மேலும் அறிய

எம்எல்ஏக்களை அடுத்து ஷிண்டே அணிக்குத் தாவும் சிவசேனா எம்பிக்கள்.. எச்சரிக்கும் ராவத்..

ஏக்னாத் ஷிண்டே ஆதரவு எம்பிக்கள் 12 பேர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக புதிய அணி அமைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏக்னாத் ஷிண்டே ஆதரவு எம்பிக்கள் 12 பேர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக புதிய அணி அமைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய அதிருப்தி அணி:

மஹாராஸ்டிராவில் அமைந்திருந்த சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான உத்தவ் தாக்கரே ஆட்சி சமீபத்தில் கவிழ்ந்து, அதிருப்தி அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது. முதலமைச்சராக ஏக்னாத் ஷிண்டே பதவியேற்க, துணை முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில், மக்களவையிலும் சிவசேனா எம்பிக்கள் அதிருப்தி தெரிவித்து, புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் உள்ளனர்.


எம்எல்ஏக்களை அடுத்து ஷிண்டே அணிக்குத் தாவும் சிவசேனா எம்பிக்கள்.. எச்சரிக்கும் ராவத்..

புதிய கொறடா:

தற்போது சிவனாவுக்கு 19 எம்பிக்கள் மக்களவையில் உள்ளனர். இவர்களில் 12 பேர் ஏக்னாத் ஷிண்டே அணிக்கு தாவ தயாராக இருப்பதாகத் தெரிகிறது. மக்களவையில் இந்த 12 பேரும் இணைந்து தனி அணி அமைக்க ஆயத்தமாகி வருகின்றனர். மும்பை தெற்கு மத்திய தொகுதி எம்பியான ராஹுல் ஷிவாலே தலைமையில் அணி செயல்படும் என்பதற்கான கடிதம் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு புதிய கொறடா விரைவில் நியமிக்கப்படுவார் என்றும், புதிய கொறடாவாக பாவனா கவுலி நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தலைமை கொறடாவாக இருந்த கவுலி மற்றும் ஏக்னாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீ காந்த் ஆகியோர் அதிருப்தி அணிக்கு மாறியதையடுத்து அவரது பதவி பறிக்கப்பட்ட நிலையில் இந்த புதிய அணியில் மீண்டும் அவருக்கே அந்த பொறுப்பு வழங்கப்படும் என்றுத் தெரிகிறது,

ஷிண்டேவுக்கு ஆதரவாகச் செல்லும் 12 பேர் கொண்ட அணியில் இரண்டு பேருக்கு அமைச்சர்கள் பொறுப்பு வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏக்னாத் ஷிண்டேவுடன் இருக்கும் சிவசேனா கட்சியின் அனைத்து எம்பிக்களும் பாஜகவின் முக்கியத் தலைவர்களை டெல்லியில் சந்திக்க இருப்பதாகவும், இந்த சந்திப்பின் போது நாடாளுமன்றத்தில் சிவசேனாவின் நிலை குறித்து விவாதிக்கவும், நாடாளுமன்ற அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்படும் என்று ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ தீபக் கேசர்கார் கூறியுள்ளார்.

புதிய அமைச்சரவை:

மும்பைக்குச் செல்லும் முதலமைச்சர் ஏக்னாத் ஷிண்டே  அங்கு பாஜக முக்கியத்தலைவர்களை சந்தித்து அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாகவும், மத்திய அமைச்சர் பதவி தொடர்பாகவும் பேசுவார். இந்த அமைச்சரவை பொறுப்பானது சில வாரங்களில் கொடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும், மகாராஸ்டிர அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றிற்குப் பிறகு இது நடைபெறலாம் என்று ஏக்னாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ கூறியுள்ளார்.


எம்எல்ஏக்களை அடுத்து ஷிண்டே அணிக்குத் தாவும் சிவசேனா எம்பிக்கள்.. எச்சரிக்கும் ராவத்..

சஞ்சய் ராவத் பதிலடி:

சிவசேனா எம்பிக்கள் யாரேனும் எதிர்ப்பு அணியில் இணைந்தாலோ அல்லது அவர்கள் நடத்தும் கூட்டங்களில் கலந்துகொண்டாலோ அவர்கள் மீது சிவசேனா நிச்சயம் சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்ளும். மக்களவையில் சிவசேனா கட்சி ஒற்றுமையாக இருக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால், விதிகளை மீறிய எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதே போன்று விதிகளை மீறினால் எம்பிக்கள் மீதும் நடவடிக்கை எடுப்போம். அவர்கள் அவர்களை காப்பாற்றிக் கொள்ளவும், குழப்பத்தை உருவாக்கவும் அவர்கள் இதையெல்லாம் செய்கிறார்கள். நாங்கள் சட்டப்பூர்வமாகப் போராடுவோம். தாங்கள் ராஜன் விசாரேவை தலைமை கொறடாவாக நியமித்திருப்பதாகவும், இந்த நியமனம் தான் செல்லத்தக்கது என்று சிவசேனா மாநிலங்களவை எம்பி சஞ்சய் ராவத் கூறியிருக்கிறார்.

கோலப்பூர் தொகுதியைச் சேர்ந்த கோல்ஹாபூர் எம்பி,மண்ட்லிக் தான் முதன் முதலில் அவரது சக எம்பிக்களிடம் தனி அணியாக திரள்வது பற்றியும், ஷிண்டே அணிக்குத் தாவுவது பற்றியும் பேசியுள்ளார். உத்தவ் தாக்கரே தங்களுக்கு மூத்த அண்ணன் போன்றவர் என்றும்,  ஆனால் அவரது பணியாளர்களது கருத்துகளும் தேவை” என சஞ்சய் மண்ட்லிக் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
Anbumani: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவுதானா?- அன்புமணி கேள்வி!
Anbumani: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவுதானா?- அன்புமணி கேள்வி!
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
Anbumani: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவுதானா?- அன்புமணி கேள்வி!
Anbumani: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவுதானா?- அன்புமணி கேள்வி!
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
Tamilnadu Roundup: திருப்பூர் எஸ்ஐ வெட்டிக்கொலை.. நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டில்  இதுவரை
Tamilnadu Roundup: திருப்பூர் எஸ்ஐ வெட்டிக்கொலை.. நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டில் இதுவரை
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
Embed widget