மேலும் அறிய

சபரிமலை: தங்கக் கவசங்கள் மாயமான வழக்கில் முன்னாள் தலைவர் ஏ.பத்மகுமார் குற்றவாளியாக சேர்ப்பு! பரபரப்பு விசாரணை!

தங்கக் கவசங்களில் தங்கம் மாயமானது தொடா்பான 2வது வழக்கிலும், திருவிதாங்கூா் தேவசம் போர்டின் முன்னாள் தலைவா் ஏ.பத்மகுமாா் குற்றஞ்சாட்டப்பட்டவராக சோ்க்கப்பட்டுள்ளாா்.

சபரிமலை கோயிலில் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்களில் தங்கம் மாயமானது தொடா்பான 2வது வழக்கிலும், திருவிதாங்கூா் தேவசம் போர்டின் முன்னாள் தலைவா் ஏ.பத்மகுமாா் குற்றஞ்சாட்டப்பட்டவராக சோ்க்கப்பட்டுள்ளாா்.


சபரிமலை: தங்கக் கவசங்கள் மாயமான வழக்கில் முன்னாள் தலைவர் ஏ.பத்மகுமார் குற்றவாளியாக சேர்ப்பு! பரபரப்பு விசாரணை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத் தகடுகள் மாயமான விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள சபரிமலை உள்ள ஐயப்பன் கோயில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றக் கோயில். இந்த கோயிலின் ஐயப்பன் சன்னதிக்கு முன்பு துவாரபாலகர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலைக்கு மேல் சுமார் 42 கிலோ எடை உடைய தங்க முலாம் பூசிய தகடுகள் பொருத்தப்பட்டு இருக்கும்.

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவாரபாலகர் சிலையில் பொருத்தப்பட்டிருந்த தங்க தகடுகள் மீது தங்க முலாம் பூசுவதற்காக சபரிமலை நன்கொடையாளராக இருந்த உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் மூலம் சென்னையில் உள்ள SMAR CREATION நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தது திருவிதாங்கூர் தேவசம் போர்டு. பணிகள் முடிந்து மீண்டும் சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டபோது 38 கிலோ தங்கம் குறைந்து துவார பாலகர் சிலை தங்க தகடுகள் 4.52 கிலோ மட்டுமே இருந்துள்ளது.

இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம்சாட்டு எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்டது. மேலும் இந்த விசாரணையின் அறிக்கையை 6 வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த நிலையில், தங்கம் மாயமானது குறித்து கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி, SID அதிகாரிகள் உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சபரிமலை கருவறையின் இருபுறமும் உள்ள துவாரபாலகன் சிலைகள் தங்க முலாம் பூசப்படவில்லை.


சபரிமலை: தங்கக் கவசங்கள் மாயமான வழக்கில் முன்னாள் தலைவர் ஏ.பத்மகுமார் குற்றவாளியாக சேர்ப்பு! பரபரப்பு விசாரணை!

அவை செப்பு தகடுகள். ஆனால்,சபரிமலை கோயில் கருவறை முன் உள்ள துவாரபாலகன் சிலைகள் பீடங்கள் தங்கமுலாம் பூசப்பட்டவை என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து தங்க தகடுகள் பதிக்கப்பட்டவை என்பதை உறுதி செய்யும் ஆவணங்களை திருவதாங்கூர் தேவசம் போர்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதனை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் உன்னிகிருஷ்ணன், முராரி பாபு, முன்னாள் தேவசம்போர்டு செயலர் ஜெயஸ்ரீ, உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில், கோயில் கருவறைக் கதவுகளின் தங்கக் கவசங்களில் தங்கம் மாயமானது தொடா்பான முதல் வழக்கில், திருவிதாங்கூா் தேவசம் போர்டு முன்னாள் தலைவா் ஏ.பத்மகுமாா் கடந்த மாதம் கைது செய்யப்பட்டாா். இப்போது புதிய ஆதாரங்களின் அடிப்படையில், துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்களில் தங்கம் மாயமானது தொடா்பான இரண்டாவது வழக்கிலும் பத்மகுமாா் குற்றஞ்சாட்டப்பட்டவராக சோ்க்கப்பட்டுள்ளாா். இந்த வழக்கு தொடா்பாக பத்மகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க, கொல்லம் சிறப்பு நீதிமன்றத்தில் எஸ்ஐடி விரைவில் மனு தாக்கல் செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இதனிடையே வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பத்மகுமாரின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது.


சபரிமலை: தங்கக் கவசங்கள் மாயமான வழக்கில் முன்னாள் தலைவர் ஏ.பத்மகுமார் குற்றவாளியாக சேர்ப்பு! பரபரப்பு விசாரணை!

2 வழக்குகளின் விசாரணையை முடிக்க எஸ்ஐடி-க்கு கேரள உயா்நீதிமன்றம் கூடுதலாக 6 வார காலம் அவகாசம் வழங்கியுள்ளது. இதுவரை எஸ்ஐடி-இன் விசாரணை திருப்தி அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா். இந்த வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட தேவசம் முன்னாள் நிா்வாக அதிகாரி எஸ். ஸ்ரீகுமாரின் முன்ஜாமீன் மனுவை கேரள உயா்நீதிமன்றம் நிராகரித்தது.இந்த 2 வழக்குகள் தொடா்பாக, முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உண்ணிகிருஷ்ணன் போற்றி, தேவஸ்வம் முன்னாள் தலைவா்கள் என்.வாசு, ஏ.பத்மகுமாா் உள்பட 6 பேரை எஸ்ஐடி இதுவரை கைது செய்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Embed widget