மேலும் அறிய

Omicron: ஒமிக்ரான் அச்சுறுத்தல்: ‛கட்சி ஊர்வலங்கள், பிரச்சாரத்தை நிறுத்துங்க.. தேர்தலை ஒத்திவைங்க’ -உயர்நீதிமன்றம்!

ஒமிக்ரான் வைரஸ் பரவலால் தேர்தல் பேரணிகள், பிரசாரங்களை நிறுத்த உத்தரவிடவும், சட்டசபை தேர்தல்களை ஒத்திவைக்கவும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அலகாபாத் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நேற்று சஞ்சய் யாதவ் என்பவர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. நீதிபதி சேகர் குமார் யாதவின் தலைமையிலான அமர்வு இந்த வழக்கின் விசாரணையின்போது ஒமிக்ரான்(Omicron) பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக கொரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறினர்.

நீதிபதிகள் கூறும்போது, சீனா, நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் பாதிப்புகள் அதிகரிக்கும்போது முழுமையாக அல்லது பகுதிநேரமாக ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். இண்டாவது அலையின்போதே நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் பலரும் இதனால் உயிரிழந்தனர்.


Omicron: ஒமிக்ரான் அச்சுறுத்தல்: ‛கட்சி ஊர்வலங்கள், பிரச்சாரத்தை நிறுத்துங்க.. தேர்தலை ஒத்திவைங்க’ -உயர்நீதிமன்றம்!

உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தல் மிகவும் அருகில் உள்ளது. சமூக விலகல் உள்ளிட்ட கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற முடியாத இடங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்துவதன் மூலம் லட்சக்கணக்கான மக்களை அணிதிரட்டுவதை உயர்நீதிமன்றம் கவனித்து வருகிறது.

இதை சரியான நேரத்தில் நிறுத்தாவிட்டால், இதன் விளைவுகள் இரண்டாவது அலையை விட மோசமாக இருக்கும். இதனால், இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக தேர்தல் பேரணிகள் மற்றும் மக்கள் கூடுவதை நிறுத்தவும்,  தங்களது தேர்தல் பிரசாரங்களை தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் மூலமாக மேற்கொள்ள அரசியல் கட்சிகளை அறிவுறுத்த வேண்டும்.


Omicron: ஒமிக்ரான் அச்சுறுத்தல்: ‛கட்சி ஊர்வலங்கள், பிரச்சாரத்தை நிறுத்துங்க.. தேர்தலை ஒத்திவைங்க’ -உயர்நீதிமன்றம்!

அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை வாய்ப்பிருந்தால் மேலும் இரண்டு மாதங்களுக்கு ஒத்தி வைக்கலாம். ஏனென்றால் மக்கள் உயிருடன் இருந்தால் மட்டுமே தேர்தல் பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்த முடியும்.

கொரோனா தடுப்பூசி பிரசாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடியை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு பேரணிகள், கூட்டங்களை நிறுத்துவது மற்றும் வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களை ஒத்திவைப்பது குறித்து பிரதமர் பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினார்.

நாட்டிலேயே அதிக சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணங்களை மேற்கண்ட மாநிலங்களில் மேற்கொள்ள உள்ளனர்.


Omicron: ஒமிக்ரான் அச்சுறுத்தல்: ‛கட்சி ஊர்வலங்கள், பிரச்சாரத்தை நிறுத்துங்க.. தேர்தலை ஒத்திவைங்க’ -உயர்நீதிமன்றம்!

ஆனால், நாட்டில் தற்போது ஒமிக்ரானின் தீவிரத்தன்மை மிகவும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் தற்போது வரை 200க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, அலகாபாத் நீதிமன்றம் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்றும், அரசியல் பேரணிகள், கூட்டங்கள் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க: Ashwin on Virat - Shasthri duo: அஷ்வின் மட்டும்தான் தூக்கி எறியப்பட்டாரா? கோலி - சாஸ்திரி கூட்டணியின் இன்னொரு முகம்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இனி சிக்கலே இல்லையா?
அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு! ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட்! இனி சிக்கலே இல்லையா?
கணவரிடம் பணம் கேட்க முடியாது! மனைவியின் கோரிக்கையை தூக்கி எறிந்த உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?
கணவரிடம் பணம் கேட்க முடியாது! மனைவியின் கோரிக்கையை தூக்கி எறிந்த உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?
சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
Embed widget