Pegasus | பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம்: வல்லுநர் குழுவை அமைக்க முன்வந்த உச்சநீதிமன்றம் ..
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் உண்மைத்தன்மையைக் கண்டறிய சுயாதீன வல்லுநர் குழுவை அமைக்கும் உத்தரவை இந்த வாரமே வழங்கியிருந்தோம்

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாராத்தில் சுயாதீன வல்லுநர் குழுவை அமைக்கும் உத்தரவை அடுத்த வாரம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெகாசஸ் விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா, "பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாராத்தில் உண்மை தன்மையைக் கண்டறிய சுயாதீன வல்லுநர் குழுவை அமைக்கும் உத்தரவை இந்த வாரமே வழங்கயிருந்தோம். இருந்தாலும், குழு உறுப்பினர்கள் சிலர் தனிப்பட்ட காரணங்களால் இணைந்துக் கொள்ளமுடியாது சூழ்நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன், குழு உறுப்பினர்களை விரைவில் இறுதி செய்தி உத்தரவுகளை அளிப்போம்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, பெகாசஸ் போன்ற உளவு மென்போருளை அரசாங்கம் பயன்படுத்துகிறதா? இல்லையா? போன்ற தகவல்களை உறுதி மொழி பத்திரத்தில் தெரிவிக்க முடியாது என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பெகாசஸ் வழக்கின் இடைக்கால தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தது.
பெகாசஸ் வழக்கு ஒட்டுக்கேட்பு: இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர், புகழ்பெற்ற வழக்கறிஞர்கள், மத்திய அமைச்சர்கள், ஊடகங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என 300-க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்கள் பெகசஸ் உளவுச் செயலியால் உளவு பார்க்கப்பட்டிருக்லாம் என 'pegasus Project" தெரிவித்தது.
ஒட்டுக்கேட்கவே இல்லை: பெகாசஸ் சர்ச்சையில் மத்திய அரசு பதில் மனு தாக்கல்..!
இதையொட்டி, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாராத்தில் சுயாதீன விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளார் ராம் மற்றும் சிலர் (N Ram & Ors v. Union of India) உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
மத்திய அரசு வாதம்: கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் இரண்டு பக்க பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், பெகசஸ் உளவு மென்பொருள் மூலம் போன் ஒட்டு கேட்பு புகாருக்கு ஆதாரம் இல்லை. பெகசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி சில நபர்களின் தொலைபேசிகள் வேவு பார்க்கப்படுவதாக வெளியான செய்திகளில் உண்மைத்தன்மை இல்லை.

பெகாசஸ் போன்ற உளவு மென்பொருட்களை அரசாங்கம் பயன்படுத்துகிறதா? இல்லையா? போன்ற தகவல்களை பொதுவெளியில் வெளியிடுவது தேசிய பாதுகாப்பு, குறிப்பாக பொது அவசரம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை சமரசம் செய்வதாக அமைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக் குழு அமைக்க தயாராக இருக்கிறோம்: ஒரு பொறுப்பான அரசாங்கம் என்ற முறையில் தகுதி வாய்ந்த நடுநிலை நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைப்போம் என்று உச்சநீதிமன்றத்தில் துஷார் மேத்தா தெரிவித்தார். அதன் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம். தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடு அல்ல. ஆனால், அதை நிபுணர்கள் குழுவிடம் சமர்பிக்கவே விரும்புகிறோம். பொது வெளியில் அல்ல. எனவே, நிபுணர் குழுவை உருவாக்க அனுமதி கோருகிறோம் என்று துஷார் மேத்தா தாக்கல் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் தனி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் குறித்து மத்திய அரசு பதில் அளிக்கக் கோரி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் (Pre admission Notice) அனுப்பியது.

இருப்பினும், தேசப் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ள நாங்கள் விரும்பவில்லை. ஆனால், பொது வாழ்கையில் ஒப்புயர்வற்ற நிலையில் இருக்கும் சிலர் தங்கள் தொலைபேசி எண்கள் பெகசஸ் உளவுச் செயலியால் உளவு பார்க்கப்பட்டிருக்லாம் என்று புகாரளித்துள்ளனர் என்று தெளிவுபடுத்தியது. இதனையடுத்து, கடந்த 13ம் தேதி இந்த வழக்கு விசாரணையின் போது, விரிவான உறுதி மொழி பத்திரத்தை மத்திய அரசு சமர்பிக்கவில்லை.





















