மேலும் அறிய

ஜாலி சிறைவாசம்! ஆம் ஆத்மிக்கு ரூ. 60 கோடி கொடுத்தாரா மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர்? பின்னணி என்ன?

சுகேஷ் சந்திரசேகர், ஆம் ஆத்மிக்கு 60 கோடி ரூபாய் கொடுத்ததாகவும், அதில் மாநிலங்களவை இடத்திற்காக 50 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

சிறையில் பாதுகாப்பாக இருப்பதற்காக டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு மொத்தமாக 10 கோடி ரூபாய் அளித்ததாக மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, சசிகலா, ஓபிஎஸ் அணிகள் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமைகோரியதால், அச்சின்னம் முடக்கப்பட்டது. அப்போது, டெல்லியில் சுகேஷ் சந்தரசேகர் என்பவரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்தனர். அவரிடம், டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க, சசிகலா அணி தரப்பில் குறுக்குவழியில் முயற்சிகள் நடந்ததாகவும் அப்போது, சசிகலா தரப்பு தன்னை தொடர்பு கொண்டதாகவும் அவர் கூறினார். இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க டி.டி.வி.தினகரன் தரப்பில் 60 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் அட்வான்ஸாக ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

அந்த விசாரணையில்தான், அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரிய வந்தது. இதன் பின்னர், அவர் அடைக்கப்பட்டிருந்த டெல்லி ரோகினி சிறையில் உள்ள 80க்கும் மேற்பட்ட சிறை அதிகாரிகளுக்கு சுகேஷ் சந்திரசேகர் லஞ்சம் கொடுத்தது தெரிய வந்தது. சிறைக்குள் இருந்து கொண்டு அவர் சட்டவிரோதமாக வியாபாரம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில்தான், டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு 10 கோடி ரூபாய் அளித்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மறுத்துள்ளார். இதுகுறித்து கெஜ்ரிவால் பேசுகையில், "இந்த குற்றச்சாட்டுகள் தவறானவை.குஜராத் தேர்தல் மற்றும் மோர்பி பாலம் விபத்து ஆகியவற்றில் இருந்து கவனத்தை திசை திருப்பும் நோக்கத்துடன் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் கட்டமைக்கப்பட்ட பொய்கள். அவர்கள் மோர்பி விபத்தில் இருந்து கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். குஜராத் தேர்தலை முன்னிட்டு பீதியில் உள்ளனர். தேர்தல் நேரத்தில் அவர்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. பாஜகவும் காங்கிரஸும் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டன. இந்த முறை, ஆம் ஆத்மி கட்சியால் அவர்கள் போராடுகிறார்கள். 

சத்யேந்தர் ஜெயினுக்கு எதிராக போலிச் செய்திகளைப் பரப்புவதற்கு ஒரு மோசடியாளரை பயன்படுத்தி அவர்கள் மிகவும் அவநம்பிக்கை அடைந்துள்ளனர். மேலும், மணீஷ் சிசோடியா மீது மதுபான ஊழல் குற்றச்சாட்டு சுமத்தவும் முயற்சித்தனர்" என்றார்.

