காட்டுப்பாதையில் ஸ்கூட்டியுடன் மோதிய பெண்.. உடைந்த தந்தம்.. தெறித்து ஓடிய யானை
திடீரென சாலையில் குறுக்கே யானை ஒன்று ஓடியுள்ளது. நிகிதா சுதாரிப்பதற்குள் அவரது இரு சக்கர வாகனம் யானையின் மீது மோதியுள்ளது. இதில் தவறி விழுந்த நிகிதா யானை கண்டதும் அலறிக்கொண்டே அங்கிருந்து ஓடியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது யானை மோதிய நிலையில் அதன் தந்தம் உடைந்தது. இந்த சம்பவத்தில் வாகன ஓட்டி காயமடைந்தார். இதுதொடர்பாக புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த சம்பவம் உத்தரகாண்டின் காதிமா பகுதியில் நடந்துள்ளது. காயமடைந்த யானையை தேடும் பணி நடந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்த பெண் கதிமாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். அவரது பெயர் நிகிதா கப்ரி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ள நிலையில் தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த நாளில் காலை 7 மணியளவில் நிகிதா கப்ரி தனது ஸ்கூட்டியில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் பாதை பன்பாசா மற்றும் சாகர்பூருக்கு இடையேயான அடர்ந்த வனப்பகுதியாகும். இப்படியான நிலையில் திடீரென சாலையில் குறுக்கே யானை ஒன்று ஓடியுள்ளது. நிகிதா சுதாரிப்பதற்குள் அவரது இரு சக்கர வாகனம் யானையின் மீது மோதியுள்ளது. இதில் தவறி விழுந்த நிகிதா யானை கண்டதும் அலறிக்கொண்டே அங்கிருந்து ஓடியுள்ளார். பின் சிறிது தூரத்தில் அவர் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
एक ऐसा एक्सीडेंट जिससे लोग आश्चर्यचकित हो रहे हैं और हस 🤣 भी रहे है
— Shailesh Verma (@shaileshvermasp) May 20, 2026
एक स्कूटी सवार शिक्षिका सड़क पार कर रहे हाथी से टकरा गई इस टक्कर से हाथी का दांत टूट कर गिर गया।
शिक्षिका और उसकी स्कूटी सड़क पर गिर गई ,
गुजर रहे लोगों ने शोर मचाया तो हाथी जंगल वापस चला गया
ये एक्सीडेंट… pic.twitter.com/a7rVO3UNlu
இதற்கிடையில் இரு சக்கர வாகனம் மோதியதால் கடும் கோபமடைந்த அந்த யானை அதனை சேதப்படுத்த முயன்று கடுமையாக தாக்கியுள்ளது. ஆனால் யானையின் தந்தம் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டியின் முன்பக்கத்தில் சிக்கியது. அதனை வெளியே எடுக்க முயன்ற நிலையில் தந்தத்தின் ஒரு பகுதி உடைந்துள்ளது. அதன் இரண்டு துண்டுகள் சாலையில் கிடந்தது.
யானை ஸ்கூட்டரை இரண்டு மூன்று முறை பலமாகத் தாக்கிய நிலையில் அதன் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்தது. தும்பிக்கை உடைந்ததும் பயந்துபோன யானை மீண்டும் காட்டுக்குள் ஓடியுள்ளது. இதற்கிடையில் நிகிதா மயங்கி கிடந்ததைக் கண்டு அப்பகுதி வழியாக வந்த சக ஆசிரியர்கள் உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுதொடர்பாக அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சாகர்பூர் காவல் நிலையத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையின் தந்தத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர். யானைகள் மற்றும் பிற வனவிலங்குகளைக் கண்காணிப்பதற்காக சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் இரண்டு மறைவு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் இரவும் பகலும் பயணிக்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் கவனமாக செல்ல வேண்டும் என வன அதிகாரி தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















