மேலும் அறிய

நீட் வினாத்தாளில் குழுப்பத்தை ஏற்படுத்திய கேள்வி.. ஐஐடியின் உதவியை நாடிய உச்ச நீதிமன்றம்!

நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், குறிப்பிட்ட கேள்விக்கான விடை தொடர்பாக தங்களை கருத்தை தெரிவிக்க வேண்டும் என ஐஐடி டெல்லிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வில் மோசடி நடந்துள்ளதாக நாடு முழுவதும் பிரச்னை கிளம்பியுள்ளது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என நீட் இளநிலைத் தேர்வில் தொடர் சர்ச்சை எழுந்து வருகின்றன. இதுதொடர்பாக பிகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். 

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில், நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி உச்ச நீதிமன்ற நீதிபதிகளையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால், அவர்கள் ஐஐடி டெல்லியின் உதவியை நாடியுள்ளனர்.

நீதிபதிகளை குழப்பிய நீட் கேள்வி: கடந்த மே மாதம் 5ஆம் தேதி நடந்த நீட் தேர்வில் இயற்பியல் பிரிவில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அணுக்களின் இயல்பு தொடர்பாக இரண்டு வாக்கியங்கள் கொடுக்கப்பட்டிருந்து. இந்த கேள்விக்கு நான்கு ஆப்ஷன்கள் தரப்பட்டிருந்தன. எது சரியானதோ அதை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

"பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் சார்ஜ்களை சம அளவில் கொண்டிருப்பதால், அணுக்கள் எலக்ட்ரிக்கலி நியூட்ரல்" என ஒரு வாக்கத்தியத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. "ஒவ்வொரு தனிமத்தின் அணுக்களும் நிலையானவை. ஒவ்வொன்றும் தனிச்சிறப்பான ஸ்பெக்ட்ரமை வெளியிடுகின்றன" என்பது இரண்டாவது வாக்கியம். 

இரண்டாவது ஆப்ஷனை 4.2 லட்சம் மாணவர்கள் தேர்வு செய்தனர். பழைய என்சிஇஆர்டி புத்தகங்களின்படி, இதுவே சரியானது. நான்காவது ஆப்ஷனை 9.28 லட்சம் மாணவர்கள் தேர்வு செய்தனர். புதிய என்சிஇஆர்டி புத்தகங்களின்படி, இதுவே சரியானது.

உச்ச நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு: பல குளறுபடிகள் நடந்திருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரி வரும் மனுதாரர்கள், இந்த கேள்வி தொடர்பாக நீதிபதிகளிடம் தெரியப்படுத்தினர். ஒரு கேள்விக்கு இரண்டு சரியான பதில்கள் இருக்க முடியாது என்றும் இரண்டு பதில்களுக்கும் முழு மதிப்பெண்ணை வழங்க கூடாது என்றும் அவர்கள் வாதிட்டனர்.

லேட்டஸ்ட் என்சிஇஆர்டி பதிப்பின்படி சரியான கேள்வியை தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்ததாகவும் மனுதாரர்கள் வாதாடினர். இந்த குழப்பமான கேள்விக்கு பதில் அளித்த கருணை மதிப்பெண் வழங்கியதால் 44 மாணவர்கள் நீட் தேர்வில் முழு மதிப்பெண் எடுத்தனர்.

மனுதாரர்களின் வாதத்தை கேட்ட இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், "பழைய என்சிஇஆர்டி பதிப்பை பின்பற்ற மாட்டோம் என கூறிவிட்டு, இரண்டாவது ஆப்ஷனுக்கு மதிப்பெண் வழங்கியதன் மூலம் தங்களின் சொந்த விதிகளை நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மீறியுள்ளது. 

ஐஐடி டெல்லியின் உதவியை நாடிய உச்ச நீதிமன்றம், "சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு தொடர்பாக மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என ஐஐடி டெல்லி இயக்குநருக்கு உத்தரவிடுகிறோம். மேல் குறிப்பிட்ட கேள்விக்கு சரியான ஆப்ஷன் எது என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும். ஜூலை 23ஆம் தேதி மதியத்திற்குள் தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும்" என தெரிவித்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதிரடி ஆக்சன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள் !
அதிரடி ஆக்சன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள் !
JUDO: சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள்.! மகிழ்ச்சியில் தேர்வர்கள்..கூடுதல் தகவல்கள்...
TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள்.! மகிழ்ச்சியில் தேர்வர்கள்..கூடுதல் தகவல்கள்...
Kamala vs Trumph Debate: கமலா ஹாரீஸ் - டிரம்ப் பேசிய அந்த முக்கிய 3 பிரச்னைகள்
கமலா ஹாரீஸ் - டிரம்ப் பேசிய அந்த முக்கிய 3 பிரச்னைகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vinesh phogat on PT Usha | ”பாஜகவின் அரசியல்” ஒலிம்பிக்கில் நடந்தது என்ன? வினேஷ் போகத் பகீர்Rahul Gandhi slams PM Modi | ”திறமை இல்லாத மோடி” வெளுத்து வாங்கிய ராகுல்.. தீப்பொறி PressmeetAarti Ravi on Divorce : விவாகரத்து!’’எனக்கே தெரியாது’’ஆர்த்தி ரவி குற்றச்சாட்டுKanimozhi Advice : ”ஏன் இப்படி வர்றீங்க”கனிமொழி அன்பு கட்டளை உடனே OK சொன்ன இளைஞர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிரடி ஆக்சன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள் !
அதிரடி ஆக்சன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள் !
JUDO: சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள்.! மகிழ்ச்சியில் தேர்வர்கள்..கூடுதல் தகவல்கள்...
TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள்.! மகிழ்ச்சியில் தேர்வர்கள்..கூடுதல் தகவல்கள்...
Kamala vs Trumph Debate: கமலா ஹாரீஸ் - டிரம்ப் பேசிய அந்த முக்கிய 3 பிரச்னைகள்
கமலா ஹாரீஸ் - டிரம்ப் பேசிய அந்த முக்கிய 3 பிரச்னைகள்
Actor Jeeva Car Accident: அதிர்ச்சி... கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.. அவருக்கும், மனைவிக்கும் என்ன ஆனது?
அதிர்ச்சி... கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.. அவருக்கும், மனைவிக்கும் என்ன ஆனது?
ABP Nadu Exclusive: முதல்வர் ஸ்டாலின் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை - திருமா பரபரப்பு குற்றச்சாட்டு
முதல்வர் ஸ்டாலின் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை - திருமா பரபரப்பு குற்றச்சாட்டு
Actor Jeeva Accident: அச்சச்சோ! மனைவியுடன் விபத்தில் சிக்கினார் நடிகர் ஜீவா - என்னாச்சு?
Actor Jeeva Accident: அச்சச்சோ! மனைவியுடன் விபத்தில் சிக்கினார் நடிகர் ஜீவா - என்னாச்சு?
அதிமுகவை தொடர்ந்து விஜய்க்கும் அழைப்பு விடுத்த திருமாவளவன் - தமிழக அரசியலில் நடப்பது என்ன?
அதிமுகவை தொடர்ந்து விஜய்க்கும் அழைப்பு விடுத்த திருமாவளவன் - தமிழக அரசியலில் நடப்பது என்ன?
Embed widget