மேலும் அறிய

25,000 அடி உயரத்தில் ஜெட்டில் பறந்தாரா பிரதமர் மோடி? பொய் என அடித்து சொல்லும் சுப்பிரமணிய சுவாமி

கண்ணாடி ஜன்னல் இன்றி பிரதமர் மோடி விமானத்தில் பறப்பது போன்று வெளியான புகைப்படம் பொய் என சுப்பிரமணிய சுவாமி குற்றம் சுமத்தியுள்ளார்.

சமீபத்தில், பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்துக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு தயாரிக்கப்படும் போர் விமானங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது,  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் ஏறி பயணம் செய்தார். 

அதோடு, விமானப்படை வீரர்களுக்கான சீருடையை அணிந்துகொண்டு நடப்பது, தேஜாஸ் விமானத்தின் அருகில் நின்று கொண்டிருப்பது, அந்த விமானத்தில் அமர்ந்தவாறு வெற்றிச் சின்னம் காட்டுவது போன்று தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பிரதமர் மோடி வெளியிட்டார். பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் தேஜஸ் விமானத்தில் பிரதமர் பயணித்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தேஜாஸ் விமானத்தில் பிரதமர் மோடி செல்லவில்லையா?

25,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தின் உள்ளே அமர்ந்திருக்கும் பிரதமர் மோடி, கையை அசைத்து டாடா காண்பிப்பது போன்ற புகைப்படங்கள் எல்லாம் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுப்பிரமணிய சுவாமி பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். கண்ணாடி ஜன்னல் இன்றி பிரதமர் மோடி விமானத்தில் பறப்பது போன்று வெளியான புகைப்படம் பொய் என சுப்பிரமணிய சுவாமி குற்றம் சுமத்தியுள்ளார்.

பரபரப்பை கிளப்பிய சுப்பிரமணிய சுவாமி:

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "25,000 அடி உயரத்தில் கண்ணாடி ஜன்னல் இன்றி, ஏர்ஃபோர்ஸ் ஜெட் விமானத்தில் பறக்கும் மோடியின் படம் போலியானது என்று ஒரு விமானப்படை அதிகாரி இன்று என்னிடம் கூறினார். ஏனெனில், அந்த உயரத்தில் கண்ணாடி ஜன்னல் இன்றி மோடி பறந்திருந்தால் அவர் தூக்கி வீசப்பட்டிருப்பார். கீழே விழுந்திருப்பார். இதை பிரதமர் அலுவலகம் மறுக்குமா?" என குறிப்பிட்டுள்ளார்.

 

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம், ராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள், இலகுரக ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்களை தயாரித்து வடிவமைத்து வருகிறது. இந்நிலையில், 12 Su-30MKI ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான  பணிகளை ஆய்வு செய்ய சென்றபோது தான், பிரதமர் மோடி தேஜஸ் விமானத்தில் பயணம் செய்தார். 

தேஜாஸ் அதிகபட்சமாக 4000 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது. இது ஒரு பைலட் ஒற்றை இன்ஜின் விமானமாகும். அதிகபட்சமாக 13,300 கிலோ எடை கொண்டது. இது Mach 1.8 இன் அதிகபட்ச வேகத்தில் செல்ல முடியும். இது 850 கிமீ பொது வரம்பையும், 500 கிமீ போர் வரம்பையும் கொண்டுள்ளது. தேஜாஸ் எளிமையான வடிவமைப்பு கொண்ட குறைந்த விலை விமானம். எனவே, ஆசியாவில் உள்ள செலவின உணர்வுள்ள நாடுகளுக்கு இது மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. இருப்பினும் பெரும்பாலும் உள்நாட்டு உபயோகித்திற்காக மட்டுமே தேஜஸ் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது மார்க் 1, மார்க் 1A மற்றும் பயிற்சியாளர் பதிப்பு என வேரியண்ட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.  புதிய அதிவேக வேரியண்டான தேஜாஸ் மார்க் 2,  2026 ஆம் ஆண்டிற்குள் தொடர் தயாரிப்புக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget