மேலும் அறிய

RSS : பெண்களுக்கு முக்கிய பதவிகள்.. அமைப்பில் பெரிய மாற்றங்கள்.. தேர்தலுக்கு முன்பு வியூகம் அமைக்கும் ஆர்.எஸ்.எஸ்..

மூன்று நாள்கள் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில், பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. அதுமட்டும் இன்றி ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பெண்களின் பங்கேற்பு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

பாஜகவின் தாய் அமைப்பாக இருப்பது ஆர்.எஸ்.எஸ். இதன் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் ஹரியானா மாநிலம் பானிப்பட்டில் நேற்று தொடங்கியது.

மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி:

அதில், மறைந்த சமாஜ்வாதி கட்சியின் (SP) நிறுவனர் முலாயம் சிங் யாதவ், சோசலிஸ்ட் தலைவர் சரத் யாதவ், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மற்றும் கடந்த ஓராண்டில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மூன்று நாள்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில், பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. அதுமட்டும் இன்றி ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பெண்களின் பங்கேற்பு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நாடு முழுவதிலும் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடைய 34 அமைப்புகளைச் சேர்ந்த 1400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர். அடுத்தாண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்த ஓராண்டுக்கான அமைப்பின் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான கூட்டம் இதுவாகும்.  

பெண்களுக்கு பதவிகள்:

பொதுத் தேர்தலுக்குப் முன் நடக்கும் இந்த கடைசி வருடாந்திரக் கூட்டத்தில் அமைப்பில் எடுக்கப்பட உள்ள முக்கிய மாற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேற்கொள்ள உள்ள முக்கிய மாற்றங்கள், தேர்தல் ரீதியாக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப் பிரதேசம், பீகாரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் நேரடியான தாக்கங்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கபடுமா என கேட்கப்பட்டதற்கு பதில் அளித்து பேசிய ஆர்.எஸ்.எஸ் இணை பொதுச் செயலாளர் மன்மோகன் வைத்யா, "இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து வருகிறோம். குறைந்தபட்சம் விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்பதை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்தியா முழுவதும் 71,355 இடங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும், 2025ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் இடங்களை அடைய இலக்கு வைத்துள்ளோம். அதாவது RSS-இன் 100வது ஆண்டாகும். தொற்றுநோய்க்குப் பிறகு ‘ஷாகாஸ்’ (ஆர்.எஸ்.எஸ்ஸின் மிகச்சிறிய பிரிவு) குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். நாட்டை 911 மாவட்டங்களாகப் பிரித்துள்ளதால், 901 மாவட்டங்களில் எங்களது ஷாகாக்கள் அல்லது நேரடியாகப் பணியாற்றுகிறோம்.  911 மாவட்டங்களிலும் இதை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் இந்த நூற்றாண்டு விழாவில் அமைப்பின் பணியை அதிகரிக்கும் வகையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1300க்கும் மேற்பட்ட பிரசாரக்களும், விஸ்தாரக்களும் மக்களைச் சென்றடைவார்கள்.

2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், ‘ஆர்எஸ்எஸ்ஸில் சேருங்கள்’ என்ற திட்டத்தின் மூலம் அமைப்பில் சேர விரும்பும் 7,25,000 பேரின் விண்ணப்பங்களை பெற்றுள்ளோம். இவர்களில் பெரும்பாலானவர்கள் 20 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்" என்றார்.

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget