மேலும் அறிய

`பெண்கள் பிரநிதித்துவம் எங்கே?’ – உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி விமர்சனம்!

பார் கவுன்சில் ஆஃப் இந்தியா நடத்திய நிகழ்ச்சியில், நீதிபதிகள், சட்ட அமைச்சர் கிரண் ரிஜுஜு ஆகியோர் முன்னிலையில் தலைமை நீதிபதி வெளிப்படையாக பிரச்சனைகளைப் பேசியிருப்பது கவனிக்கப்படுகிறது

சில கசப்பான உண்மைகளை உணர்வதாகவும், இந்திய நீதித்துறையில் பெண்களின் இன்னல்களைக் குறித்தும், கடந்த சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சிறப்புரை ஆற்றியுள்ளார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபது என்.வி.ரமணா. பெரும்பாலான பெண் வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலில் கடுமையாக உழைப்பதாகவும், வெறும் சிலரே உயர் பதவிகளை நீதித்துறையில் பெறுவதாகவும் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார் தலைமை நீதிபதி. 

பார் கவுன்சில் ஆஃப் இந்தியா நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரெண் ரிஜுஜு ஆகியோரின் முன்னிலையில் தலைமை நீதிபதி வெளிப்படையாக பிரச்சனைகளை முன்னிறுத்திப் பேசியிருப்பது பலரையும் கவனிக்க வைத்துள்ளது. 

``பெரும்பாலான பெண் வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலில் நெருக்கடிகளைச் சந்திக்கின்றனர். உயர் பதவிகளில் பெண்களின் இடம் மிகக் குறைவாகவே இருக்கிறது. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கழிந்த பிறகு, அனைத்து துறைகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு நிகழ்ந்திருக்கும் என ஒருவர் எதிர்பார்த்தால், அவர் ஏமாந்து போவார். ஏனெனில் உச்சநீதிமன்ற அமர்விலேயே வெறும் 11 சதவிகிதம் பெண்கள் மட்டுமே உள்ளனர். தற்போது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஹிமா கோஹ்லி, பி.வி. நாகரத்னா, பெலா எம். திரிவேதி ஆகிய பெண்கள் மட்டுமே உயர் பதவிகளில் உள்ளனர்” என்று கூறியுள்ளார் தலைமை நீதிபதி எம்.வி.ரமணா. 

`பெண்கள் பிரநிதித்துவம் எங்கே?’ – உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி விமர்சனம்!

``இந்தத் தொழிலில் அனுபவத்தில் மூத்தவர்களுக்கு மதிப்பு வழங்கப்படுகிறது. உங்களை விட அனுபவத்தில் மூத்தவர்களுக்கு அவர்களது அனுபவத்திற்காகவும், அறிவுக்காகவும் மரியாதை வழங்குங்கள். உடன் பணியாற்றும் பெண்களை மதிப்பதோடு, கண்ணியமாக நடத்துங்கள். நீதித்துறையையும், நீதிபதிகளையும் மதியுங்கள். இந்திய நீதித்துறையின் முன்னணியில் இருப்பவர்கள் நீங்கள் என்பதால், நமது துறையைப் பாதுகாப்பது உங்களின் கடமை. நியாயமானவற்றிற்கும், நீதிக்கும் எழுந்து குரல் கொடுங்கள்’’ என்று பார் கவுன்சில் உறுப்பினர்களிடம் உரையாற்றியுள்ளார் தலைமை நீதிபதி என்.வி.ரமணா.

மேலும் அவர், ``இந்திய நீதித்துறையில் கட்டமைப்புக் குறைபாடுகள், நீதிமன்ற நிர்வாகப் பணியாளர் தட்டுப்பாடு, நீதிபதிகள் தட்டுப்பாடு முதலானவை நீடிக்கின்றன. இந்தியாவுக்குத் தேசிய நீதித்துறை உள்கட்டமைப்பு நிறுவனம் என்ற புதிய கட்டமைப்பு தேவைப்படுகிறது. எனது உயர் நீதிமன்றப் பணிக்காலத்தின் போது, பெண்களுக்குக் கழிவறை வசதிகள் இல்லாததையும் நேரில் கண்டுள்ளேன்” என்று கூறியுள்ளார். 

`பெண்கள் பிரநிதித்துவம் எங்கே?’ – உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி விமர்சனம்!

``தற்போது வழக்கறிஞர் தொழிலில் புதிய ட்ரெண்ட் உருவாகியுள்ளது. வாழ்வாதார சிக்கல்கள் காரணமாக, புதிய வழக்கறிஞர்கள் பலரும் கார்ப்பரேட் சட்ட நிறுவனங்களில் பணியில் சேர்வதால், பழைய முறைகள் மாற்றப்பட்டு வருகின்றன. எளிய மக்களால் கார்ப்பரேட் நிறுவனங்கள் விதிக்கும் கட்டணத்தை அளித்து சட்ட உதவி பெற முடியாது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். நீதியை முடிந்தவரை தாமதமின்றி நாம் வழங்கினாலும், இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் நீதிமன்றங்களை நாட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் நாம் சரிசெய்ய வேண்டும்’’ என்றும் கூறியுள்ளார் தலைமை நீதிபதி என்.வி.ரமணா. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget