரிசை எண் 02 இல் உள்ளார். அவர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த மூத்த நீதிபதி ஆவார். அவரது பெயரைப் பரிந்துரைக்கும் போது, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றங்களில் உள்ள அனுமதிக்கப்பட்ட எண்பத்தைந்து நீதிபதிகளுக்கு, உச்ச நீதிமன்றத்தின் பெஞ்சில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்பதை கொலீஜியம் கருத்தில் கொண்டது", என்று கூறப்பட்டிருந்தது. பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் இரு மாநிலங்களுக்கும் பொதுவான உயர்நீதிமன்றம் என்பதால் அங்கிருந்து ஒருவர் உச்ச நீதிமன்றம் செல்வது மிகவும் அவசியம் என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. 

இரண்டு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்த கொலீஜியம்… தீர்மானம் நிறைவேற்றம்!

ஏன் அரவிந்த் குமார்?

ஜூன் 26, 2009 அன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி அரவிந்த் குமார், டிசம்பர் 7, 2012 அன்று நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். "அவர் 13 அக்டோபர் 2021 அன்று குஜராத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்டார். நீதிபதி அரவிந்த் குமார் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் அகில இந்திய-சீனியாரிட்டியில் 26 ஆம் இடத்தில் உள்ளார்" என்று தீர்மானம் கூறுகிறது. அவரது பெயரைப் பரிந்துரைக்கும் போது, "கர்நாடக உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதிகளின் சீனியாரிட்டியில், நீதிபதி அரவிந்த் குமார் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பதை கொலிஜியம் கருத்தில் கொண்டுள்ளது" என்று அது கூறியது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருந்து இரண்டு நீதிபதிகள் பிரதிநிதித்துவப்படுத்தினர். இரண்டு பெயர்களை பரிந்துரை செய்யும் போது, கொலிஜியம் அந்தந்த தாய் உயர்நீதிமன்றங்களில் உள்ள தலைமை நீதிபதிகள் மற்றும் மூத்த நீதிபதிகளின் பணி மூப்பு மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஒட்டுமொத்த பணி மூப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் "பிரதிநிதித்துவம் செய்யப்படாத அல்லது போதிய பிரதிநிதித்துவம் இல்லாத உயர் நீதிமன்றங்களின் பிரதிநிதித்துவத்தை" உறுதி செய்வதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை உறுதி செய்ய முடியும் என்று தீர்மானம் கூறியது. பாலின வேறுபாடு மற்றும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் தவிர, "சமூகத்தின் விளிம்புநிலை மற்றும் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள்" நீதிபதிகளாக பரிந்துரைக்கப் பட வேண்டும் என்று கொலீஜியம் கருதுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Embed widget