மேலும் அறிய

நீட் வினாத்தாளில் குழுப்பத்தை ஏற்படுத்திய கேள்வி.. ஐஐடியின் உதவியை நாடிய உச்ச நீதிமன்றம்!

நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், குறிப்பிட்ட கேள்விக்கான விடை தொடர்பாக தங்களை கருத்தை தெரிவிக்க வேண்டும் என ஐஐடி டெல்லிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வில் மோசடி நடந்துள்ளதாக நாடு முழுவதும் பிரச்னை கிளம்பியுள்ளது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என நீட் இளநிலைத் தேர்வில் தொடர் சர்ச்சை எழுந்து வருகின்றன. இதுதொடர்பாக பிகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். 

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில், நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி உச்ச நீதிமன்ற நீதிபதிகளையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால், அவர்கள் ஐஐடி டெல்லியின் உதவியை நாடியுள்ளனர்.

நீதிபதிகளை குழப்பிய நீட் கேள்வி: கடந்த மே மாதம் 5ஆம் தேதி நடந்த நீட் தேர்வில் இயற்பியல் பிரிவில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அணுக்களின் இயல்பு தொடர்பாக இரண்டு வாக்கியங்கள் கொடுக்கப்பட்டிருந்து. இந்த கேள்விக்கு நான்கு ஆப்ஷன்கள் தரப்பட்டிருந்தன. எது சரியானதோ அதை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

"பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் சார்ஜ்களை சம அளவில் கொண்டிருப்பதால், அணுக்கள் எலக்ட்ரிக்கலி நியூட்ரல்" என ஒரு வாக்கத்தியத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. "ஒவ்வொரு தனிமத்தின் அணுக்களும் நிலையானவை. ஒவ்வொன்றும் தனிச்சிறப்பான ஸ்பெக்ட்ரமை வெளியிடுகின்றன" என்பது இரண்டாவது வாக்கியம். 

இரண்டாவது ஆப்ஷனை 4.2 லட்சம் மாணவர்கள் தேர்வு செய்தனர். பழைய என்சிஇஆர்டி புத்தகங்களின்படி, இதுவே சரியானது. நான்காவது ஆப்ஷனை 9.28 லட்சம் மாணவர்கள் தேர்வு செய்தனர். புதிய என்சிஇஆர்டி புத்தகங்களின்படி, இதுவே சரியானது.

உச்ச நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு: பல குளறுபடிகள் நடந்திருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரி வரும் மனுதாரர்கள், இந்த கேள்வி தொடர்பாக நீதிபதிகளிடம் தெரியப்படுத்தினர். ஒரு கேள்விக்கு இரண்டு சரியான பதில்கள் இருக்க முடியாது என்றும் இரண்டு பதில்களுக்கும் முழு மதிப்பெண்ணை வழங்க கூடாது என்றும் அவர்கள் வாதிட்டனர்.

லேட்டஸ்ட் என்சிஇஆர்டி பதிப்பின்படி சரியான கேள்வியை தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்ததாகவும் மனுதாரர்கள் வாதாடினர். இந்த குழப்பமான கேள்விக்கு பதில் அளித்த கருணை மதிப்பெண் வழங்கியதால் 44 மாணவர்கள் நீட் தேர்வில் முழு மதிப்பெண் எடுத்தனர்.

மனுதாரர்களின் வாதத்தை கேட்ட இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், "பழைய என்சிஇஆர்டி பதிப்பை பின்பற்ற மாட்டோம் என கூறிவிட்டு, இரண்டாவது ஆப்ஷனுக்கு மதிப்பெண் வழங்கியதன் மூலம் தங்களின் சொந்த விதிகளை நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மீறியுள்ளது. 

ஐஐடி டெல்லியின் உதவியை நாடிய உச்ச நீதிமன்றம், "சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு தொடர்பாக மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என ஐஐடி டெல்லி இயக்குநருக்கு உத்தரவிடுகிறோம். மேல் குறிப்பிட்ட கேள்விக்கு சரியான ஆப்ஷன் எது என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும். ஜூலை 23ஆம் தேதி மதியத்திற்குள் தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும்" என தெரிவித்தது.

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget