மேலும் அறிய

சபரிமலை ஐயப்பன் கோவில்: புதிய மேல்சாந்திகள் தேர்வு! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறந்திருக்கும். அதன்படி தற்போது ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறந்திருக்கும். அதன்படி தற்போது ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். சபரிமலை கோவில் நடைதிறக்கப்படும் முதல் நாளே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய வருகை புரிவர். உலகப்புகழ்பெற்ற இக்கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கிலான பக்தர்கள் வருகை புரிகின்றனர். ஐயப்பனை தரிசிப்பதற்காக சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை என  ஒரு மண்டலம் எனும் 48 நாள்கள் விரதத்தைக் கடைப்பிடித்து, இருமுடி கட்டி சபரிமலை சன்னிதானத்துக்கு வருவது வழக்கம்.


சபரிமலை ஐயப்பன் கோவில்: புதிய மேல்சாந்திகள் தேர்வு! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

மற்ற கோவில்கள் போல ஐயப்பன் கோவில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது.  இந்த கோவிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். குறிப்பாக மாதாந்திர பூஜைக்காகவும் ஓணம், விஷு, பிரதிஷ்டை உள்ளிட்ட சிறப்பு தினங்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவது கூடுதல் சிறப்பு.

தற்போது கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்தார். நேற்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று முதல் வருகிற 22-ந்தேதி வரை வழக்கமான பூஜைகள் நடைபெறும். இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் சபரிமலை ஐயப்பன் கோவில் மற்றும் மாளிகைபுரம் கோவிலுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு காலை 8 மணிக்கு நடைபெற்றது. ஐயப்பன் கோவிலுக்கு 14 பேரும், மாளிகைபுரம் கோவிலுக்கு 13 பேரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டனர்.


சபரிமலை ஐயப்பன் கோவில்: புதிய மேல்சாந்திகள் தேர்வு! யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

அவர்களின் பெயர்கள் தனித்தனி குடங்களில் போடப்பட்டு குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது. ஐயப்பன் கோவில் மேல்சாந்தி தேர்வுக்கான சீட்டை பந்தளம் அரண்மனை பிரதிநிதி காஷ்யப் வர்மா எடுத்தார். அதில் சபரிமலை மேல்சாந்தியாக சாலக்குடியை சேர்ந்த பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர் ஆரேஸ்வரம் ஸ்ரீதர்மசாஸ்தா ஆலயத்தின் மேல்சாந்தியாக உள்ளார்.இதேபோல் மாளிகைபுரம் கோவில் மேல்சாந்தி தேர்வுக்கான சீட்டை பந்தளம் அரண்மனை பிரதிநிதியான மைதிலி என்ற சிறுமி எடுத்தார். அதில் கொல்லம் மய்யநாட்டை சேர்ந்த மனு நம்பூதிரி மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய மேல்சாந்திகள் இருவரும் நடப்புஆண்டு மண்டல பூஜை சீசன் முதல் ஒரு வருட காலத்திற்கு சபரிமலையில் தங்கியிருந்து பூஜைகள் மற்றும் திருப்பணிகளை மேற்கொள்வார்கள். மண்டல பூஜை தொடங்குவதற்கு முன்னதாக அவர்கள் மேல்சாந்தியாக பொறுப்பேற்பார்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Report: முன்கூட்டியே உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி; அடிச்சு துவைக்கப் போகும் கனமழை; எங்கெங்க தெரியுமா.?
முன்கூட்டியே உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி; அடிச்சு துவைக்கப் போகும் கனமழை; எங்கெங்க தெரியுமா.?
IND Vs AUS 1st ODI Toss: முதல் ஒருநாள் போட்டி; இந்தியா பேட்டிங் - கலக்குவார்களா ரோஹித் ஷர்மா, கோலி - ரசிகர்கள் ஆர்வம்
முதல் ஒருநாள் போட்டி; இந்தியா பேட்டிங் - கலக்குவார்களா ரோஹித் ஷர்மா, கோலி - ரசிகர்கள் ஆர்வம்
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
TN Rain Alert: ஆறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. தீபாவளிக்கும் மழை இருக்கு! வானிலை மையம் கொடுத்த அப்டேட்
TN Rain Alert: ஆறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. தீபாவளிக்கும் மழை இருக்கு! வானிலை மையம் கொடுத்த அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய் போட்டியிடும் தொகுதி! V-ல் ஆரம்பிக்கும் 9 இடங்கள்! ஜோசியர் கொடுத்த ஐடியா
கடலை மிட்டாய் to அர்ஜூனா விருது! ரியல் பைசன் காளமாடன்! யார் இந்த மணத்தி கணேசன்?
வருமானம் இல்லா கிராமம் முன்மாதிரி கிராமமான அதிசயம் வியந்த மாநில அதிகாரிகள் | Villupuram Village
சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் திணறும் விக்கிரவாண்டி TOLLGATE-ஐ கடந்த 63000 கார்கள் | Vikravandi
CM Stalin Slams BJP | ”என்ன சாதிக்க போறீங்கா? கூட்டணிக்கு வந்தா நல்லவர்களா” முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: முன்கூட்டியே உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி; அடிச்சு துவைக்கப் போகும் கனமழை; எங்கெங்க தெரியுமா.?
முன்கூட்டியே உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி; அடிச்சு துவைக்கப் போகும் கனமழை; எங்கெங்க தெரியுமா.?
IND Vs AUS 1st ODI Toss: முதல் ஒருநாள் போட்டி; இந்தியா பேட்டிங் - கலக்குவார்களா ரோஹித் ஷர்மா, கோலி - ரசிகர்கள் ஆர்வம்
முதல் ஒருநாள் போட்டி; இந்தியா பேட்டிங் - கலக்குவார்களா ரோஹித் ஷர்மா, கோலி - ரசிகர்கள் ஆர்வம்
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
TN Rain Alert: ஆறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. தீபாவளிக்கும் மழை இருக்கு! வானிலை மையம் கொடுத்த அப்டேட்
TN Rain Alert: ஆறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. தீபாவளிக்கும் மழை இருக்கு! வானிலை மையம் கொடுத்த அப்டேட்
Vijay Visit Karur: மக்களே.. கரூருக்குச் செல்லப்போகும் விஜய்... எப்போது தெரியுமா?
Vijay Visit Karur: மக்களே.. கரூருக்குச் செல்லப்போகும் விஜய்... எப்போது தெரியுமா?
Bihar Election: முதலமைச்சரை ஓரங்கட்டத் துடிக்கும் பாஜக.. முடிவுக்கு வருகிறதா நிதிஷ் சாம்ராஜ்யம்?
Bihar Election: முதலமைச்சரை ஓரங்கட்டத் துடிக்கும் பாஜக.. முடிவுக்கு வருகிறதா நிதிஷ் சாம்ராஜ்யம்?
IND vs AUS: சம்பவம்தான்.. இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி எத்தனை மணிக்கு? எப்படி பாக்குறது?
IND vs AUS: சம்பவம்தான்.. இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி எத்தனை மணிக்கு? எப்படி பாக்குறது?
Diwali 2025: ரெடி.. 1353 ஆம்புலன்ஸ்கள்.. தீபாவளிக்காக தமிழக அரசு ஏற்பாடு!
Diwali 2025: ரெடி.. 1353 ஆம்புலன்ஸ்கள்.. தீபாவளிக்காக தமிழக அரசு ஏற்பாடு!
Embed widget