மேலும் அறிய

ஒரே புகைப்படம்.. மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்! பத்திரிகையாளருக்கு குவியும் பாராட்டு!

மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட ஒரு வாரத்தில் 50 சதவிகித முன்னேற்றத்தை கண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குப்பைகளை சாப்பிட்டுக்கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை புகைப்பட கலைஞர் ஒருவர் மீட்டு , அவருக்கு மறுவாழ்வு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் :

கடந்த புதன் கிழமை மகாராஸ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்வாவின் விட்டவா பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் குப்பைகள் கொட்டும் இடத்தில் அமர்ந்து அங்குள்ள குப்பைகளை கிளறிய அவற்றை சாப்பிட்டுக்கொண்டிருக்க , இதனை அவ்வழியாக சென்ற பிரசாந்த் நர்வேகர்  என்னும் புகைப்பட பத்திரிக்கையாளார் புகைப்படம் எடுத்திருக்கிறார். இவர் மும்பையில் உள்ள பிரபல பத்திரிக்கை ஒன்றில் பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. புகைப்படம் எடுத்து கடந்து செல்லாமல் , மனிதாபிமானத்துடன் அவர் குறித்த விவரங்களை சேகரிக்க துவங்கியிருக்கிறார். இதற்காக புகைப்பட பத்திரிக்கையாளார் தானே குடிமை அமைப்பின் பிராந்திய பேரிடர் மேலாண்மை பிரிவு மற்றும் கல்வா காவல்துறையின் உதவியை நாடினார்.

 


ஒரே புகைப்படம்.. மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்! பத்திரிகையாளருக்கு குவியும் பாராட்டு!

குணமான இளைஞர் :


இரண்டு நாட்களுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை, நர்வேக்கரே அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார், மேலும் தானே குடிமக்கள் மன்றத்தின் தலைவர் காஸ்பர் அகஸ்டினுக்கும் இளைஞரின் நிலை குறித்து தெரிவித்திருக்கிறார். இருவரும் சேர்ந்து , காவல்துறை உதவியுடன் மருத்துவர்  சஃபியா அக்தரை சந்தித்து நடந்தவற்றை கூறியிருக்கின்றனர். பின்னர் சஃபியா பாதிக்கப்பட்ட இளைஞரை தானே மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட ஒரு வாரத்தில் 50 சதவிகித முன்னேற்றத்தை கண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த இளைஞர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அவர் பிகாரை சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்தவர் . அவர் பிழைப்பிற்காக மும்பை வந்திருகிறார்.பல இடங்களில் முயன்றும் வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்ததாக தெரிகிறது. தனது தாய் , தந்தையை பார்க்க வேண்டும் என கூறிய இளைஞர் எப்படி குப்பை தொட்டி அருகில் சென்றேன் என தெரியவில்லை என்கிறார். விரைவில் அவர் 100 சதவிகிதம் குணமாகிவிடுவார் என்கின்றனர் மருத்துவர்கள் .

மனிதாபிமானம்  மிக்கவர்களின் கருத்து :


மேலும் மனிதாபிமானத்துடன் செயல்பட்ட புகைப்பட பத்திரிக்கையாளருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.இது குறித்து கூறிய பிரசாந்த் நர்வேகர்  “"இறுதியாக, இந்த இளைஞனுக்குப் புதிய வாழ்வு அளிக்கும் எங்கள் நோக்கம் வெற்றியடைந்தது" என்றார்.
இந்த சம்பவம் குறித்து பேஇச்ய  அகஸ்டியன் "தானே பேரிடர் மேலாண்மைக் குழுவின் உதவியுடன், எங்கள் குழுவினர் அந்த நபரைத் தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றினர். காவலர் பிரம்ஹானந்த் பாட்டீல் கடைசி வரை எங்களுக்கு நிறைய உதவினார்." என்றார். மீட்பு குழுவினர் இது குறித்து கூறுகையில் “அவரை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு சட்டப்பூர்வ அனுமதி கோரி, அந்த நபர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், அந்த நபரை நீதிமன்றத்தின் மூன்றாவது மாடிக்கு நடக்கச் செய்வது கடினமான பணியாக இருந்தது ” என்றனர்

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Embed widget