மேலும் அறிய

NDA Exam 2021 : 'மைண்ட்செட்தான் பிரச்சனை’ தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் பெண்களை அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்த இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு  அறிவிப்பை உடனடியாக வெளியிட  வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.      

வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி எழுத்துத் தேர்வில், பெண்களுக்கு வாய்ப்பு மறுக்கக் கூடாது என்று இந்திய உச்சநீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது. இதுநாள் வரையில், திருமணமாகாத ஆண்கள் மட்டுமே  இந்த எழுத்துத் தேர்வுக்கு தகுதியுடையவர்களாக இருந்தனர்.     

மைண்ட்செட்தான் பிரச்சனை: 

நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.   

முன்னதாக, இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்தி மத்திய அரசு, " இது நிர்வாக ரீதியிலான முடிவு என்பதால், நீதிமன்றங்களின் தலையீடு தேவையில்லை. தேசியப் பாதுகாப்பு அகாடமி தேர்வில் வாய்ப்பு மறுக்கப்படுவதால், ராணுவத்தில் பெண்கள் நியமனம் குறைவதாக கருதமுடியாது" என்று தெரிவித்தது. 

இதற்கு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையத்தை அமைப்பதற்கான தீர்ப்பை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வழங்கிய பின்னரும் ஏன் இந்திய அரசின் அணுகுமுறையில் மாற்றம் வரவில்லை. நீதிமன்றங்கள் உத்தரவிட்டால் தான், அரசு நடவடிக்கை எடுக்குமா? நான் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த காலம் தொட்டே இந்த போக்கு காணப்படுகிறது என்று வேதனை அடைந்தார்.                 

இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகள் நிரந்தர ஆணையத்துக்கு மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளதாக  இந்திய கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாட்டே கூறினார். இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், " இந்த பெருமை உங்களை சேராது. நீங்கள் கடைசி வரை எதிர்ப்பு மனநிலையில் தான் இருந்தீர்கள். நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்த காரணத்தினால் தான்  பெண் அதிகாரிகளுக்கான  நிரந்தர ஆணையம் சாத்தியமானது. இந்திய கடற்படை, இந்திய விமானப் படையில் உத்தரவுகள் நடைமுறைப் படுத்தி வருகின்றன. இந்திய ராணுவத்தில் இதுவரை ஆயுதப்படை, காலாட்படை, எந்திரவியல் படை, பீரங்கிப் படை ஆகியவற்றில் பெண்கள் நியமிக்கப்பட்டதில்லை. பெண்களுக்கான நிரந்தர ஆணையத்தை செயல்படுத்தவும் முன்வரவில்லை" என்று தெரிவித்தார்.     

தேசியப் பாதுகாப்பு அகாடமி: தேசியப் பாதுகாப்பு அகாடமி  இந்திய இராணுவத்தின் முப்படைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கும் நிறுவனமாகும். 1954-இல் துவக்கப்பட்ட இந்த இராணுவப் பயிற்சி அகாடமி, மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தில் உள்ள கடக்வாஸ்லாவில் செயல்படுகிறது.

தேசியப் பாதுகாப்பு அகாடமியின் தரைப்படைப் பிரிவில் தேறிய மாணவர்கள் டேராடூனில் உள்ள இந்திய இராணுவ அகாதமியில் ஓராண்டு பயிற்சிக்குப் பின்னர் அதிகாரி எனும் தகுதி வழங்கப்படும். அதே போன்று விமானப்படைப் பிரிவில் பயிற்சி முடித்த மாணவர்கள் ஐதராபாத்தில் உள்ள இந்திய வான்படை அகாடமியில் ஓராண்டு பயிற்சி நிறைவு செய்ய வேண்டும். கப்பல் படை பயிற்சி முடித்தவர்கள் கேரளா மாநிலத்தின் எழிமலை எனுமிடத்தில் அமைந்த இந்தியக் கடற்படை அகாடமியில் ஓராண்டு பயிற்சி பெற வேண்டும்.

செப்டம்பர் 5-ஆம் தேதி தேர்வு: முன்னதாக, தேசிய பாதுகாப்பு அகாடமியின் 148-வது பாடநெறிக்கான இராணுவம், கடற்படை மற்றும் விமான படையில் சேர்வதற்கும், 110-வது இந்திய கடற்படை அகாடமி பாடநெறிக்கான கடற்படை அகாடமியில் சேர்வதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் கடந்த கடந்த ஜூன 29-ஆம் தேதி வெளியிட்டது. வரும், செப்டம்பர் 5-ஆம் தேதி தேசியளவில் எழுத்துத் தேர்வு   நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.   

இந்த இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் திருத்தப்பட்ட ஆட்சேர்ப்பு  அறிவிப்பை உடனடியாக வெளியிட  வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.      

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget