மேலும் அறிய

மூத்த தலைவர்கள் நீக்கம்..ஸ்கெட்ச் போட்டு தூக்கும் சரத் பவார்..என்சிபியில் ரிப்பீட்டாகும் சிவசேனா எபிசோட்

சரத் பவாருக்கு நெருக்கமானவராக கருதப்படும் ஜெயந்த் பாட்டிலை மகாராஷ்டிரா மாநில தலைவர் பதவியில் இருந்து பிரபுல் படேல் நீக்கிய நிலையில், சரத் பவார் அதற்கு பதிலடி தந்துள்ளார்.

மகாராஷ்டிர அரசியலில் தொடர் திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்த தேசியவாத காங்கிரஸ், அக்கட்சியின் தேசிய தலைவர் சரத் பவாரின் ஒப்புதலின்றி, ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணி அரசாங்கத்தில் இணைந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார் நேற்று துணை முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். அவருடன், அக்கட்சியை சேர்ந்த 8 மூத்த தலைவர்கள், அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

மூத்த தலைவர்கள் அதிரடி நீக்கம்:

பாஜக அரசாங்கத்தில் இணைந்த மூத்த தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சரத் பவார் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி, பிரபுல் படேல் மற்றும் சுனில் தட்கரே ஆகியோரை தேசியவாத காங்கிரஸில் இருந்து சரத் பவார் நீக்கியுள்ளார். சமீபத்தில்தான், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக பிரபுல் படேல் நியமிக்கப்பட்டார். கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக பதவி வகிப்பவர் சுனில் தட்கரே.

சரத் பவாருக்கு நெருக்கமானவராக கருதப்படும் ஜெயந்த் பாட்டிலை மகாராஷ்டிரா மாநில தலைவர் பதவியில் இருந்து பிரபுல் படேல் நீக்கிய நிலையில், சரத் பவார் அதற்கு பதிலடி தந்துள்ளார். முன்னதாக, அஜித் பவாரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதற்காக மண்டல  தலைவர் பதவியில் இருந்த நரேந்திர ரத்தோர், அகோலா நகர மாவட்டத் தலைவர் விஜய் தேஷ்முக், தற்போது அமைச்சராக பதவியேற்றுள்ள சிவாஜிராவ் கர்ஜே ஆகியோரை சரத் பவார் நீக்கியிருந்தார்.

அதேபோல, ஆளும் அரசாங்கத்தில் இணைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களுக்கு எதிராக சரத் பவார் ஆதரவு அணி, பதவி நீக்க நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், இந்த பதவி நீக்க நோட்டீஸ் செல்லாது என அஜித் பவார் கூறியுள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "எங்களில் 9 பேருக்கு எதிராக நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த நோட்டீசுக்கு எந்த மதிப்பும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எங்களுடன் கட்சி உள்ளது" என்றார்.

என்சிபியில் ரிப்பீட்டாகும் சிவசேனா எபிசோட்:

தங்களின் ஒப்புதலுக்கு பிறகே, அஜித் பவார், பாஜக கூட்டணியில் இணைந்ததாக கூறப்படுகிறதே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சரத் பவார், "இது அற்பத்தனமான பேச்சு. அறிவுத்திறன் குறைந்தவர்களால்தான் இதைச் சொல்ல முடியும். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை ஊக்குவிக்க போகிறேன். சில தலைவர்கள் செய்ததைக் கண்டு அவர்கள் ஏமாற்றமடையக் கூடாது" என்றார்.

சமீபத்தில், சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து, உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை சேர்ந்த தலைவர்களை அதிரடியாக நீக்கியது. அதற்கு பதிலடியாக, ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார். தற்போது, இதேபோன்ற சம்பவம், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் நடந்து வருகிறது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Breaking News LIVE, July 5: தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
Breaking News LIVE, July 5: தமிழக பகுஜன் சமாஜ்வாதி ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Embed widget