Tamil Nadu Coronavirus LIVE News : தடுப்பூசி கோரிய உலகளாவிய டெண்டரில் யாரும் பங்கேற்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
June 6 Covid-19 Live News Updates: தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Background
Tamil Nadu Coronavirus Latets News Live Updates: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21,140 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இதில், அதிகபட்சமாக கோயம்பத்தூர் மாவட்டத்தில் 2663 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், 32,472 பேர் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 443 கொரோனா இறப்புகள் தமிழ்நாட்டில் பதிவானது.
தடுப்பூசி கோரிய உலகளாவிய டெண்டரில் யாரும் பங்கேற்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
நீலகிரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்கள் அவர்களே தடுப்பூசியை வாங்கிக்கொள்ள உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த டெண்டர் நேற்றோடு நிறைவு பெற்றது. இதில் யாரும் பங்கேற்காததால் மறு டெண்டர் விடுத்து, தடுப்பூசியை நாமே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழ்நாடு அரசுக்கு குத்தகைக்கு விட வேண்டும் என தொழில்துறை அமைச்சர் டெல்லிக்கு சென்று தொடர்புடைய அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. கால அவகாசம் கேட்டுள்ளனர். பயோடெக் நிறுவனத்தினரும் ஆய்வு செய்துள்ளனர். இதில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.
தமிழ்நாட்டில் 21 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 20 ஆயிரத்து 421 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 33 ஆயிரத்து 161 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 434 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 2 ஆயிரத்து 645 நபர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 44 ஆயிரத்து 289 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





















