மேலும் அறிய

"இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு: இந்து மதத்தில் மதவெறி இல்லை" - உச்ச நீதிமன்றம் கருத்து..!

"இந்து என்பது ஒரு மதம் அல்ல, ஒரு வாழ்க்கை முறை. இந்து மதத்தில் மதவெறி இல்லை. ஒற்றுமையின்மையை உருவாக்கக்கூடிய கடந்த காலத்தை தோண்டி எடுக்க வேண்டாம்"

படையெடுப்பாளர்களின் பெயர்களை கொண்ட அனைத்து நகரங்கள், வரலாற்று தளங்களின் பெயரை மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை, பாஜகவை சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். 

வரலாற்று இடங்களின் பெயரை மாற்றக் கோரி மனு:

காட்டுமிராண்டித்தனமான வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் பெயர்களை கொண்ட பண்டைய வரலாற்று கலாசார மத தளங்களின் உண்மை பெயரை கண்டறிந்து மறுபெயரிட்டு கமிஷனை அமைக்க வேண்டும் என அவர் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த பொது நல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்னா ஆகியோர் கொண்ட அமர்வு, மனு தாக்கல் செய்யப்பட்டதற்கான நோக்கம் குறித்து கேள்வி எழுப்பினர். இது, நாட்டில் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து:

வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், "நாட்டின் வரலாறு அதன் தற்போதைய மற்றும் வருங்கால சந்ததியினரை அச்சமூட்ட கூடாது. இந்து என்பது ஒரு மதம் அல்ல, ஒரு வாழ்க்கை முறை. இந்து மதத்தில் மதவெறி இல்லை. ஒற்றுமையின்மையை உருவாக்கக்கூடிய கடந்த காலத்தை தோண்டி எடுக்க வேண்டாம். நாட்டை கொதிநிலையில் வைத்திருக்க முடியாது.

குறிப்பிட்ட சமூகத்தை பழி சொல்லி நாட்டை கொதிநிலையில் வைத்திருக்க விரும்புகிறீர்களா? நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன? என மனுதாரரை நோக்கி உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

பின்னர் பேசிய நீதிபதி கே.எம். ஜோசப், "ஒரு கட்டத்தில் நாம் என்ன செய்தோம் என்பதை நீங்கள் பின்னர் உணர்வீர்கள். இந்த நீதிமன்றம் அழிவை உருவாக்கும் கருவியாக மாறக்கூடாது. வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நகரங்கள் இன்று இல்லை. நமக்கு மத உரிமை உண்டு.

மெட்டாபிசிக்ஸ் அடிப்படையில் இந்து மதம் மிக சிறந்த மதம். உபநிடதங்கள், வேதங்கள், பகவத் கீதை போன்றவற்றால் இந்து மதத்தின் உயரத்திற்கு வேறு எந்த அமைப்பாலும் ஈடு செய்ய முடியாது. அதற்காக நாம் பெருமைப்பட வேண்டும். தயவு செய்து சிறுமைப்படுத்தாதீர்கள்.

இந்து மதம் அல்ல, வாழ்க்கை முறை:

நமது மகத்துவத்தை நாமே புரிந்து கொள்ள வேண்டும். நமது மகத்துவம் நம்மைப் பெருந்தன்மையுள்ளவர்களாக வழிநடத்த வேண்டும். நான் ஒரு கிறிஸ்துவர். ஆனால், எனக்கு இந்து மதத்தின் மீது அவ்வளவு பற்று உண்டு. அதைப் படிக்க முயற்சிக்கிறேன். இந்து தத்துவம் பற்றிய டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணனின் படைப்புகளைப் படித்து பாருங்கள்" என்றார்.

கடந்த 2014ஆம் ஆண்டு, பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே, பல பாரம்பரிய நினைவு சின்னங்கள், இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, இஸ்லாமிய பெயர் கொண்ட இடங்களின் பெயர் மாற்றப்பட்டு வருவதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

குடியரசு தலைவர் மாளிகையில் அமைந்துள்ள தோட்டத்திற்கு அமிர்த உத்யன் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெயர் மாற்றப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
Embed widget