மேலும் அறிய

"இதை ஏன் வெளியிட்டீங்க; அதிகாரம் இருக்கிறதா?" - பிகார் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

கடந்த 2ஆம் தேதி, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவரங்களை பிகார் அரசு வெளியிட்டது.

பிகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த நிதிஷ் குமார் தலைமையிலான அரசு முடிவெடுத்து, இரண்டு கட்டங்களாக அதற்கான பணிகளை மேற்கொண்டது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு அதிகாரமில்லை என கூறி, பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிகார் அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா?

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிகார் அரசுக்கு உரிமை உள்ளதாக தெரிவித்தது. இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதற்கிடையே, கடந்த 2ஆம் தேதி, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவரங்களை பிகார் அரசு வெளியிட்டது. இந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிகார் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என். பட்டி ஆகியோர் கொண்ட அமர்வு, "இந்த விவகாரத்தில் சில விஷயங்களை பரிசீலிப்பது தேவைப்படுகிறது. இதற்கு எங்களுக்கு நேரம் எடுக்கும். ஆனால், இதை ஏன் வெளியிட்டீர்கள்?” என பிகார் அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞரை நோக்கி கேள்வி எழுப்பியது.

சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடை விதிக்க மறுப்பு:

பிகார் அரசின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், இதற்கு பதில் அளிக்கையில், "இந்த வழக்கில் நோட்டீஸ் பிறப்பிக்கலாமா? வேண்டாமா? என்பதை முதலில் நீதிமன்றம் முடிவு செய்யும் என்று நீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டது" என்றார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி எஸ்.வி.என். பட்டி, "எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கமாட்டோம். ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பதை ஆராய்வோம். இந்த நேரத்தில் நாங்கள் எதற்கும் தடை விதிக்க விருப்பமில்லை. அவர்கள் பதில் மனுவை தாக்கல் செய்யட்டும்.

மாநில அரசு அல்லது எந்த அரசும் முடிவெடுப்பதை எங்களால் தடுக்க முடியாது. அது தவறாகிவிடும். சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான தரவில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அது பரிசீலிக்கப்படும். இதில், மாநில அரசாங்கத்தின் அதிகாரம் தொடர்பான மற்ற பிரச்சினையை நாங்கள் ஆராயப் போகிறோம்" என்றார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபராஜிதா சிங், "இந்தத் தரவுகள் சட்டவிரோதமாகச் சேகரிக்கப்பட்டதால் அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. உயர்நீதிமன்றம் விரிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனால், அது சட்டத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் தவறானது. இந்த நீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட சட்டத்தின் கீழ் தரவு சேகரிக்கப்படவில்லை. கே.எஸ்.புட்டசாமி தீர்ப்பில் கூறப்பட்டுள்ளபடி, நிர்வாக உத்தரவுக்கு கூட ஒரு முறையான நோக்கம் இல்லை" என வாதிட்டார்.

இதற்கு பதில் அளித்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, "பல முறை ஆராயப்படும் என அரசு தரப்பு கூறுகிறது. ஆனால், பொதுவாக வெளிவரும் கேள்வி என்னவென்றால், முழுமையான தரவுகளை வெளியிட வேண்டுமா? வேண்டாமா? என்பதுதான்" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

"மோடி நடவடிக்கை எடுப்பார்.. மாணவர்கள் வீட்டுக்கு போங்க.." சல்மான்கான் அட்வைஸ்
நீட் தேர்வு விவகாரம்: டெல்லியில் போராட்டம் தீவிரம்.. தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்? முழு விவரம்!
நீட் தேர்வு விவகாரம்: டெல்லியில் போராட்டம் தீவிரம்.. தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்? முழு விவரம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் கனிமொழி..தமிழ்நாடு நீட் எதிர்ப்பு பற்றி கம்பீரமான பேச்சு
டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் கனிமொழி..தமிழ்நாடு நீட் எதிர்ப்பு பற்றி கம்பீரமான பேச்சு

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
Embed widget