மேலும் அறிய

Sengol: செங்கோல் விவகாரம்; டபுள் சைடு கோல் அடித்த காங்கிரஸ் எம்பி சசிதரூர்..! என்ன சொன்னார் தெரியுமா..?

செங்கோல் தொடர்பாக மத்திய அரசு தெரிவித்தது பொய் என காங்கிரஸ் தெரிவித்த நிலையில், வேறு மாதிரியான கருத்தை தெரிவித்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் அனைவரையும் குழப்பி உள்ளார்.

மத்திய அரசு அறிவித்தபடியே, இன்று திறந்து வைக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் 'செங்கோல்' நிறுவப்பட்டுள்ளது. 

செங்கோல் தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்து இது தொடர் பேசுபொருளாக மாறியது. சுதந்திரம் கிடைத்தபோது, ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக இந்த செங்கோலை இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பெற்று கொண்டு, அதை நாட்டின் முதல் பிரதமர் நேருவுக்கு வழங்கியதாக மத்திய அரசு கூறியது.

சர்ச்சையை கிளப்பும் செங்கோல்:

இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் ஆலோசனைபேரில், திருவாவடுதுறை ஆதீனத்தின் வழிகாட்டுதலில், ஆட்சி மாற்றத்தை குறிக்கும் வகையில் நேரு செங்கோலை பெற்று கொண்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்தது. சோழர் காலத்தில் ஒரு மன்னரிடமிருந்து மற்றொரு மன்னருக்கு ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்கும் போது இம்மாதிரியான செங்கோல் வழங்கப்படுவது வழக்கம்.

அதை பிரதிபலிக்கும் வகையில், சுதந்திரம் பெற்ற நாள் அன்று, செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. செங்கோல் பற்றி மத்திய அரசு தகவல் வெளியிட்டதில் இருந்தே அதை சுற்றி பல்வேறு விதமான தகவல்கள் வலம் வந்த வண்ணம் இருக்கிறது.

ஆனால், மத்திய அரசு வெளியிட்ட தகவலுக்கு போதுமான ஆதாரம் இல்லை என வரலாற்றாசிரியர்கள் முதல் காங்கிரஸ் கட்சி வரை மறுப்பு தெரிவித்து வருகிறது. செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது உண்மை, ஆனால், அது ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக நடத்தப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

ட்வீட் செய்து குழப்பிய சசி தரூர்:

மவுண்ட்பேட்டன், ராஜாஜி, நேரு ஆகியோர் ஆட்சி மாற்றத்திற்கான அடையாளமாக செங்கோலை கருதினர் என்பதற்கு ஆதாரம் இல்லை. இதுதொடர்பான அனைத்து தகவல்களும் பொய் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. செங்கோல் தொடர்பாக மத்திய அரசு தெரிவித்தது பொய் என காங்கிரஸ் தெரிவித்த நிலையில், வேறு மாதிரியான கருத்தை தெரிவித்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் அனைவரையும் குழப்பி உள்ளார்.

"செங்கோல் சர்ச்சையில் இரு தரப்பிலும் நல்ல வாதங்கள் உள்ளன என்பதே எனது சொந்த கருத்து. செங்கோல் பாரம்பரியத்தின் தொடர்ச்சியை பிரதிபலிக்கிறது. இறையாண்மை மற்றும் தர்மத்தின் ஆட்சியை உள்ளடக்கியுள்ளது என அரசாங்கம் சரியாக வாதம் முன்வைத்துள்ளது.

அரசியலமைப்பு மக்களின் பெயரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும், இறையாண்மை இந்திய மக்களிடம் தங்களுடைய நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது என்றும், அது தெய்வீக உரிமையால் வழங்கப்பட்ட அரச சிறப்புரிமை அல்ல என்றும் எதிர்க்கட்சிகள் சரியாக வாதிடுகின்றன.

சமரசம்:

ஆட்சி மாற்றத்திற்கான அடையாளமாக செங்கோலை மவுண்ட்பேட்டன் நேருவுக்கு வழங்கினார் என்ற ஆதாரம் இல்லாத விவாதத்திற்குரிய வாதத்தை கைவிட்டால் இரு வாதங்களையும் ஏற்று கொண்டு சமரசம் செய்து கொள்ளலாம். 

அதற்கு மாறாக, செங்கோல் என்பது அதிகாரத்தின் பாரம்பரிய சின்னம் என்றும், அதை மக்களவையில் வைப்பதன் மூலம், இறையாண்மை அங்கு உள்ளது. எந்த மன்னரிடமும் இல்லை என்பதை இந்தியா உறுதிப்படுத்துகிறது. நமது நிகழ்காலத்தின் மதிப்புகளை உறுதிப்படுத்த கடந்த காலத்திலிருந்து இந்த சின்னத்தை தழுவுவோம்" என சசி தரூர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Breaking News LIVE:  கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - உற்சாக வரவேற்பு
Breaking News LIVE: கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - உற்சாக வரவேற்பு
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?Pawan kalyan salary  : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Breaking News LIVE:  கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - உற்சாக வரவேற்பு
Breaking News LIVE: கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - உற்சாக வரவேற்பு
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
LK Advani: பாஜக தொண்டர்கள் ஷாக்..! மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!
LK Advani: பாஜக தொண்டர்கள் ஷாக்..! மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
Maharaja Box Office: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
Embed widget