மேலும் அறிய

India First Voter : இயற்கை எய்தினார் இந்தியாவின் முதல் வாக்காளர்...! யார் இந்த மாஸ்டர் சியாம்?

1951 முதல் ஒவ்வொரு மக்களவை, சட்டப்பேரவை மற்றும் அனைத்து உள்ளாட்சி தேர்தல்களிலும் நேகி வாக்களித்துள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் சியாம் சரண் நேகி அவரது சொந்த ஊரான இமாச்சல பிரதேசத்தின் கல்பாவில் இன்று இயற்கை எய்தினார். இவருக்கு வயது 106. கடைசியாக, இமாச்சல பிரதேசத்தின் 14ஆவது சட்டப்பேரவை தேர்தலில் அவர் வாக்களித்திருந்தார். 

கடந்த 1951ம் ஆண்டு, அக்டோபர் 23ம் தேதி, சுதந்திர இந்தியாவில் கல்பா வாக்குச் சாவடியில் நேகி தனது முதல் வாக்கினை செலுத்தினார். இதன் தொடர்ச்சியாக, நாட்டின் முதல் வாக்காளராக அவர் மாறினார். மேலும், அவர் 34வது முறையாக இந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி தனது கடைசி வாக்கினை செலுத்தினார். இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு தனது பாராட்டினை தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து மோடி ட்விட்டர் பக்கத்தில், "இது பாராட்டத்தக்கது. இளம் வாக்காளர்கள் தேர்தலில் பங்குபெறவும் நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் உத்வேகமாக அமைய வேண்டும்" என பதிவிட்டிருந்தார். நவம்பர் 2ஆம் தேதி, தனது கடைசி வாக்கினை தபால் மூலம் அவர் செலுத்தியிருந்தார்.

நேகிக்கு இரங்கல் தெரிவித்துள்ள இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், "நாட்டின் முதல் வாக்காளரின் கடைசி வாக்கு நம் நினைவை எப்போதும் உணர்ச்சிவசப்படுத்தும். சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரும், கின்னாரைச் சேர்ந்தவருமான ஷியாம் சரண் நேகியின் மறைவுச் செய்தியைக் கேட்டு வருத்தமடைந்தேன். 

 

தனது கடமையைச் செய்துகொண்டே, நவம்பர் 2ஆம் தேதி 34ஆவது முறையாக சட்டப்பேரவை தேர்தலுக்கு தபால் வாக்கினை செலுத்தினார். அவரது ஆன்மா இறைவனின் காலடியில் சாந்தியடையட்டும். அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு வலிமை கிடைக்கட்டும்" என்றார்.

நேகியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று கின்னவுரின் துணை ஆணையர் அமந்தீப் கார்க் தெரிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் அதிகாரி மணீஷ் கார்கியும், நேகியின் மறைவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். "ஜனநாயக அமைப்பை வலுப்படுத்துவதற்காக வாக்குரிமைக்கான பயன்படுத்துவதற்கு வாக்காளர்களின் பல தலைமுறைகளை அவர் ஊக்குவித்தார்" என்றார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கார்க் கூறுகையில், "நவம்பர் 2 ஆம் தேதி கல்பாவில் உள்ள தனது வீட்டில் தபால் வாக்கு மூலம் வாக்களித்த தனது வாழ்நாளின் கடைசி மூச்சு வரை வாக்களித்தார்" என்றார்.

1952 ஜனவரி மற்றும் பிப்ரவரியில் நாட்டின் முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. அதில், வாக்களித்ததால், மாஸ்டர் ஷியாம் என்று பிரபலமாக அழைக்கப்பட்டார். பனி மற்றும் வானிலையை மனதில் கொண்டு, இமாச்சலப் பிரதேசத்தில் அக்டோபர் 1951 இல் தேர்தல் நடத்தப்பட்டது. 1951 முதல் ஒவ்வொரு மக்களவை, சட்டப்பேரவை மற்றும் அனைத்து உள்ளாட்சி தேர்தல்களிலும் நேகி வாக்களித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Russia Massive Drone Attack: விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
TVK - DMDK Alliance.?: தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
Min. Geetha Jeevan: காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Russia Massive Drone Attack: விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
விடாமல் அடிக்கும் ரஷ்யா; கதிகலங்கும் உக்ரைன் - 479 ட்ரோன்கள், 20 ஏவுகணைகள் வீசி மீண்டும் தாக்குதல்
TVK - DMDK Alliance.?: தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
Min. Geetha Jeevan: காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
Watch Video: அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
Trump Vs LA Protest: கலவர பூமியான லாஸ் ஏஞ்சல்ஸ்; கெடுபிடி காட்டும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது அங்கே.?
கலவர பூமியான லாஸ் ஏஞ்சல்ஸ்; கெடுபிடி காட்டும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது அங்கே.?
Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
அரியலூர், பெரம்பலூர் இளைஞர்களே! வரும் 28ம் தேதி உங்களுக்காக நடத்துறாங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!
அரியலூர், பெரம்பலூர் இளைஞர்களே! வரும் 28ம் தேதி உங்களுக்காக நடத்துறாங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!
Embed widget