மேலும் அறிய

TN Corona LIVE Updates : மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும் இ-பாஸ் பதிவு முறை - தமிழக அரசு

அரசு பேருந்துகளில் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். 

LIVE

Key Events
TN Corona LIVE Updates : மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும் இ-பாஸ் பதிவு முறை - தமிழக அரசு

Background

Tamil Nadu Corona Virus News:  இ-சஞ்ஜீவனி தொலை மருத்துவ சேவையின் தளத்தின் வாயிலாக ஏறத்தாழ 50 லட்சம் நோயாளிகள் பயனடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.  கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பொதுமுடக்கத்தின் காரணமாக மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தடைப்பட்டிருந்த காலகட்டத்தில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இ-சஞ்ஜீவனி தொலை மருத்துவ சேவையில் 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு ஆலோசனைகளை வழங்கி தமிழ்நாடு முதல் மாநிலமாகத் திகழ்கிறது.

மாடர்னா, ஃபைசர் போன்ற வெளிநாட்டு தடுப்பூசிகள் எளிதாக இறக்குமதி செய்வதற்கு ஏதுவாக அவற்றின் உற்பத்தியாளர்களை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி கோருமாறு இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அரசு பேருந்துகளில் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். 

20:02 PM (IST)  •  14 May 2021

தமிழகத்தில் 32 ஆயிரத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று 31 ஆயிரத்து 892 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 லட்சத்து 31 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 4 லட்சத்து 19 ஆயிரத்து 261 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனாவால் 288 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்கள் 20 ஆயிரத்து 37 நபர்கள்.

19:58 PM (IST)  •  14 May 2021

டீ கடைகள் இயங்க அனுமதி இல்லை - தமிழக அரசு அதிரடி

காய்கறி, மளிகை, பலசரக்கு, மீன் இறைச்சி கடைகள் நாளை முதல் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும் இ-பாஸ் பதிவு அவசியம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

19:48 PM (IST)  •  14 May 2021

காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் 6 முதல் 10 வரை மட்டுமே இயங்கி அனுமதி..

காய்கறி, மளிகை, பலசரக்கு, மீன் இறைச்சி கடைகள் நாளை முதல் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளித்துள்ளது  தமிழக அரசு

18:26 PM (IST)  •  14 May 2021

செலுத்தப்பட்டது முதல் ஸ்புட்னிக் தடுப்பூசி: ஒரு ஊசியின் விலை 995 ரூபாய்!

ரஷ்யாவிலிருந்து இந்தியா வந்து சேர்ந்த ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி முதன்முதலில் டாக்டர் ரெட்டி லெபாரட்டரியில் செலுத்தப்பட்டது. அந்த நிறுவனத்தின் தீபக் சாப்ரா ஐதராபாத்தில் இதனைச் செலுத்திக்கொண்டார். இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் இந்த ஸ்புட்னிக் தடுப்பூசி ஒன்றன் விலை 995 ரூபாய். வரும் வாரங்களில் பொதுமக்களுக்குச் செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

17:21 PM (IST)  •  14 May 2021

கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கான உதவி எண்கள் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பல்வேறு மட்டத்திலும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி போன்ற குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் கொரோனா கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கான உதவி எண்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு – 044-27427412, 2742 7414, 1800-425-7088, 1077, சென்னை – 98844 69375, 044- 4612 2300, 2538 4520, காஞ்சிபுரம் – 044- 2723 7107, 2723 7207, கோவை – 0422 – 2306 051, 230 6052, 230 6053, 230 0295, 230 0296

13:34 PM (IST)  •  14 May 2021

கள்ளச் சந்தையில் விற்போர் மீது கடும் நடவடிக்கை தேவை - பிரதமர் நரேந்திர மோடி

ஆக்சிஜன் மற்றும் கொரோனா அத்தியாவசிய மருந்துகளை  கள்ளச் சந்தையில் விற்போர் மற்றும் பதுக்கல்காரர்கள் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினர்

13:26 PM (IST)  •  14 May 2021

ஜூன் 1ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தம் - தெற்கு ரயில்வே

போதிய பயனாளிகள் இல்லாத காரணத்தினால், ஜூன் 1ம் தேதி வரை சில சிறப்பு ரயில்களை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதசாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

 

12:54 PM (IST)  •  14 May 2021

நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா கொரோனா நிதி அளித்தார்

அபாக்ஸ் லெபரட்ரீஸ் ( சவுந்தர்யா ரஜினிகாந்தின் கணவர் மருந்தக நிறுவனம் ) சார்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய்  கொரோனா நிவாரண நிதியை  தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தார். அவரின் கணவர் உடனிருந்தார்.

