மேலும் அறிய

மதிய உணவில் கலக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. குழந்தைகளுக்கு என்னாச்சு?

மதிய உணவினை செய்ய பயன்படுத்தப்படும் பாத்திரங்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதை ஆசிரியரும் மற்ற ஊழியர்களும் கண்டறிந்தனர். அப்போது சமையலறைக்குள் இருந்த பாத்திரத்தில் வெள்ளை நிற திரவம் இருப்பதைக் கண்டனர்.

அரசு பள்ளி ஒன்றில் மதிய உணவு செய்ய பயன்படுத்தப்படும் பாத்திரத்திலும் குடிநீரிலும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நல்வாய்ப்பாக, பள்ளி ஊழியர்களுக்கு இதுதொடர்பாக தெரிய வந்ததை தொடர்ந்து, பெரிய அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

பாத்திரத்தில் இருந்த வெள்ளை நிற திரவம்:

தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் தர்மபுரி கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. சமையலறை பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதை சமையல்காரர் நேற்று கவனித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

மதிய உணவினை செய்ய பயன்படுத்தப்படும் பாத்திரங்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதை ஆசிரியரும் மற்ற ஊழியர்களும் கண்டறிந்தனர். அப்போது சமையலறைக்குள் இருந்த பாத்திரத்தில் வெள்ளை நிற திரவம் இருப்பதைக் கண்டனர்.

ஆசிரியர்களுக்கு எழுந்த சந்தேகம்:

குடிநீர் குழாயை திறந்தபோது, ​​மீண்டும் ஒரு துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அவர்கள் தண்ணீர் தொட்டியை சோதித்தபோது, ​​இதேபோன்ற வெள்ளை நிற திரவம் இருப்பதைக் கண்டனர். பாத்திரங்கள் மற்றும் குடிநீரில் தெளிக்கப்பட்ட திரவம் பூச்சிக்கொல்லி மருந்தாக இருக்கலாம் என்று சந்தேகித்த கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் பிறருக்கு அரசு பள்ளி ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் புகார் அளித்துள்ளது. மேலும், பாரதிய நியாய சன்ஹிதா தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு பின், ​​30 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டிலிருந்து பூச்சிக்கொல்லி மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மாதிரிகள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

குடும்பப் பிரச்னைகள் காரணமாக சந்தேக நபர் மனநிலை சரியில்லாதவராக இருக்கலாம் என்றும், அவர் இந்தச் செயலைச் செய்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: Janani Engagement: 36 வயதில் பேச்சிலர் லைஃப்புக்கு எண்டு கார்டு போட்ட நடிகை ஜனனி! பிரமாண்டமாக நடந்த நிச்சயம்; காதலர் யார் தெரியுமா?

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget