மேலும் அறிய

மீண்டும் பூதாகரமாக வெடிக்கும் ரபேல் விவகாரம்: நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்புமா?

ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க பிரான்ஸ் அரசு தனி நீதிபதியை நியமித்ததை அடுத்து, இந்தியாவில் அந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்திய விமானப் படைக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து ரூபாய் 59 ஆயிரம் கோடி மதிப்பில் ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தொடக்கம் முதல் எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இதுதொடர்பாக, அந்த நாட்டின் மீடியாபார்ட் என்ற செய்தி நிறுவனம் மேற்கொண்ட புலன் விசாரணையில், ரபேல் ஒப்பந்தத்திற்காக இந்தியாவில் உள்ள தரகருக்கு பல கோடி ரூபாய் லஞ்சமாக அளிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது.

மேலும், பிரான்சில் உள்ள ஷெர்பா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த நாட்டு அரசை வலியுறுத்தியது. இதையடுத்து, ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நீதி விசாரணை நடத்துவதற்கு அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான தனி நீதிபதியையும் அந்த நாட்டு அரசு நியமித்துள்ளது.


மீண்டும் பூதாகரமாக வெடிக்கும் ரபேல் விவகாரம்: நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்புமா?

பிரான்ஸ் அரசு ரபேல் போர் ஒப்பந்த விவகாரம் குறித்து விசாரிக்க தனி நீதிபதியை நியமித்ததை அடுத்து, காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்தது தற்போது தெளிவாக தெரிகிறது. இந்த ஒப்பந்தம் குறித்து நீதிவிசாரணை நடத்த பிரான்ஸ் அரசு உத்தரவிட்டதன் மூலம் காங்கிரஸ் மற்றும் ராகுல்காந்தி ஆகியோரின் குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது. இதுதொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இது காங்கிரஸ் – பா.ஜ.க. மோதல் கிடையாது. இது நாட்டின் பாதுகாப்பு விவகாரம் என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக நிரூபர்களுக்கு பேட்டி அளித்த பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் சம்பித்பத்ரா, ராகுல்காந்தியின் நடவடிக்கையை பார்க்கையில் ரபேலைத் தயாரிக்கும் டசால்ட் நிறுவனத்திற்கு எதிரான போட்டி நிறுவனங்களின் கைப்பாவையாக அவர் பயன்படுத்தப்படுகிறார் என்று கூறினால் அது மிகையல்ல. இந்த விவகாரத்தில் அவர் தொடக்கம் முதல் பொய் கூறி வருகிறார். அவர் ஏஜெண்டைப் போல அல்லது போட்டி நிறுவனத்தில் இருக்கும் நபர் போல நடந்து கொள்கிறார்.



மீண்டும் பூதாகரமாக வெடிக்கும் ரபேல் விவகாரம்: நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்புமா?

ராகுல்காந்தியும், அவரது கட்சியினரும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருவது நாட்டை வலுவிழக்கச் செய்யும் முயற்சி. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பொய் மற்றும் தவறான தகவல்களை காங்கிரஸ் பரப்பி வருகிறது. பிரான்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறிய புகாரை பற்றி விசாரிக்கவே பிரான்ஸ் அரசு தனி நீதிபதியை நியமித்துள்ளது. இதை ஊழல் விவகாரமாக பார்க்க கூடாது என்றார்.

கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பது. தடுப்பூசி பற்றாக்குறை குறித்து வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காத்திருந்தன. இந்த சூழலில், வரும் 19-ந் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு விவகாரம், பிரான்ஸ் அரசு தனி நீதிபதியை நியமித்துள்ளது குறித்து காங்கிரஸ் கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளது.

கடந்த மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியில் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் எச்.ஏ.எல். மற்றும் டசால்ட் நிறுவனம் இடையே தான் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, முந்தைய ஒப்பந்தத்திற்கு பதிலாக ரிலையன்ஸ் மற்றும் டசால்ட் நிறுவனம் இடையே ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்தானது. நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் எந்த அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்ததற்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Embed widget