12:34 PM (IST)  •  14 May 2021

திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதிக்கு வழங்குகிறார்கள்

கொரோனா இரண்டாவது அலையால், தமிழகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற  - நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக வழங்குவார்கள் என்று தமிழக முதல்வரும் அக்கட்சியின் தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

12:26 PM (IST)  •  14 May 2021

நடிகர் அஜித் குமார் ரூ.25 லட்சம் கொரோனா நிதி அளித்தார்

தமிழ்நாட்டின் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக நடிகர் அஜித்குமார் ரூ.25 லட்சம்  நிதியுதவி அளித்துள்ளார். வங்கி பரிவர்த்தனை மூலம் கொரோனா நிவாரணத்துக்கு இந்த நிதியை அவர் அனுப்பியுள்ளார்.  

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு
PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு
இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் பரபர உத்தரவு! பெருமூச்சி விட்ட இபிஎஸ்! ஓபிஎஸ்க்கு பின்னடைவு!
இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் பரபர உத்தரவு! பெருமூச்சி விட்ட இபிஎஸ்! ஓபிஎஸ்க்கு பின்னடைவு!
The Goat Life Review: பாலைவனத்தில் போராடும் சாமானியன் - ஆடு ஜீவிதம் படத்தின் முழு விமர்சனம்!
The Goat Life Review: பாலைவனத்தில் போராடும் சாமானியன் - ஆடு ஜீவிதம் படத்தின் முழு விமர்சனம்!
CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

TRB Rajaa slams Annamalai : ”நான் என்ன ஈசலா? அண்ணாமலையை விளாசும் TRB ராஜாGaneshamurthi Death : ஈரோடு மதிமுக MP கணேசமூர்த்தி காலமானார்SP Velumani : ”அ.மலை பத்தி கவலை இல்லபாஜக கணக்குலயே இல்ல” SP வேலுமணி ஆவேசம்Annamalai Asset : 51 ஏக்கர் நிலம்! அண்ணாமலை சொத்து பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு
PhD Admission: இனி பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு; யுஜிசி அறிவிப்பு
இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் பரபர உத்தரவு! பெருமூச்சி விட்ட இபிஎஸ்! ஓபிஎஸ்க்கு பின்னடைவு!
இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையம் பரபர உத்தரவு! பெருமூச்சி விட்ட இபிஎஸ்! ஓபிஎஸ்க்கு பின்னடைவு!
The Goat Life Review: பாலைவனத்தில் போராடும் சாமானியன் - ஆடு ஜீவிதம் படத்தின் முழு விமர்சனம்!
The Goat Life Review: பாலைவனத்தில் போராடும் சாமானியன் - ஆடு ஜீவிதம் படத்தின் முழு விமர்சனம்!
CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
CJI Chandrachud: ”அச்சுறுத்தலில் நீதித்துறை” - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய 600 வழக்கறிஞர்கள்
Breaking News LIVE : முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 4 நாட்கள் காவல் நீடிப்பு..!
Breaking News LIVE : முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 4 நாட்கள் காவல் நீடிப்பு..!
Clever trailer launch: புதுசா இருக்கே! இரண்டு நாய்கள் மட்டுமே நடித்துள்ள 'கிளவர்' திரைப்படம் - ட்ரெயிலர் ரிலீஸ்
Clever trailer launch: புதுசா இருக்கே! இரண்டு நாய்கள் மட்டுமே நடித்துள்ள 'கிளவர்' திரைப்படம் - ட்ரெயிலர் ரிலீஸ்
Election King: 238 முறை தோல்வி! ஜனநாயக திருவிழாவில் பங்கேற்கும் 'எலெக்சன் கிங்'  - யார் இந்த பத்மராஜன்?
238 முறை தோல்வி! ஜனநாயக திருவிழாவில் பங்கேற்கும் 'எலெக்சன் கிங்' - யார் இந்த பத்மராஜன்?
ABP Mahabharat Express : நாட்டின் நாடிக்கணிப்பை அறிய புறப்படுகிறது ABP குழுமத்தின் மகா பாரத் எக்ஸ்பிரஸ் பேருந்து..!
நாட்டின் நாடிக்கணிப்பை அறிய புறப்படுகிறது ABP குழுமத்தின் மகா பாரத் எக்ஸ்பிரஸ் பேருந்து..!
Embed widget