மேலும் அறிய

Schools Reopening : ஹரியானா, குஜராத் மாநிலங்களில் மீண்டும் திறக்கப்படுகின்றன பள்ளிகள்..!

கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்த காரணத்தால் ஹரியானா மற்றும் குஜராத்தில் அடுத்த வாரம் முதல் பள்ளிகளை திறக்கப்படும் என்று அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக முதல் அலையில் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டது. ஊரடங்கு, கடைகள் திறப்பிற்கு கட்டுப்பாடுகள், மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது கொரோனா பரவல் நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரம் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டு போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டாலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில், ஹரியானா மாநில அரசு ஜூலை 16-ந் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள் எழுத்துப்பூர்வமான அனுமதி கட்டாயம் தேவை என்றும் அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.


Schools Reopening : ஹரியானா, குஜராத் மாநிலங்களில் மீண்டும் திறக்கப்படுகின்றன பள்ளிகள்..!

மேலும்,6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 23-ந் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. அனைத்து பள்ளிகளும், பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகளை பின்னர் தொடங்கிக்கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

பள்ளிகளில் நேரில் வந்து பாடம் பயில தயங்கும் மாணவர்களுக்காக இணையதள வகுப்புகளும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. அதில் வகுப்புகளை தொடர விரும்பும் மாணவர்கள் தங்களது வகுப்புகளை தொடரலாம் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.


Schools Reopening : ஹரியானா, குஜராத் மாநிலங்களில் மீண்டும் திறக்கப்படுகின்றன பள்ளிகள்..!

ஹரியானா அரசைப் போலவே, குஜராத் மாநில அரசும் வரும் 15-ந் தேதி முதல் மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களை திறக்க முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை அம்மாநில அரசு நேற்று வெளியிட்டது. குஜராத் மாநிலத்தில் 12ம் வகுப்பு மாணவர்கள், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களுக்கு வரத்தயங்கும் மாணவர்களின் நலன் கருதி இணையவழி வகுப்புகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும், மாணவர்களுக்கான வருகைப்பதிவேடு தற்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும் அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி கூறியுள்ளார். குஜராத்தில் 50 சதவீத வருகையுடன் கல்லூரிகளில் விழாக்கள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் மாணவர்கள் தாங்களாக விருப்பப்பட்டால் கல்லூரிகளுக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்திலும் நாளை மறுநாள் முதல் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.  

தமிழ்நாட்டில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு பிறகே பள்ளிகள் திறப்பு குறித்த முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
Embed widget