மேலும் அறிய

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு குவியும் ஆதரவு..பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்பிக்கு சிக்கல்..!

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக சிரோமணி குருத்வாரா நிர்வாகக் குழு நேற்று அறிவித்துள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் இணைந்து கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரிஜ் பூஷனுக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தியது விளையாட்டு உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

மல்யுத்த வீரர்களுக்கு குவியும் ஆதரவு:

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வீரர்கள், வீராங்கனைகள் வலியுறுத்தி வருகின்றனர். இச்சூழலில், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்தனர் விவசாயிகள். போராட்டத்திற்கு ஆதரவாக ஜந்தர் மந்தரை நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர்.

இதையடுத்து, மல்யுத்த வீராங்கனைகளுக்கு முக்கிய சீக்கிய அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக சிரோமணி குருத்வாரா நிர்வாகக் குழு நேற்று அறிவித்துள்ளது.

"கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்"

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தாமி கூறுகையில், "இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக எடுத்து கொண்டு, குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.பி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது, பெண்களின் கெளரவம் மற்றும் கண்ணியம் தொடர்பானது. ஒருபுறம் ‘பேட்டி பச்சாவோ’, பெண்களின் முன்னேற்றம் என்று அரசு பேசுகிறது. 

மறுபுறம் நாட்டிற்கு ஒலிம்பிக் பதக்கங்களைக் கொண்டு வந்த வீராங்கனை நீதி கிடைக்கப் போராடுகிறார்கள். சீக்கிய அமைப்பு, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீராங்கனைக்கு ஆதரவளிக்கிறது. டெல்லியில் போராட்டக்காரர்களை சந்திக்க விரைவில் தூதுக்குழுவை அனுப்புவோம்" என்றார்.

பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக கடந்த மாதம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவரது வாக்குமூலத்தை டெல்லி காவல்துறை அதிகாரிகள் சமீபத்தில் பதிவு செய்தனர். பாலியல் புகார்கள் தொடர்பாக அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

ஐபிஎல் போட்டி பார்க்க சென்ற வீராங்கனைகளுக்கு அனுமதி மறுப்பு:

விசாரணையின்போது, தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். தான் இந்த வழக்கில் தவறாக சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

மல்யுத்த வீரர்கள், நேற்று கவனம் ஈர்க்கும் விதமாக டெல்லி அருண் ஜெட்லி மைதானத்திற்கு ஐபிஎல் போட்டி பார்க்க சென்றனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைதானத்திற்கு உள்ளே அனுமதி மறுக்கப்பட்ட மல்யுத்த வீரர்கள், வெளியில் நின்று கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget