மேலும் அறிய

`அரசியலமைப்பு, மதச் சுதந்திரம் என்ற பெயரில் மதவெறி வளர்கிறது!’ - ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆண்டு அறிக்கை!

2022ஆம் ஆண்டின் ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, அந்த அறிக்கையில் நாட்டில் `அரசியலமைப்பு, மதச் சுதந்திரம்’ என்ற பெயரில் `மதவெறி’ வளர்வதாகத் தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டின் ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. அதில், நாட்டில் `அரசியலமைப்பு, மதச் சுதந்திரம்’ என்ற பெயரில் `மதவெறி’ வளர்வதாகவும், `ஒரு குறிப்பிட்ட சமூகம் அரசு இயந்திரத்திற்குள் நுழைவதற்காக நீண்ட செயல்திட்டத்தைக் கொண்டிருப்பதாகவும்’ ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. `இந்த முயற்சிகளை முறியடிக்க மொத்த பலத்தையும் வெளிப்படுத்த வேண்டும்’ என்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், `நாட்டில் பல்வேறு பகுதிகளில் மதவெறி தலைதூக்கி வருகிறது. கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் இந்து அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்களின் கொலைகள் இதன் உதாரணங்கள். இந்தக் கொலைகள் வகுப்புவாத சிந்தனை, பேரணி, போராட்டம், சமூக ஒழுக்க மீறல் முதலானவற்றை அரசியலமைப்பு மற்றும் மதச் சுதந்திரத்தின் பெயரால் மேற்கொண்டு, இதன்மூலம் சிறிய விவகாரங்களுக்காக வன்முறையைத் தூண்டுவதையும், சட்டவிரோத செயல்களை ஊக்குவிப்பதையும் வெளிப்படுத்துகின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளது. 

தொடர்ந்து இந்த அறிக்கையில், `ஒரு குறிப்பிட்ட சமூகம் அரசு இயந்திரத்திற்குள் நுழைவதற்காக நீண்ட கால செயல்திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. எண்களைப் பெருக்குவதன் அடிப்படையில், தங்கள் நோக்கத்தை அடைய எந்த வழிமுறையையும் பயன்படுத்த தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

`அரசியலமைப்பு, மதச் சுதந்திரம் என்ற பெயரில் மதவெறி வளர்கிறது!’ - ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆண்டு அறிக்கை!

கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் தங்கள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தங்கள் ஹிஜாப் உடை மீத விதிக்கப்பட்டிருக்கும் தடையை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் சூழலில் இப்படியான அறிக்கை வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஒவ்வொரு ஆண்டும், தங்கள் ஓராண்டின் பணிகள், அடுத்தகட்ட திட்டங்கள் முதலானவற்றைப் பற்றி முடிவுகள் மேற்கொள்ள அகில பாரதிய பிரதிநிதி சபா என்ற பெயரில் கூட்டம் நடைபெறும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பாளர்களும், மூத்த தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். 

தங்கள் ஆண்டு அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மதமாற்ற விவகாரங்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளது. 

`பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் முதலான பகுதிகளில் இந்துக்களை மதமாற்றும் திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தச் சவாலுக்கு நீண்ட நெடிய வரலாறு இருந்தாலும், தற்போது மக்களைக் குழுக்களாக மதமாற்றுவதற்குப் புதிய வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. இந்து சமூகத்தின் தலைமை தற்போது விழிப்பாக இருப்பது உண்மை என்ற போதும், இதனை எதிர்த்து திட்டமிட்ட முறையில் முயற்சிகளை மேற்கொள்வது அவசியம் ஆகிறது’ என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

`அரசியலமைப்பு, மதச் சுதந்திரம் என்ற பெயரில் மதவெறி வளர்கிறது!’ - ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆண்டு அறிக்கை!

இந்து சமூகம் ஒருபக்கம் விழிப்புணர்வு பெற்று, சுயமரியாதையுடன் எழுந்து நின்றாலும், தனைப் பொருத்துக் கொள்ளாமல் சமூகத்தில் பதட்டமான சூழலை உருவாக்க முயல்வதாகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. 

மேற்கு வங்கத் தேர்தல்களுக்குப் பிறகு நிகழ்ந்த வன்முறை, பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடியின் வாகனம் நிறுத்தப்பட்டது முதலானவற்றைப் பற்றி, இந்த அறிக்கையில், `கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம், வங்காளத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் அரசியல் விரோதம், மதவெறி ஆகியவற்றின் விளைவு ஆகும்’ எனவும், `விவசாயிகள் போராட்டம் என்ற போதும் மாண்புமிகு பிரதமரின் வாஅனத்தை நிறுத்த வைத்தது மிகவும் கண்டிக்கத்தக்க நிகழ்வு ஆகும்’ எனவும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Embed widget