மேலும் அறிய

Congress : காங்கிரஸ் தலைவர் தேர்தல்...கலகக்குரலாக மாறிய தமிழ்நாட்டு எம்.பி..தொடரும் அதிருப்தி

காங்கிரஸின் மக்களவை உறுப்பினர்களான சசி தரூர், கார்த்தி சிதம்பரம், பிரத்யுத் போர்டோலோய் மற்றும் அப்துல் கலீக் ஆகியோர் கூட்டாக எழுதிய எழுதியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வெளிப்படைத்தன்மையாகவும் நேர்மையாகவும் நடத்தக் கோரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரிக்கு ஐந்து காங்கிரஸ் எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர். வாக்காளர் பட்டியலை தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

காங்கிரஸின் மக்களவை உறுப்பினர்களான சசி தரூர், கார்த்தி சிதம்பரம், மனிஷ் திவாரி, பிரத்யுத் போர்டோலோய் மற்றும் அப்துல் கலீக் ஆகியோர் கூட்டாக எழுதிய கடிதத்தில், வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைக்கு தவறான விளக்கம் அளிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளனர். 

மிஸ்திரிக்கு அனுப்பப்பட்ட செப்டம்பர் 6 தேதியிட்ட கடிதத்தில், "கட்சியின் உள்விவரங்கள் அடங்கிய ஆவணத்தை வெளியிட்டு அதில் உள்ள தகவல்கள் தவறாக பயன்பட்டுவிட வாய்ப்பாக அமைந்திட வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. வேட்புமனு தாக்கல் தொடங்கும் முன், கட்சியின் மத்திய தேர்தல் ஆணையம் (சிஇஏ), வாக்குரிமை உள்ள மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் அடங்கிய வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

வேட்பாளரை பரிந்துரைக்க யாருக்கு உரிமை உள்ளது, யார் வாக்களிக்கத் தகுதியுடையவர் என்பது சரிபார்க்கப்பட்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட வேண்டும். வாக்காளர் பட்டியல்களை பொதுவெளியில் வெளியிடுவது தொடர்பாக கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத்திற்கு ஏதேனும் கவலைகள் இருந்தால், இந்தத் தகவலை அனைத்து வாக்காளர்கள் மற்றும் சாத்தியமான வேட்பாளர்களுடன் பாதுகாப்பாகப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு பொறிமுறையை அது ஏற்படுத்த வேண்டும். வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் வாக்காளர், பட்டியலைச் சரிபார்க்க நாடு முழுவதும் உள்ள அனைத்து 28 மாநில காங்கிரஸ் கமிட்டி மற்றும் 9 யூனியன் பிரதேச பிரிவுகளுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இது தேர்தல் செயல்பாட்டில் இருந்து தேவையற்ற தன்னிச்சையான செயல்களை அகற்றும்.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலில் வெளிப்படைத் தன்மை அவசியமான ஒன்று. இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையில், எங்களது கவலை தொடரும். இந்திய தேசிய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில், கட்சியின் தலைவருக்கான தேர்தலில் வெளிப்படைத்தன்மை, நேர்மை குறித்து அக்கறை கொண்டுள்ளோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020-இல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, கட்சியில் மாற்றங்களை மேற்கொள்ளக்கோரி கடிதம் எழுதிய 23 தலைவர்கள் குழுவில் தரூர், திவாரி ஆகியோர் அடங்குவர். கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து தரூர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா? இன எதிரிகளே - பொங்கி எழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, தமிழகத்தில் எங்கெல்லாம் வெயில் சுட்டெரிக்கும் - இன்றைய வானிலை
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
Chennai Corporation: ஆப்படித்த சென்னை மாநகராட்சி - கட்டணங்கள் கிடுகிடுவென உயர்வு, 300% ரொம்ப ஓவர் இல்லையா?
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
SEBI Chairman: அதானி சர்ச்சைகளில் சிக்கிய மாதபி பூரி புச் - செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
Embed widget