மேலும் அறிய

Surat: 8 வது மாடி.. பால்கனியில் விளையாடிய குழந்தை.. பதைபதைக்க வைத்த சம்பவம்!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் 8வது மாடியிலிருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் 8வது மாடியிலிருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. பதைபதைக்க வைக்கும் இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களிலும் வெளியாகியுள்ளது.மிஹிர் தேவ் என்ற 2 வயது குழந்தை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.

அந்தக் குழந்தையின் வீடு 8வது மாடியில் உள்ளது. கடந்த வியாழக்கிழமை மதியம் 2.15 மணியளவில், வீட்டில் அனைவரும் அவரவர் வேலையில் இருந்தனர். அப்போது அந்தக் குழந்தை பால்கனியில் இருந்த கம்பியில் ஏறியுள்ளது. கம்பி வழியாக கீழே குனிந்து பார்க்க முயன்றுள்ளது. அப்போது இரண்டு கிரில்களுக்கு இடையே அந்தக் குழந்தை தவறி விழுந்தது. 70 அடி உயரத்திலிருந்து குழந்தை தவறி விழந்தது. முதல் மாடியின் சீலிங்கில் குழந்தை விழுந்து மோதியது. இந்தக் காட்சிகள் அத்தனையுமே சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அக்கம்பக்கத்தினர் தான் இந்தச் சம்பவம் குறித்து மிஹிரின் குடும்பத்தாரிடம் தெரிவித்தனர். அதுவரை குழந்தையைப் பற்றி தெரியாமலேயே அவரவர் அவர்களின் வேலையில் இருந்துள்ளனர்.

குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல மருத்துவர்களோ குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டில் ஒரு பூஜை நடந்து கொண்டிருந்தது. அதனால் அனைவரும் அதில் கவனமாக இருந்தோம். குழந்தையும் வீட்டுக்குள் தான் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தது. ஆனால், எப்படி குழந்தை பால்கனிக்கு போனது என்பதை நாங்கள் கவனிக்கவில்லை என்று குடும்பத்தார் கூறியுள்ளனர்.

சென்னை சோகம் தீர்வதற்குள் சூரத் சம்பவம்:

அண்மையில் தான் இதுபோன்ற சம்பவம் சென்னையில் நடந்தது. சென்னை மண்ணடி, இப்ராகிம் சாஹிப் 2-வது தெருவைச் சேர்ந்த செல்வகனி - யாசின் தம்பதி.  அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் வசித்து வருகின்றனர். இவர்களது மூன்றாவது குழந்தையான ஆபியா  பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தார். தாய் யாசின் சமையல் வேலையை கவனிப்பதற்காக, மூத்த மகளிடம் குழந்தையை பார்த்துக் கொள்ளும்படி கூறி விட்டு உள்ளே சென்றுள்ளார்.

ஆனால் சிறிது நேரத்தில் குழந்தையின் சகோதரியும் வீட்டிற்குள் சென்றுவிட்டாள். அந்த வேளையில், குழந்தை ஆபியா இரண்டடி உயரமுள்ள பால்கனி தடுப்பின் மீது மேலே ஏறியதாகவும், எதிர்பாராதவிதமாக கால் இடறி அங்கிருந்து கீழே விழுந்துள்ளது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குழந்தை 2 மணி நேரத்தில் இறந்தது.

