Tamil Nadu Coronavirus LIVE News : தடுப்பூசி கோரிய உலகளாவிய டெண்டரில் யாரும் பங்கேற்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
June 6 Covid-19 Live News Updates: தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE

Background
தடுப்பூசி கோரிய உலகளாவிய டெண்டரில் யாரும் பங்கேற்கவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
நீலகிரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்கள் அவர்களே தடுப்பூசியை வாங்கிக்கொள்ள உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த டெண்டர் நேற்றோடு நிறைவு பெற்றது. இதில் யாரும் பங்கேற்காததால் மறு டெண்டர் விடுத்து, தடுப்பூசியை நாமே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழ்நாடு அரசுக்கு குத்தகைக்கு விட வேண்டும் என தொழில்துறை அமைச்சர் டெல்லிக்கு சென்று தொடர்புடைய அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. கால அவகாசம் கேட்டுள்ளனர். பயோடெக் நிறுவனத்தினரும் ஆய்வு செய்துள்ளனர். இதில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.
தமிழ்நாட்டில் 21 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 20 ஆயிரத்து 421 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 33 ஆயிரத்து 161 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 434 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 2 ஆயிரத்து 645 நபர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 44 ஆயிரத்து 289 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் கட்டுக்குள் வரத் தொடங்கிய கொரோனா
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக இருந்த டெல்லியில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரத் தொடங்கியது. நேற்று 414 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று டெல்லியில் 381 நபர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், டெல்லியில் கொரோனா பாதிப்பு சதவீதம் 0.5 ஆக குறைந்துள்ளது. நேற்று 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 34 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 1,189 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இறப்பு விகிதமும் 1.72 சதவீதமாக குறைந்துள்ளது. டெல்லியில் இன்றைய நிலவரப்படி, 5 ஆயிரத்து 889 நபர்கள் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது
தமிழக அரசு மேற்கொண்ட கொரோனா தடுப்பு பணிகள் காரணமாக மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கடந்த வாரம் 7 ஆயிரம் என்ற அளவில் இருந்த தினசரி பாதிப்பு தற்போது 2 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு 5 லட்சத்து 15 ஆயிரத்து 18 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா வைரஸ் காரணமாக 7 ஆயிரத்து 425 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு அடைந்தோரில் 4 லட்சத்து 83 ஆயிரத்து 303 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், சென்னையில் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 290 ஆக குறைந்துள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸி மீட்டர் வழங்க சென்னை மாநகராட்சி திட்டம்.
நீரழிவு, ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸி மீட்டர் வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களும், இணைநோய்த்தன்மை உடையவர்களும் மருத்துவ அதிகாரியால் முறையாக மதிப்பிடப்பட்ட பிறகே வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுமதிக்கப்பட வேண்டும். அவ்வாறு, சிகிச்சைப் பெறுபவர்களுக்கு இந்த ஆக்ஸி மீட்டர் வழங்கப்படும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