சுகேஷ் சந்திரசேகர், ஆம் ஆத்மிக்கு 60 கோடி ரூபாய் கொடுத்ததாகவும், அதில் மாநிலங்களவை இடத்திற்காக 50 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு சுகேஷ் சந்திரசேகர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அதில், தான் சிறையில் கடுமையாக துன்புறுத்தப்பட்டதாகவும் அச்சுறுத்தப்பட்டதாகவும் சுகேஷ் கூறியுள்ளார். எனவே, பாதுகாப்பு வேண்டி சத்யேந்தர் ஜெயினுக்கு பணம் கொடுக்க வேண்டி இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Haridwar Stampade: கோயில்களில் பறிபோகும் உயிர்கள் - கடவுளுக்கு இரக்கமில்லையா? அரசுக்கு பொறுப்பில்லையா?
Haridwar Stampade: கோயில்களில் பறிபோகும் உயிர்கள் - கடவுளுக்கு இரக்கமில்லையா? அரசுக்கு பொறுப்பில்லையா?
பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
Engineering: காத்து வாங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள்.. 142 காலேஜ்ல ஒருத்தர் கூட சேரல..!
Engineering: காத்து வாங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள்.. 142 காலேஜ்ல ஒருத்தர் கூட சேரல..!
அண்டா முதல் ஆறு வரை: திமுக ஆட்சியில் நீர்நிலைகள் காணாமல் போனதா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
அண்டா முதல் ஆறு வரை: திமுக ஆட்சியில் நீர்நிலைகள் காணாமல் போனதா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பொண்டாட்டி இருக்கும்போதே மாதம்பட்டி 2 வது திருமணம் கல்யாணத்துக்கு முன்பே கர்பம்.. | Joy Crizildaa | Shruti Rangaraj
ஹன்சிகாவுக்கு விவாகரத்து?உண்மையை உடைத்த கணவர் இதுதான் காரணம்? | Sohael Khaturiya | Hansika Motwani Marriage | Tamil Cinema
தூத்துக்குடி வரும் மோடி! நேரில் அழைத்த ஸ்டாலின்! Files உடன் கனிமொழி!
கழட்டிவிட்ட பிரதமர் மோடி? கலக்கத்தில் ஓபிஎஸ்! கதறவிட்ட எடப்பாடி
Vikravandi |“எங்களுக்கே வழிவிட மாட்டியா” TOLGATE-யை நொறுக்கிய விசிகவினர் விக்கிரவாண்டியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Haridwar Stampade: கோயில்களில் பறிபோகும் உயிர்கள் - கடவுளுக்கு இரக்கமில்லையா? அரசுக்கு பொறுப்பில்லையா?
Haridwar Stampade: கோயில்களில் பறிபோகும் உயிர்கள் - கடவுளுக்கு இரக்கமில்லையா? அரசுக்கு பொறுப்பில்லையா?
பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
Engineering: காத்து வாங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள்.. 142 காலேஜ்ல ஒருத்தர் கூட சேரல..!
Engineering: காத்து வாங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள்.. 142 காலேஜ்ல ஒருத்தர் கூட சேரல..!
அண்டா முதல் ஆறு வரை: திமுக ஆட்சியில் நீர்நிலைகள் காணாமல் போனதா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
அண்டா முதல் ஆறு வரை: திமுக ஆட்சியில் நீர்நிலைகள் காணாமல் போனதா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
வெளிநாடு சென்று படிக்க ஆசையா? முக்கிய ஆவணங்கள் முதல் தங்குமிடம் வரை: முழு வழிகாட்டி!
வெளிநாடு சென்று படிக்க ஆசையா? முக்கிய ஆவணங்கள் முதல் தங்குமிடம் வரை: முழு வழிகாட்டி!
Diwali Car Launch: இந்த தீபாவளி செம்ம கலெக்‌ஷன் மா..! காம்பேக்ட் தொடங்கி மிட்சைஸ் வரை, பட்டாசாய் புதிய SUV-க்கள்
Diwali Car Launch: இந்த தீபாவளி செம்ம கலெக்‌ஷன் மா..! காம்பேக்ட் தொடங்கி மிட்சைஸ் வரை, பட்டாசாய் புதிய SUV-க்கள்
அன்புமணி ராமதாஸ் நடை பயணத்திற்கு தடையில்லை , அடுத்து என்ன ? - வழக்கறிஞர் பாலு சொன்ன தகவல்
அன்புமணி ராமதாஸ் நடை பயணத்திற்கு தடையில்லை , அடுத்து என்ன ? - வழக்கறிஞர் பாலு சொன்ன தகவல்
Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” -  திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” - திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
Embed widget