குழந்தைகளை வளர்ப்பது என்பதும் ஒரு கலையே. நமக்கு சில நேரங்களில் சோர்வு கூட ஏற்படலாம் ஆனால், குழந்தைகள் மீது எப்போதும் ஒரு கண் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் விபரீதங்கள் நிச்சயம் நடக்கும் என்பதற்கு இதுபோன்ற சம்பவங்கள் தான் உதாரணம். குறிப்பாக பால்கனிகளில் குழந்தைகளைத் தனியாக விடுவது எப்போதுமே ஆபத்தானது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நேருக்கு நேர் பிரதமர் மோடி - ராகுல் திடீர் சந்திப்பு! வெளியானது முக்கிய வீடியோ - இருவருக்கும் இடையே நடந்தது என்ன?
நேருக்கு நேர் பிரதமர் மோடி - ராகுல் திடீர் சந்திப்பு! வெளியானது முக்கிய வீடியோ - இருவருக்கும் இடையே நடந்தது என்ன?
நோ பணம்.. இனி டிஜிட்டல் பேமெண்ட் தான்.. சுங்கச்சாவடியில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்
நோ பணம்.. இனி டிஜிட்டல் பேமெண்ட் தான்.. சுங்கச்சாவடியில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்
Top 10 News Headlines: 72 நாட்கள் விஜயை காணவில்லை.. அதிர்ச்சியில் ரஜினிகாந்த்.. டிரம்ப் கிண்டல்
Top 10 News Headlines: 72 நாட்கள் விஜயை காணவில்லை.. அதிர்ச்சியில் ரஜினிகாந்த்.. டிரம்ப் கிண்டல்
ரயில்வே பாதுகாப்பில் புதிய புரட்சி! இன்டர்லாக் சிஸ்டம், தானியங்கி கேட் மூடும் வசதி! விபரம் இதோ!..
ரயில்வே பாதுகாப்பில் புதிய புரட்சி! இன்டர்லாக் சிஸ்டம், தானியங்கி கேட் மூடும் வசதி! விபரம் இதோ!..
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: கடலூர் பிரச்சாரம் திடீர் ரத்து; தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்- என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
TVK Vijay: கடலூர் பிரச்சாரம் திடீர் ரத்து; தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்- என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
US Iran War Hormuz: சொந்த காசில் சூனியம்.! கண்ணிவெடிகளால் வந்த சிக்கல்; ஹார்முஸை திறக்க முடியாமல் தவிக்கும் ஈரான்
சொந்த காசில் சூனியம்.! கண்ணிவெடிகளால் வந்த சிக்கல்; ஹார்முஸை திறக்க முடியாமல் தவிக்கும் ஈரான்
திமுக கூட்டணியில் திருமாவளவன் கூனிக் குறுகி நிற்கிறார்...! அன்புமணி ராமதாஸ் அதிரடித் தாக்கு!
திமுக கூட்டணியில் திருமாவளவன் கூனிக் குறுகி நிற்கிறார்...! அன்புமணி ராமதாஸ் அதிரடித் தாக்கு!
Parthiban: சீமானுக்கு தொண்டை காயும்.. மண்டை காயாது.. ரைமிங்கில் பேசிய பார்த்திபன்!
Parthiban: சீமானுக்கு தொண்டை காயும்.. மண்டை காயாது.. ரைமிங்கில் பேசிய பார்த்திபன்!
TN Election: தேர்தல் நேரத்தில் மட்டும் தினம் தினம் வர்றீங்க? டெய்லியும் மக்களை பாக்க வரலாமே?
TN Election: தேர்தல் நேரத்தில் மட்டும் தினம் தினம் வர்றீங்க? டெய்லியும் மக்களை பாக்க வரலாமே?
வாய்ப்பு கொடுத்தும் கோட்டைவிட்ட தவெக! அதிருப்தியில் தொண்டர்கள்.. ரத்தான கடலூர் பிரச்சாரம்
வாய்ப்பு கொடுத்தும் கோட்டைவிட்ட தவெக! அதிருப்தியில் தொண்டர்கள்.. ரத்தான கடலூர் பிரச்சாரம்
கம்பம் தவெக வேட்பாளருக்கு நடிகர் பொன்னம்பலம் வாக்கு சேகரிப்பு – விஜய் குறித்து பேசிய வீடியோ வைரல்
கம்பம் தவெக வேட்பாளருக்கு நடிகர் பொன்னம்பலம் வாக்கு சேகரிப்பு – விஜய் குறித்து பேசிய வீடியோ வைரல்
Chennai New Commissioner: அருண் மாற்றம்! சென்னைக்கு புது காவல் ஆணையர் - யார் இந்த அபின் தினேஷ் மோடக்?
Chennai New Commissioner: அருண் மாற்றம்! சென்னைக்கு புது காவல் ஆணையர் - யார் இந்த அபின் தினேஷ் மோடக்?
Embed widget