மேலும் அறிய

India First Voter : இயற்கை எய்தினார் இந்தியாவின் முதல் வாக்காளர்...! யார் இந்த மாஸ்டர் சியாம்?

1951 முதல் ஒவ்வொரு மக்களவை, சட்டப்பேரவை மற்றும் அனைத்து உள்ளாட்சி தேர்தல்களிலும் நேகி வாக்களித்துள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் சியாம் சரண் நேகி அவரது சொந்த ஊரான இமாச்சல பிரதேசத்தின் கல்பாவில் இன்று இயற்கை எய்தினார். இவருக்கு வயது 106. கடைசியாக, இமாச்சல பிரதேசத்தின் 14ஆவது சட்டப்பேரவை தேர்தலில் அவர் வாக்களித்திருந்தார். 

கடந்த 1951ம் ஆண்டு, அக்டோபர் 23ம் தேதி, சுதந்திர இந்தியாவில் கல்பா வாக்குச் சாவடியில் நேகி தனது முதல் வாக்கினை செலுத்தினார். இதன் தொடர்ச்சியாக, நாட்டின் முதல் வாக்காளராக அவர் மாறினார். மேலும், அவர் 34வது முறையாக இந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி தனது கடைசி வாக்கினை செலுத்தினார். இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு தனது பாராட்டினை தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து மோடி ட்விட்டர் பக்கத்தில், "இது பாராட்டத்தக்கது. இளம் வாக்காளர்கள் தேர்தலில் பங்குபெறவும் நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் உத்வேகமாக அமைய வேண்டும்" என பதிவிட்டிருந்தார். நவம்பர் 2ஆம் தேதி, தனது கடைசி வாக்கினை தபால் மூலம் அவர் செலுத்தியிருந்தார்.

நேகிக்கு இரங்கல் தெரிவித்துள்ள இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், "நாட்டின் முதல் வாக்காளரின் கடைசி வாக்கு நம் நினைவை எப்போதும் உணர்ச்சிவசப்படுத்தும். சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரும், கின்னாரைச் சேர்ந்தவருமான ஷியாம் சரண் நேகியின் மறைவுச் செய்தியைக் கேட்டு வருத்தமடைந்தேன். 

 

தனது கடமையைச் செய்துகொண்டே, நவம்பர் 2ஆம் தேதி 34ஆவது முறையாக சட்டப்பேரவை தேர்தலுக்கு தபால் வாக்கினை செலுத்தினார். அவரது ஆன்மா இறைவனின் காலடியில் சாந்தியடையட்டும். அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு வலிமை கிடைக்கட்டும்" என்றார்.

நேகியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று கின்னவுரின் துணை ஆணையர் அமந்தீப் கார்க் தெரிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் அதிகாரி மணீஷ் கார்கியும், நேகியின் மறைவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். "ஜனநாயக அமைப்பை வலுப்படுத்துவதற்காக வாக்குரிமைக்கான பயன்படுத்துவதற்கு வாக்காளர்களின் பல தலைமுறைகளை அவர் ஊக்குவித்தார்" என்றார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கார்க் கூறுகையில், "நவம்பர் 2 ஆம் தேதி கல்பாவில் உள்ள தனது வீட்டில் தபால் வாக்கு மூலம் வாக்களித்த தனது வாழ்நாளின் கடைசி மூச்சு வரை வாக்களித்தார்" என்றார்.

1952 ஜனவரி மற்றும் பிப்ரவரியில் நாட்டின் முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. அதில், வாக்களித்ததால், மாஸ்டர் ஷியாம் என்று பிரபலமாக அழைக்கப்பட்டார். பனி மற்றும் வானிலையை மனதில் கொண்டு, இமாச்சலப் பிரதேசத்தில் அக்டோபர் 1951 இல் தேர்தல் நடத்தப்பட்டது. 1951 முதல் ஒவ்வொரு மக்களவை, சட்டப்பேரவை மற்றும் அனைத்து உள்ளாட்சி தேர்தல்களிலும் நேகி வாக்களித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வாயில் திணிக்கப்பட்ட துணி.. 3 மாத பிளான்.. ஒரு மாதமாக சித்ரவதை.. குழந்தை மரணத்தில் திருப்பம்!
வாயில் திணிக்கப்பட்ட துணி.. 3 மாத பிளான்.. ஒரு மாதமாக சித்ரவதை.. குழந்தை மரணத்தில் திருப்பம்!
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai TN BJP Chief: மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
Iran on Hormuz: நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Annamalai Vs Amit Shah: பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
12th Supplementary Exam: மிஸ் பண்ணிடாதீங்க… 12ஆம் வகுப்பு ஃபெயிலா? துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
12th Supplementary Exam: மிஸ் பண்ணிடாதீங்க… 12ஆம் வகுப்பு ஃபெயிலா? துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
Embed widget