![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Philanthropist : ஒரு நாளுக்கு மூன்று கோடி...நன்கொடையாளர்கள் பட்டியலில் இவர்தான் முதலிடம்.. அம்பானியா? அதானியா?
கடந்தாண்டு, விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி முதல் இடம் பிடித்திருந்த நிலையில், ஷிவ் நாடார் இரண்டாம் இடம் பிடித்திருந்தார்.
![Philanthropist : ஒரு நாளுக்கு மூன்று கோடி...நன்கொடையாளர்கள் பட்டியலில் இவர்தான் முதலிடம்.. அம்பானியா? அதானியா? shiv nadar azim premji mukesh ambani gautam adani among most generous indians edelgive hurun india philanthropic list 2022 Philanthropist : ஒரு நாளுக்கு மூன்று கோடி...நன்கொடையாளர்கள் பட்டியலில் இவர்தான் முதலிடம்.. அம்பானியா? அதானியா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/21/6ef8fed3954ba3da69266e7b53c8afc61666359119262224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான எச்சிஎல் நிறுவனத்தின் உரிமையாளர் ஷிவ் நாடார், நன்கொடையாளர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். EdelGive Hurun இந்திய நன்கொடையாளர்கள் 2022 பட்டியலின்படி, அவர் ஆண்டுக்கு 1,161 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.
கடந்தாண்டு, விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி முதல் இடம் பிடித்திருந்த நிலையில், ஷிவ் நாடார் இரண்டாம் இடம் பிடித்திருந்தார். ஆனால், இந்த முறை நாள் ஒன்றுக்கு 3 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி முதலிடம் பிடித்துள்ளார் ஷிவ் நாடார். இந்தாண்டு, அசிம் பிரேம்ஜி இரண்டாம் பிடித்துள்ளார். ஆண்டுக்கு 484 கோடி ரூபாய் அவர் நன்கொடை வழங்கியுள்ளார்.
கொடை முயற்சிகளை பொறுத்தவரை ஷிவ் நாடார் கல்வியில்தான் அதிக கவனம் செலுத்தியுள்ளார். எஸ்எஸ்என் நிறுவனங்கள், வித்யாகியான், ஷிவ் நாடார் பல்கலைக்கழகம், ஷிவ் நாடார் பள்ளி, ஷிக்சா இனிஷியேட்டிவ் மற்றும் கிரண் நாடார் கலை அருங்காட்சியகம் போன்றவை ஷிவ் நாடார் அறக்கட்டளை செயல்பாடுகளில் அடங்கும்.
அசிம் பிரேம்ஜியை பொறுத்தவரை, விப்ரோ நிறுவனத்தில் 56 விழுக்காடு பங்குகளை கொண்ட மூன்று நிறுவனங்கள் அறக்கட்டளை செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தாண்டு வெளியிடப்பட்டுள்ள 9ஆவது நன்கொடையாளர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, குமார் மங்கலம் பிர்லா, Zerodha நிறுவனர்கள் நிகில் மற்றும் நிதின் காமத் மற்றும் பலர் இடம்பெற்றுள்ளனர்.
நிதின் காமத்துடம் நிகில் காமத்தும் தங்களின் நன்கொடைகளை 300 விழுகாட்டு அதிகரித்துள்ளனர். கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர்.
பெண்களை பொறுத்தவரை, ரோகினி நிலேகனி 120 கோடி ரூபாய் நன்கொடையுடன் மிகவும் தாராளமான பெண் நன்கொடையாளராக உருவெடுத்துள்ளார். லீனா காந்தி திவாரி மற்றும் அனு ஆகா ஆகியோர் முறையே 21 கோடி ரூபாயும் 20 கோடி ரூபாயும் நன்கொடை அளித்துள்ளனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 411 கோடி ரூபாய் நன்கொடையுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். கல்வி மற்றும் சுகாதாரத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளை கவனம் செலுத்தி உள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் போது ஒவ்வொரு நாளும் 1,000 டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது.
சுகாதாரம், கல்வி, நிலையான வாழ்வாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகியவற்றில் 242 கோடி ரூபாய் நன்கொடையுடன் குமார் மங்கலம் பிர்லா பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். அதானி குடும்பம், 190 கோடி நன்கொடை செய்து பட்டியலில் 7ஆவது இடத்தை பிடித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)