மேலும் அறிய

TN Corona LIVE Updates: தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா வைரசுக்கு 364 நபர்கள் உயிரிழப்பு

கொரோனா நோய்த் தொற்று தொடர்பான அனைத்து முக்கிய செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளுங்கள்.

LIVE

Key Events
TN Corona LIVE Updates: தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா வைரசுக்கு 364 நபர்கள் உயிரிழப்பு

Background

தமிழகத்தில் கொரோனா வைரசின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இன்று கொரோனா வைரசின் தாக்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக இன்று ஒரே நாளில் மட்டும் 33 ஆயிரத்து 59 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 16 லட்சத்து 64 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்து 267 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவால் 364 நபர்கள் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் புதிய உச்சமாக 364 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

20:47 PM (IST)  •  18 May 2021

கொரோனா வைரசுக்கு தமிழகத்தில் ஒரே நாளில் 364 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரசின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இன்று கொரோனா வைரசின் தாக்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக இன்று ஒரே நாளில் மட்டும் 33 ஆயிரத்து 59 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 16 லட்சத்து 64 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்து 267 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவால் 364 நபர்கள் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் புதிய உச்சமாக 364 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

17:41 PM (IST)  •  18 May 2021

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தேவையின்றி வெளியே சுற்றினால் முகாம்களுக்கு செல்ல நேரிடும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

“ கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மண்டலத்திற்கு இரண்டு எண்ணிக்கையில் மண்டல அமலாக்கக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவானது நாள்தோறும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு, விதிகளை மீறுபவர்களிடம் இருந்து அபராதத் தொகையையும், விதிகளை மீறி நடத்தப்படும் கடைகளை மூடி சீல் வைத்து அதன் உரிமையாளர்களிடம் அபாரதத்தையும் வசூலித்து வருகிறது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி, தொற்று பாதிப்பு குறைவாக உள்ள நபர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள், மருந்துகள் போன்ற அடிப்படைத் தேவைகளை பூர்த்தி  செய்ய சென்னை மாநகராட்சியால் 200க்கும் மேற்பட்ட முன்கள தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  கொரோனா தொற்று உறுதி செய்ய்பட்டவர்களும், அவர்களது குடும்பத்தாரும் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருப்பதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பொதுமக்களின் நலன் கருதி, அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களில் ஒரு சிலர் மற்றும் அவர்களது குடும்பத்தார் வீடுகளை விட்டு வெளியே வருவதாக புகார்கள் வருகிறது. இந்த செயலினால் கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மருத்துவர் அறிவுறுத்திய நாட்கள் வரை வீடுகளை விட்டு வெளியே வராமல் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதனை மீறி வீடுகளை விட்டு வெளியே வருபவர்களிடம் சென்னை மாநகராட்சி  மூலம் முதல் தவணையாக ரூபாய் 2 ஆயிரம் அபராதம் வசூலிக்கவும், இரண்டாவது முறை மீண்டும் வீடுகளை விட்டு வெளியே வருவது கண்டறியப்பட்டால் கொரோனா பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, 044 25384520 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். “

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுளது.

 

16:15 PM (IST)  •  18 May 2021

நாடு முழுவதும் 269 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழப்பு

கொரோனா தொற்று இரண்டாம் அலையில் சாதாரண பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், செவிலியர்கள் என சுகாதாரத்துறையில் பணியாற்றும் பலரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பின்படி, கொரோனா இரண்டாவது அலையில் நாடு முழுவதும் 269 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக பீகாரில் 78 மருத்துவர்களும், உத்தரபிரதேசத்தில் 37 மருத்துவர்களும், டெல்லியில் 28 மருத்துவர்களும், ஆந்திராவில் 22 மருத்துவர்களும், தெலுங்கானாவில் 19 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலோனார் 30 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள்.

15:15 PM (IST)  •  18 May 2021

முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூபாய் 69 கோடி நன்கொடை - முதல்வர் தகவல்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அவர்களுக்கான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள், ரெம்டெசிவிர் மருந்துகளின் தேவைகள் அதிகரித்துள்ளது.

இதை உடனடியாக நிவர்த்தி செய்வதற்காகவே முதல்-அமைச்சர் மக்கள் கொரோனா தடுப்பு நிதி அளிக்க வேண்டுகோள் விடுத்திருந்தார். கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, கடந்த 7-ந் தேதி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவர் பொறுப்பு ஏற்றுக்கொண்ட 10 நாட்களில் ரூபாய் 69 கோடி நன்கொடையாக கிடைக்கப் பெற்றுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

14:09 PM (IST)  •  18 May 2021

புதுச்சேரியில் மேலும் 1,797 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் மேலும் 1,797 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 87,749 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 33 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 1,212 ஆக அதிகரித்துள்ளது.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget