மேலும் அறிய

Omicron: ஒமிக்ரான் அச்சுறுத்தல்: ‛கட்சி ஊர்வலங்கள், பிரச்சாரத்தை நிறுத்துங்க.. தேர்தலை ஒத்திவைங்க’ -உயர்நீதிமன்றம்!

ஒமிக்ரான் வைரஸ் பரவலால் தேர்தல் பேரணிகள், பிரசாரங்களை நிறுத்த உத்தரவிடவும், சட்டசபை தேர்தல்களை ஒத்திவைக்கவும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அலகாபாத் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நேற்று சஞ்சய் யாதவ் என்பவர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. நீதிபதி சேகர் குமார் யாதவின் தலைமையிலான அமர்வு இந்த வழக்கின் விசாரணையின்போது ஒமிக்ரான்(Omicron) பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக கொரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறினர்.

நீதிபதிகள் கூறும்போது, சீனா, நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் பாதிப்புகள் அதிகரிக்கும்போது முழுமையாக அல்லது பகுதிநேரமாக ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். இண்டாவது அலையின்போதே நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் பலரும் இதனால் உயிரிழந்தனர்.


Omicron: ஒமிக்ரான் அச்சுறுத்தல்: ‛கட்சி ஊர்வலங்கள், பிரச்சாரத்தை நிறுத்துங்க.. தேர்தலை ஒத்திவைங்க’ -உயர்நீதிமன்றம்!

உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தல் மிகவும் அருகில் உள்ளது. சமூக விலகல் உள்ளிட்ட கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற முடியாத இடங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்துவதன் மூலம் லட்சக்கணக்கான மக்களை அணிதிரட்டுவதை உயர்நீதிமன்றம் கவனித்து வருகிறது.

இதை சரியான நேரத்தில் நிறுத்தாவிட்டால், இதன் விளைவுகள் இரண்டாவது அலையை விட மோசமாக இருக்கும். இதனால், இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக தேர்தல் பேரணிகள் மற்றும் மக்கள் கூடுவதை நிறுத்தவும்,  தங்களது தேர்தல் பிரசாரங்களை தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் மூலமாக மேற்கொள்ள அரசியல் கட்சிகளை அறிவுறுத்த வேண்டும்.


Omicron: ஒமிக்ரான் அச்சுறுத்தல்: ‛கட்சி ஊர்வலங்கள், பிரச்சாரத்தை நிறுத்துங்க.. தேர்தலை ஒத்திவைங்க’ -உயர்நீதிமன்றம்!

அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை வாய்ப்பிருந்தால் மேலும் இரண்டு மாதங்களுக்கு ஒத்தி வைக்கலாம். ஏனென்றால் மக்கள் உயிருடன் இருந்தால் மட்டுமே தேர்தல் பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்த முடியும்.

கொரோனா தடுப்பூசி பிரசாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடியை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு பேரணிகள், கூட்டங்களை நிறுத்துவது மற்றும் வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களை ஒத்திவைப்பது குறித்து பிரதமர் பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினார்.

நாட்டிலேயே அதிக சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணங்களை மேற்கண்ட மாநிலங்களில் மேற்கொள்ள உள்ளனர்.


Omicron: ஒமிக்ரான் அச்சுறுத்தல்: ‛கட்சி ஊர்வலங்கள், பிரச்சாரத்தை நிறுத்துங்க.. தேர்தலை ஒத்திவைங்க’ -உயர்நீதிமன்றம்!

ஆனால், நாட்டில் தற்போது ஒமிக்ரானின் தீவிரத்தன்மை மிகவும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் தற்போது வரை 200க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, அலகாபாத் நீதிமன்றம் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்றும், அரசியல் பேரணிகள், கூட்டங்கள் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க: Ashwin on Virat - Shasthri duo: அஷ்வின் மட்டும்தான் தூக்கி எறியப்பட்டாரா? கோலி - சாஸ்திரி கூட்டணியின் இன்னொரு முகம்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget