Tamil News Today : அனைத்து அன்னதானக் கோயில்களிலும் அன்னதானம்
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

Background
கொரோனா மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான உயர்நிலை ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் மத்திய அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கௌபா தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. நாட்டின் ஒரு சில பகுதிகளில் நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகக் குறிப்பிட்டார். பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் அதனை எதிர்கொள்வதற்காக மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரிக்குமாறும் தெரிவித்தார்.
அனைத்து அன்னதானக் கோயில்களிலும் அன்னதானம்
திங்கள் முதல் வியாழக்கிழமை வரை அனைத்து அன்னதானம் வழங்கும் கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அன்னதானக் கூடங்களில் சமூக இடைவெளியுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் உணவுப் பொட்டலங்களாக அன்னதானம் வழங்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு
தமிழ்நாட்டில் இன்று 1,697 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 1653இல் இருந்து 1,697 ஆக அதிகரித்துள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 நாட்களாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 232 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 27 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,337 ஆக உயர்ந்துள்ளது.





















