![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Breaking Live: ஒரேநாளில் 28 லட்சம் பேருக்கும் மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
Latest News in Tamil Today LIVE: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சமூகம் மற்றும் அரசியல் நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
LIVE
![Breaking Live: ஒரேநாளில் 28 லட்சம் பேருக்கும் மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது Breaking Live: ஒரேநாளில் 28 லட்சம் பேருக்கும் மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
Background
Latest News in Tamil Today LIVE
குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அம்மாநில ஆளுநர் ஆசார்யா தேவ்ராத்திடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளித்துள்ளார். அடுத்தாண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் ரூபானி ராஜினாமா செய்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 65 வயதான விஜய் ரூபானி, ஆனந்தி பென் படேலுக்குப் பிறகு முதல்வரானவர். கடந்த 2016 முதல் குஜராத் முதலமைச்சராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது ராஜினாமாவுக்குப் பிறகு ரூபானி, குஜராத் முதல்வராக ஐந்து ஆண்டுகள் இருப்பது பெரும் கவுரவம் என்று கூறினார். "கட்சியில் உள்ள பொறுப்புகள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்க வேண்டும். இது கட்சியில் இயல்பான செயல். ஐந்து வருடங்கள் முதலமைச்சராக இருக்கும் பொறுப்பு எனக்கு கிடைத்தது. இது ஒரு சிறந்த வாய்ப்பு, ”என்று அவர் கூறினார்.
மன்சுக் மாண்டவியா, பர்ஷோத்தம் கோடாபாய் ரூபலா மற்றும் நிதின் படேல் ஆகியோரில் ஒருவர் முதலமைச்சராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரேநாளில் 28 லட்சம் பேருக்கும் மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாம்களில் ஒரேநாளில் 28.20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்த நிலையில் இலக்கை தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 40,000 முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 1,608 பேருக்கு கொரோனா; 22 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று 1,639இல் இருந்து 1,608 ஆக குறைந்துள்ளது. சென்னையில் மேலும் 197 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 22 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,168 ஆக அதிகரித்துள்ளது.
இளநிலை மருத்துவ நீட் நுழைவுத் தேர்வு நிறைவு
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நிறைவு பெற்றது. கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டு நடைபெற்ற தேர்வை 3,862 மையங்களில் 16.14 லட்சம் பேர் எழுதினர். முதன்முறையாக தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொத்தம் 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 70 ஆயிரம் மாணவிகள், 40 ஆயிரம் மாணவர்கள் என 1.10 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். தமிழ்நாட்டில் 18 நகரங்களில் உள்ள 224 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
குஜராத் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு
குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாணவர் தனுஷ் உடலுக்கு உதயநிதி நேரில் அஞ்சலி
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூரில் நீட் தேர்வுக்கு அஞ்சி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட மாணவர் தனுஷ் உடலுக்கு எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)