மேலும் அறிய

Surat: 8 வது மாடி.. பால்கனியில் விளையாடிய குழந்தை.. பதைபதைக்க வைத்த சம்பவம்!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் 8வது மாடியிலிருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் 8வது மாடியிலிருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. பதைபதைக்க வைக்கும் இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களிலும் வெளியாகியுள்ளது.மிஹிர் தேவ் என்ற 2 வயது குழந்தை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.

அந்தக் குழந்தையின் வீடு 8வது மாடியில் உள்ளது. கடந்த வியாழக்கிழமை மதியம் 2.15 மணியளவில், வீட்டில் அனைவரும் அவரவர் வேலையில் இருந்தனர். அப்போது அந்தக் குழந்தை பால்கனியில் இருந்த கம்பியில் ஏறியுள்ளது. கம்பி வழியாக கீழே குனிந்து பார்க்க முயன்றுள்ளது. அப்போது இரண்டு கிரில்களுக்கு இடையே அந்தக் குழந்தை தவறி விழுந்தது. 70 அடி உயரத்திலிருந்து குழந்தை தவறி விழந்தது. முதல் மாடியின் சீலிங்கில் குழந்தை விழுந்து மோதியது. இந்தக் காட்சிகள் அத்தனையுமே சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அக்கம்பக்கத்தினர் தான் இந்தச் சம்பவம் குறித்து மிஹிரின் குடும்பத்தாரிடம் தெரிவித்தனர். அதுவரை குழந்தையைப் பற்றி தெரியாமலேயே அவரவர் அவர்களின் வேலையில் இருந்துள்ளனர்.

குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல மருத்துவர்களோ குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டில் ஒரு பூஜை நடந்து கொண்டிருந்தது. அதனால் அனைவரும் அதில் கவனமாக இருந்தோம். குழந்தையும் வீட்டுக்குள் தான் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தது. ஆனால், எப்படி குழந்தை பால்கனிக்கு போனது என்பதை நாங்கள் கவனிக்கவில்லை என்று குடும்பத்தார் கூறியுள்ளனர்.

சென்னை சோகம் தீர்வதற்குள் சூரத் சம்பவம்:

அண்மையில் தான் இதுபோன்ற சம்பவம் சென்னையில் நடந்தது. சென்னை மண்ணடி, இப்ராகிம் சாஹிப் 2-வது தெருவைச் சேர்ந்த செல்வகனி - யாசின் தம்பதி.  அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் வசித்து வருகின்றனர். இவர்களது மூன்றாவது குழந்தையான ஆபியா  பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தார். தாய் யாசின் சமையல் வேலையை கவனிப்பதற்காக, மூத்த மகளிடம் குழந்தையை பார்த்துக் கொள்ளும்படி கூறி விட்டு உள்ளே சென்றுள்ளார்.

ஆனால் சிறிது நேரத்தில் குழந்தையின் சகோதரியும் வீட்டிற்குள் சென்றுவிட்டாள். அந்த வேளையில், குழந்தை ஆபியா இரண்டடி உயரமுள்ள பால்கனி தடுப்பின் மீது மேலே ஏறியதாகவும், எதிர்பாராதவிதமாக கால் இடறி அங்கிருந்து கீழே விழுந்துள்ளது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குழந்தை 2 மணி நேரத்தில் இறந்தது.

குழந்தைகளை வளர்ப்பது என்பதும் ஒரு கலையே. நமக்கு சில நேரங்களில் சோர்வு கூட ஏற்படலாம் ஆனால், குழந்தைகள் மீது எப்போதும் ஒரு கண் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் விபரீதங்கள் நிச்சயம் நடக்கும் என்பதற்கு இதுபோன்ற சம்பவங்கள் தான் உதாரணம். குறிப்பாக பால்கனிகளில் குழந்தைகளைத் தனியாக விடுவது எப்போதுமே ஆபத்தானது.

தலைப்பு செய்திகள்

டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறினால் இனி தப்ப முடியாது!!! ஜூலை 1 முதல் புதிய சட்டம்!..
டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறினால் இனி தப்ப முடியாது!!! ஜூலை 1 முதல் புதிய சட்டம்!..
Top 10 News Headlines: உலக யோகா தினம் கொண்டாட்டம்.. வெளுத்து வாங்கிய சூர்யவன்ஷி.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: உலக யோகா தினம் கொண்டாட்டம்.. வெளுத்து வாங்கிய சூர்யவன்ஷி.. 11 மணி செய்திகள் இதோ!
NEET Re Test : நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
PhonePe வாலட் ஆக்டிவாக வைத்துக் கொள்வது எப்படி? பராமரிப்பு கட்டணத்திலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள்!
PhonePe வாலட் ஆக்டிவாக வைத்துக் கொள்வது எப்படி? பராமரிப்பு கட்டணத்திலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள்!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Pocso: நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
CM Vijay Bday: பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
TN Weather Update: மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
Embed widget